Memories

Wednesday, September 28, 2011

கான்செர் புதிய நோயா ?

அகழ்வாராய்ச்சியில் ஒரு பிரிவு இருக்கிறது. அதில் அக்காலத்தில் புதைக்கப் பட்ட உயிரினங்களின் எலும்பு, முடி மற்றும் பல் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து அக்கால விலங்கு, மனிதர்களின் பழக்க வழக்கங்களையும் நோய் நொடி முதலியவற்றையும் கண்டு பிடிப்பார்கள். அந்த பிரிவு பல மனித எலும்புக்கூடுகளில் கான்செர்-ஐ கண்டுபிடித்துள்ளது. அந்த எலும்புக்கூடுகள் மிக மிகப் பழையவை. சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் ஆங்காங்கே இந்த நோய் பற்றிய குறிப்பு வருகிறது. எகிப்தியர்கள் இதை பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள், கிரேக்கர்கள் இந்த நோய்க்கு கான்செர் என்கிற பெயரை கொடுத்திருக்கிறார்கள். எகிப்தியரும் கிரேக்கர்களும் இதற்கு மருந்து இல்லை என்றே எழுதி வைத்திருக்கிறார்கள்.  

இந்த நோய் ஒன்றும் நவீன காலத்தியது இல்லை. இது மனித உலகின் ஆதி நோய். இது பற்றிய விழிப்புணர்வு அன்று இல்லாமல் போனது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. 

அந்த விழிப்புணர்வு இன்றும் இல்லை என்பது கொடுமை. இதற்கு கொடுக்கும் விலை ஈடு இணை இல்லாதது....

நன்றி: சித்தார்த்தா முகர்ஜி-யின் 'நோய்களின் அரசன் - கான்செர்'. 




No comments:

Post a Comment