Memories

Monday, November 28, 2011

உங்களுக்கு ஒரு சவால்

ஒரு வரியில் சொல்லுங்கள், பிரமு மாமாவை எப்படி உணர்கிறீர்கள் ?
(கருத்துக்கள் இணைப்பை சொடுக்கி பதில் சொல்லுங்கள்)  


Sunday, November 27, 2011

மன உறூதி!!!

என் மனதில் பட்டது.

நோய்களின் அரசனாம் கான்சர்,
கொஞ்சம் பயந்து தான் போனான் எங்கள் மாமாவை பார்த்து.......  

-ரமேஷ்

Thursday, November 24, 2011

மயக்கமா...கலக்கமா...

மயக்கமா...கலக்கமா...மனதிலே 
    குழப்பமா வாழ்கையில் நடுக்கமா
வாழ்க்கை  என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்  
    வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் 
    இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

சுமைதாங்கி திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதி P.B. ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல்.



கான்சர் எப்படி தோன்றுகிறது...

இதை தெரிந்து கொள்ள மனித உடலின் அடிப்படை கட்டுமானத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். மனித உடம்பு பல கோடிக்கணக்கான செல்களால் கட்டப் பட்டுள்ளது. வீடு ஆயிரக் கணக்கான செங்கலால் கட்டப் பட்டுள்ளதைப் போல. செல் என்பது உடலின் அடிப்படை மூலக்கூறு. செல்கள் பெரிதாவதில்லை, மனித உடல் வளரும்போது கூட. பெரிய வீடு கட்ட வேண்டுமானால் நாம் செங்கல்களைப் பெரிதாக்குவதில்லை, ஆனால் செங்கல்களின் எண்ணிக்கையை அதிகமாக்குவோம். அது போல உடல் வளரும்போது செல்கள் எண்ணிக்கையில் அதிகமாகுகின்றன. ஒவ்வொரு செல்லும் அதை போல் இன்னொரு செல்லை உருவாகுகிறது. ஒன்று இரண்டாகும், இரண்டு நாலாகும், நாலு எட்டாகும் இது போல பெருகி கொண்டே இருக்கும். இப்படி ஒரு செல் இன்னொரு செல்லை உருவாகுவதற்கு செல்லுடைய அடிப்படை கட்டுமானத்தை (செல்லுடைய மூளை-ன்னு நினைத்துக் கொள்ளுங்கள்) பிரதி எடுக்கிறது. அப்படி பிரதி எடுக்கும் போது வரும் குறைபாடுகள் தான் பின்னர் கான்சராக உருவாகிறது.  


நன்றி: சித்தார்த்தா முகர்ஜி-யின் நோய்களின் அரசன் கான்சர் 



மனிதன் என்பவன்...

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
    உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
யாருக்கென்றும் அழுத போது தலைவனாகலாம்  
    மனம், மனம், அது கோவிலாகலாம்  
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் 
    குணம் குணம் அது கோவிலாகலாம் 

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் 
    வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம் 
வாழை போல தன்னைத் தந்து தியாகியாகலாம்
    உருகியோடும் மெழுகு போல ஒளியை வீசலாம்


சுமைதாங்கி திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதி P.B. ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல்



Monday, November 14, 2011

4 Miracles of Engineering in 21st Century


That is what I call " Engineering "  


 
 
  FEW MECHANICAL MIRACLES OF THE 21st CENTURY
 
 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
Thanks&Regards
Sundar

பயம்

கரடி குட்டி எப்படி பயந்து அலறுது பாருங்க... (போட்டோவை கிளிக் பண்ணுங்க...ரசிங்க..)







மன உறுதி

இந்த வார்த்தையை படித்திருக்கிறேன், கேள்வி பட்டு இருக்கிறேன் பெரிய மன்னர்களிடத்தில் இது நிறைய இருந்தது என்று. இன்றைய காலகட்டத்தில் கேட்டதில்லை. 

மாமா முதல் கீமோ ஏற்றி விட்டு வந்து இருக்கிறார்கள். மேல வீடு சசிகலா சித்தி அப்ப தான் செல்வம் சித்தப்பா இறந்த சோகத்தில் இருந்திருக்கிறார்கள். ஊரை விட்டு போய்டலாம்னு  இருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் பிரமு மாமா இப்படி சொன்னார்களாம்: "உனக்கு யாரும் இல்லை இங்கன்னோ, ஊரை விட்டு போலாம்னோ நெனைக்காதே சசிகலா. அண்ணன் நான் இருக்கேன் அந்த பிள்ளைகளுக்கு"

கீமோ ஏறும் போது கூட இந்த மன உறுதி இருக்குமா, நான் பாத்துக்கறேன் குழந்தைகளைன்னு அந்த சமயத்துல கூட சொல்லறதுக்கு யாருக்கு வரும் அந்த உறுதி. 




அந்த கால தமிழ் வட்டெழுத்துக்கள்


கோவில் சுவர்களில் இன்றும் நீங்கள் இந்த எழுத்துக்களை பார்க்கலாம் 

 



Sunday, November 13, 2011

எத்தனை முகங்கள் தெரிகின்றன இங்கு





குறிப்பிடத் தகுந்த வாசகம்

ஹாரி பாட்டர் படத்தில் இந்த வசனம் வரும். வசனத்துக்கு முன் குறிப்பு:
ஹாரி பாட்டர் அப்பா அம்மாவை இழந்து விட்ட சிறுவன். அவனுக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்தவர் அவனுடைய பள்ளிக்கூட வாத்தியார். அவருடைய மறைவு ஹாரியை ரொம்பவும் பாதிக்கும். அப்போது ஹாரியின் கனவில் வந்து வாத்தியார் சொல்லுவார்: "இறந்தவர்களை நினைத்து கவலை படாதே, இருப்பவர்களை நினைத்து இறக்கப் படு. மேலும் அன்பே இல்லாமல் இருப்பவர்களை நினைத்து  துக்கப் படு"

ஆங்கிலத்தில்:
"Do not pity the dead, Harry. Pity the living, and, above all, those who live without love."
Quote from movie "Harry Potter and the Deathly Hallows" 






சரித்திரத்தின் எல்லா முக்கிய புள்ளிகளும்

 இங்கு உள்ளனர்...