Memories

Sunday, September 25, 2011

அடுத்து வரும் பதிவுகளில்....


அடுத்தடுத்த பல பதிவுகளில் கான்செர் பற்றி எழுத இருக்கிறேன். சிலர் என்னிடம் சொன்னார்கள், கான்செர் பற்றி நினைப்பதையும் அதை பற்றி படிப்பதையும் விட்டு விடு என்று. என்னுடைய நல்லதுக்காக இது சொல்லப் பட்டாலும், இது வரை நான் தெரிந்து கொண்டதை எழுதுவது என்னுடைய கடமை என்று எண்ணுகிறேன். சுமார் ஆறு எழு மாதங்களுக்கு முன்னர் அந்த நோயைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இப்போது அப்படியல்ல. மருத்துவம் ஆங்கில மொழியிலேயே சொல்லப் பட்டிருக்கிறது, அதை தமிழில் சொல்வது எளிது அல்ல, ஆனால் என்னால் முயன்றதை இங்கு செய்கிறேன். ஒருமுறை பிரமு மாமா சொன்னார்கள்: "கான்செர் கொல்லாது, ஆனால் தாமதம் கொன்று விடும்" என்று. என்னுடைய பதிவுகள் அந்தத் தாமதத்தை எங்கோ இருக்கிற யாருக்காவது போக்கினால், இந்த முயற்சி பயனுடையதாக ஆகும்.
கான்செர் என்கிற வார்த்தை மனதில் நிறைய வலியை உண்டாக்குகிறது, வேதனை உண்டாக்குகிறது என்றாலும் அதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
உங்களது எண்ணங்களை கருத்துக்கள் இணைப்பில் ("கருத்துக்கள்"-ஐ சொடுக்கி) எழுதுங்கள்.


No comments:

Post a Comment