Memories

Wednesday, October 12, 2011

வியாபாரி

 ஓரிரு வருடங்களுக்கு முன்பு மாமா நிறைய கடனில் இருந்தார்கள். பணத்தை கைமாற்றி விட்டு சமாளித்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு சமயத்தில் ஒருவரிடமிருந்து மாமாவுக்கு வர வேண்டிய பணம் வாங்குவதற்காக ஒருவரிடம் கேட்டு கொண்டு இருந்தார்கள்.  ஆனால் அந்த மனிதரோ தான் மகன் படிப்புக்கு வைத்திருக்கும் பணத்தை எடுத்து தருவதாக சொன்னார். மாமாவுக்கோ நிறைய டென்ஷன் பணம் வாங்கி உடனே தான் கொடுக்க வேண்டிய நிர்பந்தம். மாமா ஒரு தொழில் அதிபர், அடிப்படையில் ஒரு வியாபாரி. அவர்கள் தன்னுடைய லாபத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்திருக்க முடியும். ஆனால் மாமாவோ அந்த ஆளிடம் அவர் பையனுடைய படிப்புக்கு பணத்தை கட்டுமாறு சொல்லி விட்டு திரும்ப வந்து விட்டார்கள். அவர்கள் முகம் மிகுந்த நிறைவை வெளிப்படுத்தியது.

மாமாவோ ஒரு வியாபாரி என்பதைத் தாண்டி ஒரு உயர்ந்த மனிதர் என்பது புலப்பட்டது. 

No comments:

Post a Comment