Memories

Tuesday, January 24, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 12

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 12 - நந்தினி  





போன அத்தியாயத்தில படகில விட்ட வந்தியத்தேவன் குடந்தை ஜோசியரப் பாக்கறதுக்கு எப்படி வந்தான்? என்ன நடந்ததுன்னா...ன்னு சொல்லி ப்ளாஷ்-பேக் உடுவோமா?

படகில கடைசீய வந்து ஏறினான் ஆழ்வார்க்கடியான். அவன் வாய கிளறினான் வந்தியத்தேவன். ஆழ்வார்க்கடியான் எப்பேர்ப்பட்ட கில்லாடி...அவன் அத அப்படியே திருப்பி உட்டான் வந்தியத்தேவன் மேல...வந்தியத்தேவன் லேசுப்பட்டவனா? அவன் விடாக்கண்டன்னா இவன் கொடாக்கண்டன். வந்தியத்தேவன் பத்தி ஒன்னும் கண்டு பிடிக்க முடியல இவனால. ஆனா வந்தியத்தேவன் மனசோ ரொம்ப குழம்பி போய் கிடந்தது. அது தீர ஆழ்வார்க்கடியான் ஒன்னும் தீர்மானமா சொல்லல. ஆனா ஒண்ணு மட்டும் சொன்னான்: குடந்தை சோதிடர கேட்டு பாருன்னு சொல்லிட்டான். சேரி அவரப் பாத்தா குழப்பம் தீர்ந்தாலும் தீரலாம்னு அங்க போக நினைச்சான் வந்தியத் தேவன். அப்படித்தான் அங்க வந்து சேந்தான்.


சரி, தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லேன்னு நீங்க நினைக்கலாம். படகில வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியான கிண்டி கிடைச்சது தான் நந்தினி பத்தின கதை. நந்தினி தான் வந்தியத்தேவனுக்கு தந்த மோதிரத்த கொடுத்தவ.  பெரிய பளுவேட்டரயரோட சம்சாரம். அவ ஆழ்வார்க்கடியானோட தங்கை. ஆழ்வார்க்கடியான் சின்ன பையனா இருந்த போது அவனோட அப்பா நதிக்கரையில அனாதையா கிடந்த ஒரு பெண் குழந்தைய எடுத்து நந்தினின்னு பேரு வச்சு வளத்தாரு. அவரு இறக்கும்போது நந்தினிய ஆழ்வார்க்கடியானோட பொறுப்பில  விட்டுட்டு இறந்திடாறு. இவன் பக்தீயில ரொம்ப ஊறிப்போய் இருந்தாலும் தங்கைய நல்லா கவனிசுக்கிட்டான்.  ஒரு வாட்டி திருவேங்கடத்துக்கு யாத்திரை போனான் ஆழ்வார்க்கடியான். அபப ஒரு விபரீதம் நடந்தது. சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில ஒரு பெரிய போர் நடந்தது. [ நல்லா நியாபகம் வச்சுக்கோங்க..இது திருப்பி திருப்பி வரும், ஒவ்வொருத்தர் பார்வையில.. ] அது நடந்த இடத்துக்கு பக்கத்தில தான் இவன் வீடு இருந்தது. பாண்டியர்களோட படை நிர்மூலமா ஆயிடுச்சு. ரத்த காயத்தோட அவங்க ராஜா வீரபாண்டியன தூக்கி கொண்டு வந்து நந்தினி வீட்டில போட்டாங்க கொஞ்ச வீரர்கள். அவனோட நிலமைய பாத்து இறக்கப் பட்டு பணிவிடை செஞ்சா இவ. ஆனா இத கண்டு பிடிச்சு சோழ வீரர்கள் அங்க நுழைஞ்சு வீர பாண்டியன கொன்னுட்டாங்க, நந்தினிய சிறை பிடிச்சுட்டு போயிட்டாரு பழுவேட்டரையர். மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது இது; அதில இருந்து அவள எப்படியாவது அங்க இருந்து மீட்கனும்னு, காப்பாத்தனும்னு டிரை பண்ணிக்கிட்டு இருக்கான் திருமலை என்கிற ஆழ்வார்க்கடியான்.

No comments:

Post a Comment