Memories

Monday, January 30, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 11

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 11 - திடும் பிரவேசம் 



வானதியோட சாதகத்த பாத்த ஜோதிடர் அப்படியே திகைச்சுட்டாறு. குந்தவைய பாத்து சொன்னாரு: "ரொம்ப அதிர்ஷ்டக்கார ஜாதகம் அம்மா இது, உங்களை விட ஒரு படி மேலானது."  வானதியோட சாதகத்த பாத்து அவளுக்கு எப்போ கல்யாணம் வரும், மாப்பிள்ளை எங்க இருந்து வருவார் அப்படீன்னு கேட்டாரு குந்தவை. ஜோதிடர் பேசறதுல கில்லாடி. புரியற மாறி பேசுவாரு ஆனா ஒன்னும் தெளிவா சொல்ல மாட்டாரு.   
குந்தவை இன்னும் கேட்டா: "ஜோதிடரே கொஞ்ச நாளா வானத்தில ஒரு வால் நட்சத்திரம் தெரியுது. அதனால ராஜ்யத்துக்கு ஆபத்துன்னு ஜனங்கள் பேசிக்கறாங்களே...அத பத்தி  பாக்க முடியுமா"ஜோதிடர் பதில் சொல்லாம தப்பிக்க பாத்தாரு. குந்தவை விடுவாளா...கடைசீல சொன்னாரு: "ராஜாவுக்கு ஒரு கண்டம் இருக்கு. துர்க்கா தேவி அருளால சரியாகும்" அப்படீன்னார்.
அப்ப வாசல்ல சத்தம் கேட்டது, தடபுடல் தெரிஞ்சது. எதோ சொல்லிக்கிட்டே வந்தியத் தேவன் உள்ள வந்தான் (நினைவிருக்கா இவன் படகுல ஏறுனான் கடைசீயா) பெண்கள பாத்ததும் அப்படியே நின்னுட்டான்..பின்னாடியே ஜோதிடரோட சீடன் வந்தான். அவன் கிட்ட வந்தியத் தேவன் "உள்ளே பெண்கள் இருக்காங்கன்னு சொன்னா வந்திருக்க மாட்டேன் இல்லே" அப்படீன்னு சொல்லிட்டு வெளியே போய்ட்டான்.
பெண்கள் ரெண்டு பெரும் முடிச்சுட்டு வெளியே வந்தாங்க. ஒதுங்கி நின்ன வந்தியத் தேவன் சொன்னான் "உள்ளே பெண்கள் இருக்காங்கன்னு இந்த புத்திசாலி சொல்லலே, அதான் வந்திட்டேன், மன்னிச்சுக்கோங்க"ன்னான். அதுக்கு பதில் சொல்லாம அவன பாத்து ஒரு ஸ்மைல் பண்ணீட்டு போய்ட்டாங்க குந்தவை.




Sunday, January 29, 2012

X கதிர்கள் - வல்லிய கதிர் மெல்லிய வீச்சு

 1895- ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஜெர்மானிய விஞ்சானி வில்ஹெல்ம் ரொண்ட்ஜென், எலக்ட்ரான் கதிர் குழாய் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். காற்றுப் புக முடியா வெற்றுக் குழாயில் எலக்ட்ரான் துகள் உற்பத்தி செய்து ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது.  அப்போது இந்த எலக்ட்ரான் குழாயில் இருந்து வினோத கதிர்க் கசிவு ஏற்படுவது புலப்பட்டது இவருக்கு. அறையில் இருந்த திரையில் ஒரு ஒளி வட்டம் தோன்றியிருந்தது.
தன் மனைவி "ஆனா"வின் கையை கதிர்க் கசிவின் வழியில் வைத்து பின்னால் ஒரு  புகைப்படத் தகடை வைத்து பார்த்தால் ஆனாவின் கை எலும்புகளையும் அவர் கையில் அணிந்து இருந்த கல்யாண மோதிரத்தையும் காட்டியது. "என்னுடைய சாவைப் பார்த்தேன்" என்று சொன்னார் "ஆனா" புகைப் படத்தை பார்த்த பின்பு. இனம் தெரியாத இந்த கதிர்களை  X கதிர்கள் என்று அழைத்தார் வில்ஹெல்ம். உடலை அறுக்காமல் உடலின் உள்ளே பார்க்கக் கூடிய சாத்தியம் தோன்றியது.
  
- கதிர் வீச்சு தொடரும் 
(நன்றி: சித்தார்த்த முகர்ஜி )  


Saturday, January 28, 2012

சில தருணங்கள் மறக்க முடியாதவை


Tuesday, January 24, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 12

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 12 - நந்தினி  





போன அத்தியாயத்தில படகில விட்ட வந்தியத்தேவன் குடந்தை ஜோசியரப் பாக்கறதுக்கு எப்படி வந்தான்? என்ன நடந்ததுன்னா...ன்னு சொல்லி ப்ளாஷ்-பேக் உடுவோமா?

படகில கடைசீய வந்து ஏறினான் ஆழ்வார்க்கடியான். அவன் வாய கிளறினான் வந்தியத்தேவன். ஆழ்வார்க்கடியான் எப்பேர்ப்பட்ட கில்லாடி...அவன் அத அப்படியே திருப்பி உட்டான் வந்தியத்தேவன் மேல...வந்தியத்தேவன் லேசுப்பட்டவனா? அவன் விடாக்கண்டன்னா இவன் கொடாக்கண்டன். வந்தியத்தேவன் பத்தி ஒன்னும் கண்டு பிடிக்க முடியல இவனால. ஆனா வந்தியத்தேவன் மனசோ ரொம்ப குழம்பி போய் கிடந்தது. அது தீர ஆழ்வார்க்கடியான் ஒன்னும் தீர்மானமா சொல்லல. ஆனா ஒண்ணு மட்டும் சொன்னான்: குடந்தை சோதிடர கேட்டு பாருன்னு சொல்லிட்டான். சேரி அவரப் பாத்தா குழப்பம் தீர்ந்தாலும் தீரலாம்னு அங்க போக நினைச்சான் வந்தியத் தேவன். அப்படித்தான் அங்க வந்து சேந்தான்.


சரி, தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லேன்னு நீங்க நினைக்கலாம். படகில வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியான கிண்டி கிடைச்சது தான் நந்தினி பத்தின கதை. நந்தினி தான் வந்தியத்தேவனுக்கு தந்த மோதிரத்த கொடுத்தவ.  பெரிய பளுவேட்டரயரோட சம்சாரம். அவ ஆழ்வார்க்கடியானோட தங்கை. ஆழ்வார்க்கடியான் சின்ன பையனா இருந்த போது அவனோட அப்பா நதிக்கரையில அனாதையா கிடந்த ஒரு பெண் குழந்தைய எடுத்து நந்தினின்னு பேரு வச்சு வளத்தாரு. அவரு இறக்கும்போது நந்தினிய ஆழ்வார்க்கடியானோட பொறுப்பில  விட்டுட்டு இறந்திடாறு. இவன் பக்தீயில ரொம்ப ஊறிப்போய் இருந்தாலும் தங்கைய நல்லா கவனிசுக்கிட்டான்.  ஒரு வாட்டி திருவேங்கடத்துக்கு யாத்திரை போனான் ஆழ்வார்க்கடியான். அபப ஒரு விபரீதம் நடந்தது. சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில ஒரு பெரிய போர் நடந்தது. [ நல்லா நியாபகம் வச்சுக்கோங்க..இது திருப்பி திருப்பி வரும், ஒவ்வொருத்தர் பார்வையில.. ] அது நடந்த இடத்துக்கு பக்கத்தில தான் இவன் வீடு இருந்தது. பாண்டியர்களோட படை நிர்மூலமா ஆயிடுச்சு. ரத்த காயத்தோட அவங்க ராஜா வீரபாண்டியன தூக்கி கொண்டு வந்து நந்தினி வீட்டில போட்டாங்க கொஞ்ச வீரர்கள். அவனோட நிலமைய பாத்து இறக்கப் பட்டு பணிவிடை செஞ்சா இவ. ஆனா இத கண்டு பிடிச்சு சோழ வீரர்கள் அங்க நுழைஞ்சு வீர பாண்டியன கொன்னுட்டாங்க, நந்தினிய சிறை பிடிச்சுட்டு போயிட்டாரு பழுவேட்டரையர். மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது இது; அதில இருந்து அவள எப்படியாவது அங்க இருந்து மீட்கனும்னு, காப்பாத்தனும்னு டிரை பண்ணிக்கிட்டு இருக்கான் திருமலை என்கிற ஆழ்வார்க்கடியான்.

Sunday, January 22, 2012

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை...!



Saturday, January 21, 2012

புகைப்படமாக ஒரு கதை - சிங்கக் குட்டி

பள்ளத்துக்குள் ஆழமாக இறங்கி விட்டது சிங்கக் குட்டி. மூன்று பெண் சிங்கங்கள் இறங்க முயற்சிக்கின்றன..முடியவில்லை..அவ்வளவு ஆழம். பின்வாங்கி விட்டன. ஆனால் ஒன்று மட்டும் திரும்பவில்லை. ரிஸ்க் எடுத்து இறங்கி குட்டியை தூக்கி கொண்டு வந்து விட்டது. ஏன் தெரியுமா? அது தான் அம்மா...! 
  

Wednesday, January 18, 2012

நண்பன் - திரை விமர்சனம்


ஹிந்தி படமான "3-idiots"-இன் அச்சு மாறாத காப்பி. தமிழுக்காக மாற்றப் பட்ட பாத்திரப் படைப்புகளின் பெயர்கள் மற்றும் பாடல்கள் தவிர்த்து, நுண்ணோக்கி வைத்துப் பார்க்க வேண்டிய சொற்ப இடங்களில் மட்டுமே இயக்குனர் சங்கரின் வித்தியாசங்களைப் பார்க்கலாம். உதாரணத்துக்கு ஒன்று. காதல் வந்தால் என்ன உணர்வு தோன்றும் என்று விஜய் வருணிக்க, ஹீரோயின் இலியானா "இது ஷங்கர் பட கிராபிக்ஸ்ல தான் நடக்கும்" என்று சொல்வார். ஆனால் ஹிந்தி படத்தை விட சிறப்பாக தர முடியாது என்பதால் காட்சி, காமிரா கோணம் எல்லாவற்றையும் அப்படியே தந்திருக்கிறார். (நாம் நினைத்தது போலவே விஜய் டி.வீ நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கர் இந்தத் தகவலை சொல்லி இருக்கிறார். திரைக்கதையை ஹிந்தி மூலத்தில் இருந்து அப்படியே தரவேண்டும் என்றும் சின்ன நுணுக்கம் கூட மாறி போகக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்ததாக சொல்லுகிறார்.)

கதை தொடங்கும் முன் சில தகவல்கள்: நண்பன், ஹிந்தி "3-idiots"-இன் தழுவல் என்று சொல்லிவிட்டோம். "3-idiots"-இன் கதை எழுதியவர் அபிஜத் ஜோஷி மற்றும் ராஜ்குமார் ஹிரானி.  திரைக்கதை எழுதியவர்கள் அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் விது வினோத் சோப்ரா. இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. இவர்களுக்குத் தான் அத்துனை பாராட்டுகளும், புகழும் போய்ச் சேரும். ஹிந்தி படத்துக்கு மூலம் பிரபல எழுத்தரான சேத்தன் பகத் எழுதிய "Five Point Someone – What not to do at IIT!" என்கிற புத்தகத்தையே சேரும். எண்ணம் மற்றும் பிள்ளையார் சுழி போட்டு மூலக்கதை எழுதிய இவரே எல்லா பாராட்டுக்கும் உரியவர் (அப்பாடா...மறக்காம சொல்லிட்டேன்..!)
  
சங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீக்காந்த், சத்தியராஜ், சத்யன் என்று முக்கிய நடிகர்கள் இதில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இலியானா தான் நாயகி. தவிர வாலி குஷி தந்த S.J. சூர்யா ஒரு சிறு கதாபாத்திரத்தில் வருகிறார். மில்லிமீட்டர் என்கிற பாத்திரத்தில் வருகிற இளைஞர் கவர்கிறார். இசை ஹாரிஸ் ஜெயராஜ். 'என் நண்பன் போல யாரு மச்சி' பாடல் படம் முடிந்து பல மணி நேரம் நம் காதுகளில் ஒலிக்கிறது. 









கதை என்னவோ விஜய், ஜீவா & ஸ்ரிக்காந்தை சுற்றி சுற்றி நகர்ந்தாலும் சத்தியராஜ் & சத்யனின் நடிப்பு பிரமாதம். "வைரஸ்" என்று மாணவர்களால் செல்லமாக அழைக்கப்படும் பிரின்சிபால் விருமாண்டி சந்தனம் என்கிற பாத்திரமாக வழுக்கை தலையும் பெரிய கண்ணாடியுடன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சத்தியராஜ். உலகமே போட்டி தான், இரண்டாவது இடம் என்பது தோல்வி, முதல் இடம் தான் வெற்றி என்கிற கொள்கை உடையவர் இந்த விருமாண்டி சந்தனம். இவரை இவருடைய கொள்கைகளால் நாம் வெறுக்கும் விதமாக பாத்திரம் சித்தரிக்கப் பட்டாலும் சத்யராஜை நம்மால் வெறுக்க முடியவில்லை, அது சின்ன சறுக்கல் தான். நாசர் இன்னும் பொருத்தமான தேர்வாக இருந்து இருக்குமோ ( எம்டன் மகன் படத்தை பார்க்க) என்று தோன்றுகிறது. சத்யராஜை இரண்டாவது இடத்துக்கு தள்ளி நடிப்பில் முதல் இடத்துக்குத் தாவி இருப்பவர், ஸ்ரீவத்சன் என்கிற பெயரும் "சைலன்சர்"  என்கிற பட்டப் பெயரும் கொண்ட பாத்திரமாக வரும் சத்யன்.  உருப் போட்டு (மக் அடித்து, கடம் அடித்து, மனப் பாடம் செய்து) 'படித்து' மார்க் வாங்கி நல்ல பெயர் வாங்கும்  முதல் பெஞ்ச் மாணவன் பாத்திரம் இவருக்கு. படத்தில் ஒவ்வொரு பாத்திரமும் செதுக்கப் பட்டு இருக்கிறது. உதாரணமாக எதற்கெடுத்தாலும் விலை சொல்லும் பாத்திரம் ஒன்று; "Mr. Price Tag" ("விலை ஸ்டிக்கர்" என்று தமிழ்(?) படுத்தி சொல்லலாம்) என்று பெயர் வைத்து இந்த 3 நண்பர்களும் கூப்பிடும் பாத்திரம் ஒன்று நாம் பல சமயங்களில் பார்க்கிற ஒன்று. தனது காலணி மீது சட்னி கொட்டிவிட "என்னோட 300 டாலர் ஷூ மேல சட்னி கொட்டிடீயே" என்று கத்துகிறது. இப்படி சின்ன சின்ன விஷயங்களை ரசிக்கும் விதமாக செய்திருப்பது கதாசிரியரின் திறமை.
வெங்கட்ராம கிருஷ்ணன் (ஸ்ரீக்காந்த்) பிளேனில் உட்கார்ந்து இருக்கிறார், பிளேன் கிளம்பப் போகிறது. அந்த சமயத்தில் அவருக்கு ஒரு போன் வருகிறது. பிளேனை நிறுத்தி இறங்கி தான் நண்பனான சேவற் கொடி செந்தில் (ஜீவா) க்கு போன் அடிக்கிறார். விஷயம் கேட்டு பேன்ட் கூட போடாமல் ஓடி வருகிறார் செந்தில். இவர்களை கூப்பிட்டது ஸ்ரீவத்சன் என்கிற சைலேன்செர். அவரை பார்க்க அவர்கள் காலேஜ் வாட்டர் டாங்குக்கு வர சொல்கிறார், பாரி என்கிற இவர்களது நண்பன் "பஞ்சவன் பாரி வேந்தன்" (விஜய்) அங்கு வருவார் என்று நினைத்து அலறி அடித்து அங்கு செல்கிறார்கள் இவர்கள். அங்கே சைலேன்செர் மட்டும் தான் இருக்கிறான். தான் தற்போதைய வீடு, கார் என்று வசதியாக வாழ்வதை காட்டி தான் 10 வருஷத்துக்கு முன் போட்ட பந்தயத்தில் ஜெயித்து விட்டதாக சொல்கிறார். இவர்கள் அதை பெரிதாக எடுக்கும் நிலையில் இல்லை. பாரி எங்கே என்று கேட்கிறார்கள். பாரி ஊட்டியில் இருப்பதாக சொல்கிறான் சைலேன்செர். அவனுடைய காரில் ஏறி ஊட்டி நோக்கி செல்கிறார்கள். 
பிளாஷ் பேக் தொடங்குகிறது: "IEC" (IIT போல சொல்கிறார்கள்) என்கிற யாருக்கும் கிடைக்காத காலேஜ், முதல் நாள், சீனியர்கள் ராக்கிங் செய்கிறார்கள். பாரியை ஒன்றும் செய்ய முடியவில்லை அவர்களால். ஐந்தாங் கிளாசில் படித்த ஒரு சின்ன விஷயத்தால் சீனியர்களை மடக்கி விடுகிறான் பாரி. அவன் தான் இவர்களுடைய ரூம் மேட். கொஞ்ச நாளில் இவர்கள் நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள்.  செந்திலின் அப்பா உடம்பு சரி இல்லாமல் சீரியஸ் ஆக இருக்க பாரி புத்திசாலித் தனத்தால் அவரை காப்பாற்றுகிறான். பாரிக்கும் உலகமே போட்டி மேடையாக நினைக்கும் சந்தானத்துக்கும் அடிக்கடி மோதல் வருகிறது. அவர் நண்பர்களை பிரிக்க எண்ணுகிறார். அதை தாண்டி நட்பு இறுகுகிறது. 
ஊட்டிக்கு கார் செல்கிறது. பாரியின் வீட்டுக்கு போகிறார்கள். ஆனால் பாரி (S.J. சூர்யா) என்று சொல்பவர் வேற ஆள். பாரியின் காலேஜ் போட்டாவில் இவர்கள் இருக்கிறார்கள், இவர்களது நண்பன் பாரிக்கு பதில் இந்த பாரி இருக்கிறார். மிரட்டி கேட்ட பிறகு தெரிகிறது: பாரியாக வந்தது இவரது வீடு வேலைக்காரறது பிள்ளை, அவனை "பப்பு" என்று கூப்பிடுவார்கள். பாரிக்கு பதில் பப்பு படிப்பான் என்றும், அதற்க்கு அப்பறம் இவன் காலேஜ் சம்பந்தப் பட்ட யாரோடும் தொடர்பு வைக்க கூடாது என்றும் கண்டீஷன். பப்பு இப்போது தனுச்கொடியில் இருக்கிறான், ஸ்கூல் வாத்தியாராக. சைலேன்செர் ரொம்ப சிரிக்கிறான். தான் மேல் நிலையில் இருப்பதும், பப்பு வாத்தியாராக போய் விட்டதும் தான் காரணம். பஸப்புகழ் என்கிற சயன்டிஸ்ட் உடன் ஒரு ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் அது முடிந்தால் இவனை கையிலேயே பிடிக்க முடியாது என்றும் சொல்கிறான். பஸப்புகழ் என்கிற அறிஞ்சரை உலகம் வியக்கிறது என்றும் அவரை பார்பதற்காக தான் இந்திய வந்ததாகவும் சொல்கிறான் சைலன்சர். அவனை கட்டி காருக்குள் போட்டு விடுகிறார்கள் நண்பர்கள்.
 கார் தனுஷ்கோடி நோக்கி செல்கிறது. மீண்டும் பிளாஷ் பேக். பாரி இவர்கள் நினைத்ததை அடைய உதவி செய்கிறான். வெங்கட் வன விலங்குகளை படம் பிடிக்கும் போட்டோகிராபராக வர எண்ணுகிறான், அப்பாவிடம் பேச தயக்கம். செந்தில் பயந்து சாகிறான் எதற்கெடுத்தாலும். பாரி இவர்களுடைய இந்த குணங்களை மாறி அவர்கள் நல்ல நிலையை அடைய வைக்கிறான். தான் அறிவாலும் நல்ல எண்ணத்தாலும் சந்தனத்தின் மனதை வெல்லுகிறான். அவர் மகள் ரியா (இலியானா) மேல் இவனுக்கு காதல். மன மேடையில் இருந்து பப்புவுக்காக அவள் வெங்கட் & செந்தில் கூட வருகிறாள் இவனை பார்பதற்காக.

பப்பு அங்கே இருந்தானா, ரியாவை கை பிடித்தானா, சைலன்செரை எப்படி சமாளித்தான் என்பதை வெள்ளித் திரையில் காண்க. 

("இல்லீன்னா கொஞ்ச நாள் கழிச்சி இங்க வா, தல...கிளிமாக்ஸ் வர கதய நா சொல்றேன்" )

ஆனால் ஒரு மிகத் தரமான (ஹிந்தி) படத்தை அப்படியே தமிழ் ரசிகர்களுக்கு சேர்த்ததற்காக இயக்குனருக்கு நமது பிரமு இணையம் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது. உங்களது கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

Monday, January 16, 2012

நம்முடைய இணையம் இப்போது "www.piramu.tk" தளத்தில்

நம்முடைய பிரமு இணையத்தை இப்போது www.piramu.tk என்கிற இணைய முகவரியில் அடையலாம். piramu.blogspot.com என்கிற முகவரி மேற்கண்ட இணையதளத்துக்கு மாற்றி விடப் படுகிறது. இணையத்தை அடைய ஏதேனும் சிக்கல்கள்  இருந்ததால் இங்குள்ள "கருத்துக்கள்" இணைப்பு வழியாக தகவல் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Saturday, January 14, 2012

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !




விடியும் காலை
பொங்கும் பால்
அழகாய் சுண்ணாம்பு கோலம்
இடையிடையே செம்மண் அலங்காரங்கள்

ருசிக்கும் பொங்கல்
இனிக்கும் கரும்பு
ரசிக்கும் பட்டிமன்றம்
நெஞ்சம் நிறைக்கும் பொங்கல் தைத் திருநாள்
உள்ளம் உவக்கும் நன்னாளாக அமைய வாழ்த்துக்கள் !!
- மாமாவின் ஆசிர்வாதம் வேண்டும் இளைய உள்ளங்கள் 


படங்களுக்கு நன்றி :
http://reviews.in.88db.com
http://www.graphics99.com

Saturday, January 7, 2012

சமீபத்தில் ரசித்த படம்: சதிலீலாவதி



1990 களில் வந்தாலும் இன்றும் ரசிக்க வைக்கிற படம். ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா பிரதான பாத்திரங்களில் நடித்தாலும் கமலஹாசன், கோவை சரளா படத்தை தூக்கி உக்கார வைக்கிறார்கள். சபாபதி என்கிற காரக்டரில் ஒரு நாய் வேறு.(அதன் அறிமுகக் காட்சியே நம்மை சிரிக்க வைத்து விடுகிறது) 

அருண் என்கிற சபல கேஸ் (ரமேஷ் அரவிந்த்) லீலாவதி (கல்பனா) என்கிற பணக்கார மனைவி. கொஞ்சம் வெடுக் வெடுக் என பேசும் குணம் உள்ள லீலாவதி உண்மையில் ரொம்ப நல்லவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள், அருணுடைய அப்பாவும் இவர்களுடனே இருக்கிறார். அருனுக்கோ ரொம்ப மாடர்ன் பெண்ணான, பணத்தை ரொம்ப விரும்புகிற பிரியா (ஹீரா) என்ற பெண்ணிடம் பழக்கம் கிடைகிறது. அருண் ஏற்கனவே திருமணம் முடித்தவர் என்பது தெரியாமல் காதலிக்க ஆரம்பிக்கிறார். பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பது நினைவுக்கு வருகிறது (?!) இந்த ஜோடி பெங்களுரு செல்கிறார்கள். போகும் போதே  தற்செயலாக அருண் தன்னுடைய பால்ய நண்பன் சக்திவேல் கவுண்டரை (கமல்) பார்கிறார். 

"அருணு..." என்று கமல் கூப்பிடும் போதே தெரிந்து விடுகிறது, கமல் களை கட்டுவார் என்று. ரமேஷ் அரவிந்த் விஷயம் அவர் மனைவிக்கு தெரிந்து அவர் சண்டை போட்டு வீட்டை விட்டு இவரை அனுப்பி விட அந்த ஜோடிக்கு வசதியாக போய் விடுகிறது. அவர்கள் செட்டில் ஆகி விடுகிறார்கள். கோபப் பட்டு லீலாவதி, சதி லீலாவதியாக மாறி பல வேலைகள் செய்கிறார். கமல் இதற்க்கெல்லாம் உதவி செய்ய ரமேஷ் அரவிந்த் அவர் மனைவியிடம் சேர்கிறார், ஹீரா அவருடைய முன்னாள் காதலருடன் சேர்கிறார். எல்லாம் சுபமாக முடிகிறது.

பாலு மகேந்திரா இயக்கம். பல இடங்களில் செவ்வாய் கிழமை டி.வி நாடகம் போல காட்சி அமைப்புகளும், செட் அமைப்பும் இருக்கிறது. 

படத்துக்கு உயிர் கொடுக்கும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அது கிரேசி மோகனுடைய வசனம். சும்மா பின்னிருக்கார்... 

"குலைக்கிற நாய் எங்கயாவது கடிக்குமா மாமி ?"
"அது உனக்கும் எனக்கும் தெரியறது. அதுக்கு தெரியுமோ ?"

"மூக்கு போடி போட்டா நோய் வரும்னு சொல்றாங்க, அதை விட்டுடுங்களேன்"
"இப்ப உள்ள பொடிக்கு தும்மலே வர மாட்டேன்கறது"

பக்கத்துக்கு  வீடு மாமி லீலாவதியின் மாமனார் குறித்து சொல்லும் வசனம்: "அது பெரிய சபாபதி, இது குறைக்கிறது; அது பேசறது"
படம் முழுக்க சொல்லிட்டே போகலாம். எல்லா நடிகர்களும் பாத்திரம் அறிந்து நன்கு நடித்து இருக்கிறார்கள். கமல் பற்றி சொல்லவே வேண்டாம். கோயம்புத்தூர் பாஷையை அவ்வளவு அழகாக பேசி இருக்கிறார். கூடவே கோவை சரளா வேறு:
"அதான் தொடைல தட்டி தட்டி பாடுவாங்கல்லோ...அதே மாறி பாடுங்கோ"
"மாமா, ஏன் பாட்ட நிறுத்திப் போட்டீங்கோ...உங்க சங்கீதத்தில தொபுக்கடீர்னு குதிச்சு நீச்சலடிக்கலாமுன்னு வந்த என்ன ஏமாத்தி போடாதீங்கோ மாமா.."
எல்லா பாலு மகேந்திரா கதாநாயகிகள் போல, ஹீரா அழாகாக இருக்கிறார். 
படத்தில் கதாபாத்திரங்கள் அழகாக படைக்கப் பட்டு இருக்கின்றன, அந்த நுணுக்கங்கள் பாலு மகேந்திராவின் திறமை என்று சொல்லலாம்.

இது பழைய தத்துவம்: "ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள், தோல்விக்கு பின்னால் இருவர் இருக்கிறார்கள்"

Tuesday, January 3, 2012

போட்டோ பார்த்து என்ன என்று ஊகியுங்கள் பார்க்கலாம் ?


காரத்தே பள்ளியுடைய விளம்பரப் படம் தான் இது...!