Memories

Friday, December 16, 2011

ஆண்டி செப்டிக்

   காயங்கள் செப்டிக் ஆவது ஒரு பெரிய மர்மமாக இருந்தது டாக்டர்களுக்கு. 1865 ஆம் ஆண்டு ஜோசப் லிஸ்டர் என்ற மருத்துவர் காயங்கள் திறந்து இருப்பதால் தான் செப்டிக் ஆகிறது என்று கண்டுபிடித்தார். பிரான்ஸ் நகர ரசாயன விஞ்ஞானி லூயிஸ் பாய்ச்ச்சர் திறந்த நிலையில் இருந்த மாமிசம் சீக்கிரம் அழுகி விடுவதையும், அதே மாமிசம் காற்றுபுக முடியாத கண்ணாடி குவளையில் வெகு நாள்கள் கெடாமல் இருப்பதையும் வைத்து, காற்றில் கண்ணுக்குத் தெரியாத நுன்னுயிர்கள் இருப்பதால் தான் இந்த மாற்றம் நிகழ்கிறது என்ற கண்டு பிடிப்பை வெளியிட்டார்.  
இந்த கண்டு பிடிப்பும் காயங்கள் அழுகுவதும் ஏறக்குறைய ஒன்றே என்று லிஸ்டர் எண்ணினார். தான் கிராமத்துக்கு அருகே சாக்கடை சுத்தம் செய்பவர்கள் கார்பாலிக் அமிலத்தை பயன்படுத்துவதை பார்த்தார். அந்த அமிலத்தால் காயங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தார் லிஸ்டர். சாக்கடை சுத்தம் செய்வதை கொண்டு காயம் சுத்தம் செய்வது அவருக்கு வித்தியாசமாக தெரியவில்லை. இருந்தாலும் செப்டிக் ஆகும் நிலையில் இருந்த பல காயங்கள் நல்ல நிலைக்கு மாற ஆரம்பித்தன, முன்னேற்றம் ஏற்ப்பட்டன. இதுவும் ஒரு மிக சிறந்த கண்டுபிடிப்பே. அறுவை சிகிச்சை ஏற்படுத்தும் காயத்தையும் குணமாக்குவது சாத்தியமே என்ற நிலைக்கு மருத்துவ உலகம் முன்னேற ஆரம்பித்தது.

நன்றி - சித்தார்த்த முகர்ஜி

No comments:

Post a Comment