Memories

Friday, September 30, 2011

சமீபத்தில் ரசித்த படம் - உள்ளத்தை அள்ளித்தா



சுமார் 14 வருடங்களுக்கு முன் வந்த படம், இப்போது பார்த்தாலும் சிரிக்க வைக்கிறது. 

காமெடிக்கு கார்த்திக், கௌண்டமணி ஜோடி பத்தாது என்றால், மணிவண்ணன், ஜெய்கணேஷ், செந்தில், பாண்டு என்று நகைச்சுவை கதாபாத்திரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரு கட்டத்தில் எல்லா கதாபாத்திரங்களும் ஒரே வீட்டுக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவது இப்பவும் வாய் விட்டு சிரிக்க வைகிறது. "சுட்ட்ட்டு புடுவேன்" என்று விறைப்பாக வரும் ஜெய்கணேஷ் கடைசியில் "ரொட்டி சுடுவேன்" என்று அந்தர் பல்டி அடிப்பது நாம் முதலில் இருந்தே எதிர்பார்த்தது.

கார்த்திக் (ராஜா) மிகவும் கண்டிப்பான அப்பா ஜெய்கணேஷின் பிள்ளை. காலையில் எழுந்திருப்பதில் இருந்து பாத்ரூம், சாப்பாடு, என்ன உடுத்துவது என்று சகலமும் அப்பாவின் இஷ்டப்படி தான். ஜெய்கணேஷ் ரம்பாவை கார்த்திக்குத் தேர்வு செய்கிறார். ஆனால் போட்டோ மாறிப் போக ஏதோ ஒரு போட்டோ கார்த்திக்குக் கிடைக்கிறது. அதனால் வீட்டை விட்டு ஓடிப் போகிறார் ஊட்டிக்கு. அங்கு கௌண்டமணி (வாசு - கார்த்திக் ஆங்காங்கு செல்லமாக "வாச்சு" என்று கூப்பிடுகிறார்)  சிநேகிதம் கிடைக்கிறது. அங்கு ஊட்டியில் ரம்பாவும் இருக்கிறார். அவர் தான்  தனக்குப் பார்க்கப் பட்ட பெண் என்று தெரியாமல் ஜொள்ளாக விட்டுத் தள்ளி பார்க்கும் வேலை எல்லாம் இழக்கிறார். அதற்க்கு ஈடாக ரம்பாவைக் கடத்தி அவர் அப்பாவிடமிருந்து பணம் பறிக்க எண்ணுகிறது கார்த்திக், கௌண்டமணி கோஷ்டி.       

இவர்கள் கடத்தும் முன் வேறொரு கும்பல் கடத்துகிறது ரம்பாவை. "நாங்க செய்யனுண்டா அது" என்று சொல்லித் துரத்தி ரம்பாவை மீட்கிறார்.  ரம்பாவின் அப்பா மணிவண்ணன் கார்த்திக்கை டிரைவராக மற்றும் பாடிகார்டாக வேலைக்கு சேர்க்கிறார்.  இந்த சமயத்தில் கௌண்டமணி காணமல் போன ராஜா (கார்த்திக்) வாக மணிவண்ணன் வீட்டுக்கு வருகிறார். 

ஜெய்கனேஷும் மணிவண்ணனும் நண்பர்கள். இதே வீட்டுக்கு ஜெய்கனேஷும் வர, கார்த்திக்கும் கௌண்டமணியும் சமாளிக்கிறார்கள் - ராஜா & டிரைவர்-ஆக. மணிவன்னனுக்குத் தம்பியாக இன்னொரு மணிவண்ணன் வேறு வருகிறார். 

தன்னிடம் கார் டிரைவராக இருக்கும் கார்த்திக் தன் மகள் ரம்பாவை காதலிப்பது தெரிந்ததும் மணிவண்ணன் கார்த்திக்கை கூப்பிட்டு பேசுகிறார். இது வாக்குவாதமாக மாறி  கார்த்திக் 5 லட்சம் ஒரு மாதத்தில் சம்பாதிப்பதாக சவால் விடுகிறார். கார்த்திக்கும் கௌண்டமணியும் இந்த முறை(!?) மணிவண்ணனை கடத்தி அவர் மகள் ரம்பாவிடம் ஐந்து லட்சம் வாங்க நினைகிறார்கள். தம்பி மணிவண்ணன் அண்ணன் மணிவண்ணனைக்  கடத்தி  அண்ணன் சொத்துக்களைத் தனதாக்க எண்ணுகிறார்.  எல்லாரும் மணிவண்ணனைக் கடத்த ஒரே வீட்டுக்குள் முயற்சிக்கிறார்கள். இந்த இடம் தான் என்னை இப்போது பார்க்கும் போதும் வாய் விட்டு சிரிக்க வைக்கிறது.  ஒரு வழியாக அண்ணன் மணிவண்ணன் கடத்தப்பட்டு தம்பி அந்த இடத்துக்கு வருகிறார். அவர் மீது சந்தேகம் வருகிறது கார்த்திக், ரம்பா, கௌண்டமணி எல்லாருக்கும். 

பின்னர் என்ன ? டிஷ்யூம் டிஷ்யூம் தான். போலீஸ் வந்து கரெக்டா கெட்டவர்களைக் கைது செய்து எல்லாம் சுபம்.

சிற்பி இசை அமைத்திருக்கிறார். எல்லா பாடல்களையும் அராபிய நாட்டு பாடல்கள், பாகிஸ்தான் நாட்டு பாடல்களிலிருந்து சுட்டிருக்கிறார்.  

டைரக்ஷன் சுந்தர்.c எல்லா காட்சிகளிலும் நகைச்சுவை விருந்து படைக்கிறார். படம் கடைசி வரை விறு விருப்பாகவும் நல்ல பொழுது போக்கும் வகையிலும் கொடுத்திருப்பது சிறப்பு. சின்ன பட்ஜெட் சிறந்த படம் கொடுத்த இவருக்குப் பாராட்டுக்கள். 

நீங்கள் ரசித்த நினைவில் இன்னும் இருக்கிற காட்சிகளையும், உங்கள் கருத்துக்களையும் எழுதவும். 




No comments:

Post a Comment