Memories

Sunday, March 4, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 14, 15

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை 




வந்தியத் தேவன் குதிரை மேல ஏறி ஆத்தங்கரை வழிய போயிட்டு இருந்தான்."ஐயோ முதலை ! முதலை !! காப்பாத்துங்க" ன்னு ஒரு பொம்பளை கத்துறது கேட்டுச்சு. தூரத்திலே பெண்கள் ஆத்துலே குளிச்சுட்டு இருந்தாங்க. பக்கத்து மர நிழல்லே முதல ஒன்னு பாதி தண்ணிலையும் பாதி தரைலையும் வாய அகலமா திறந்து இருந்தது. முன்னாடி ஒரு பொண்ணு. கொஞ்சமும் யோசிக்கல, வந்தியத்தேவன். வேல உருவினான், வீசினான் முதலை மேல, தப்புமா குறி ? முதல முதுகில குத்தி நின்னது வேல். வாள உருவிகிட்டு  குதிரைல இருந்து ஜம்ப் பண்ணி முதலைய பாத்து ஓடினான். எல்லாம் ஒரு செகண்ட்ல நடந்திட்டு. திக்குன்னு பாத்திட்டு இருந்த பெண்கள் மெதுவா சிரிக்க ஆரமிச்சாங்க. ஒருத்தி முன்னாடி வந்து "ஐயா! உங்களுக்கு ரொம்ப நன்றி. ஆனா சிரமப் பட வேண்டாம்"ன்னா. ஒன்னும் புரியல இவனுக்கு.




அத்தியாயம் 15 - வானதியின் ஜாலம் 



அரசிளம் குமரிகள் ரெண்டு பேரு சோதிடர பாக்கறதுக்கு வந்தாங்க இல்லையா ? ஆனா நெறைய இளவரசிகள் இவங்க கூட வந்திருந்தாங்க. அவங்கள விட்டுட்டு குந்தவை வானதிய மட்டும் கூட்டிட்டு வந்தாங்க. அந்த பெண்கள் எல்லாம் வானதி பத்தி புரணி பேசிட்டு இருந்தாங்க. வானதிக்கு அருள்மொழி வர்மர் மேல இருந்த காதல் பத்தி பொறாமையா பேசிட்டு இருந்தாங்க. குந்தவை கூட இதுக்கு சம்மதிச்சதா பேசிகிட்டாங்க. 

1 comment:

  1. அருமையான பகிர்வு சகோ..பலருக்கும் உதவியாக இருக்கும்.மிக்க நன்றி.
    Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

    ReplyDelete