Memories

Friday, December 16, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 8

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 8 - பல்லக்கில் யார் ?  

சுருக்கம்:  இளவரசர்கள்ள மூத்தவரான மதுராந்தகத் தேவருக்குத் தான் பட்டம் கொடுக்கணும்னு பழுவேட்டரையர் சொன்னார். கூட்டத்தில இருந்தவங்க சிலர்  மதுராந்தக தேவர் பத்தி கேள்வி பட்டத சொன்னாங்க. அதாவது இவர் பட்டம் வேண்டாம்னு சிவ பக்தியிலே கரைஞ்சு காணாம போயிட்டாரு-ன்னு. பழுவேட்டரையர் பல்லக்கில் இருக்கிற மதுராந்தக தேவர வெளியில வந்து தனக்கு ராஜ பதவி ஏதுக்கதுக்கு சம்மதமான்னு சொல்ல சொன்னாரு. அவரும் வந்து சொன்னாரு.

விளக்கம்: 
 "சோழ சாம்ராஜ்யம் ஆண்ட மன்னரான கண்டராதித்த தேவர் எதிபாராத விதமா இறக்கிற சூழ்நிலையில தான் மகன் மதுராந்த தேவர் ஒரு வயசு குழந்தைங்கிரதால தன் தம்பி அரிஞ்சய சோழருக்கு பட்டம் கட்டும் படி சொல்லிட்டு இறந்துட்டாரு. இந்த விஷயத்த சொன்னது கனடராதித்த தேவரோட மனைவி  பட்டது ராணி தான். விதி வசமா அரிஞ்சய தேவர் ஒரு வருஷம் கூட நீடிக்கல, இறந்து போயிட்டாரு. இதனால அவர் பையன் இருபது வயசான சுந்தர சோழருக்கு நாங்க பட்டம் கட்டினோம்." அப்படீன்னு சொன்னாரு பழுவேட்டரையர்.
  சம்புவரையர் சொன்னாரு "கண்டராதித்த தேவரோட பையன் மதுராந்தக தேவர் இப்போ பிராயத்திலே இருக்கார், அவர் பெரியவரா இருந்திருந்த அன்னிக்கே பட்டம் அவருக்கு போயிருக்கும். இப்போ அவருக்கு பட்டம் கொடுக்கறதே சரி" ன்னு சொன்னார்.
  கூட்டத்திலே யாரோ கேட்டாங்க " இப்போ மதுராந்தக தேவர் எங்க இருக்கார் ? ராஜ்ஜியம் ஆள ஆசை இல்லாம சிவ பக்தியிலே மூள்கிட்டாருன்னு  சொல்றாங்க. உண்மையிலேயே அவருக்கு ஆசை இருக்கா ?  இருக்குன்னாலும் அது எங்களுக்கு எப்படி தெரியும் ?"
   பழுவேட்டரையர் சொன்னாரு "தெரிஞ்சா ஆதரவு தருவீங்களா ? " எல்லாரும் சம்மதம் சொன்னாங்க. பழுவேட்டரையர் பல்லக்கு இருந்த திசைய பாத்து சொன்னாரு "இளவரசே பல்லக்கு திரைய விலக்கி எங்களுக்கு போஸ் கொடுங்க. உங்க சம்மதத்தை சொல்லுங்க"ன்னாரு. மதுராந்தக தேவர் வெளியே வந்தாரு. எல்லாரும் "பட்டத்து இளவரசர் வாழ்க ! மதுராந்தக சோழர் வாழ்க !!"  அப்படி கோஷம் போட்டாங்க.
   இதுக்கு மேல இங்க நிக்க முடியாதுன்னு வந்தியத் தேவன் அவன் இடத்துக்கு வந்து படுத்துக் கிட்டான், அப்படியே தூங்கி போனான் இவன்.
   
  

No comments:

Post a Comment