Memories

Sunday, January 29, 2012

X கதிர்கள் - வல்லிய கதிர் மெல்லிய வீச்சு

 1895- ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஜெர்மானிய விஞ்சானி வில்ஹெல்ம் ரொண்ட்ஜென், எலக்ட்ரான் கதிர் குழாய் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். காற்றுப் புக முடியா வெற்றுக் குழாயில் எலக்ட்ரான் துகள் உற்பத்தி செய்து ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது.  அப்போது இந்த எலக்ட்ரான் குழாயில் இருந்து வினோத கதிர்க் கசிவு ஏற்படுவது புலப்பட்டது இவருக்கு. அறையில் இருந்த திரையில் ஒரு ஒளி வட்டம் தோன்றியிருந்தது.
தன் மனைவி "ஆனா"வின் கையை கதிர்க் கசிவின் வழியில் வைத்து பின்னால் ஒரு  புகைப்படத் தகடை வைத்து பார்த்தால் ஆனாவின் கை எலும்புகளையும் அவர் கையில் அணிந்து இருந்த கல்யாண மோதிரத்தையும் காட்டியது. "என்னுடைய சாவைப் பார்த்தேன்" என்று சொன்னார் "ஆனா" புகைப் படத்தை பார்த்த பின்பு. இனம் தெரியாத இந்த கதிர்களை  X கதிர்கள் என்று அழைத்தார் வில்ஹெல்ம். உடலை அறுக்காமல் உடலின் உள்ளே பார்க்கக் கூடிய சாத்தியம் தோன்றியது.
  
- கதிர் வீச்சு தொடரும் 
(நன்றி: சித்தார்த்த முகர்ஜி )  


No comments:

Post a Comment