Memories

Sunday, December 30, 2012

சமீபத்தில் ரசித்த படம் - துப்பாக்கி



ரமணா, கஜினி மற்றும் 7-ஆம் அறிவு தந்த இயக்குனர் முருகதாஸ் கொடுத்திருக்கும் ஒரு விறு விருப்பான படம், நல்ல பொழுது போக்கு தந்த இயக்குனருக்கு நன்றிகள். சந்தோஷ் சிவனின் காமிரா அருமை, காட்சிகளுக்கு ஆழத்தை கொடுத்திருக்கிறது.

ஹீரோ "இளைய தளபதி" விஜய் வழக்கமான படி பில்ட்-அப் காட்சியில் அறிமுகமாகிறார். ராணுவத்தில் இருந்து  லீவில் வரும் காப்டனாக வருகிறார்.அவசர அவசரமாக ராணுவ சீருடை கூட மாற்றாமல் பெண் பார்க்க சென்று காஜல் அகர்வாலை பெண் பார்த்து ரிஜக்ட் செய்கிறார் (மோதலில் தானே காதல் வர வேண்டும்!). காமடிக்கு சத்யன் மும்பை போலீசாக வருகிறார். மொத்த கதையும் மும்பையில் தான் நடக்கிறது, நம்ம முருகதாஸ் தான் இந்தி இயக்குனர் ஆயிடாரே!

காப்டன் ஜகதீஷ் (விஜய் தான்) தன் நண்பன் பாலாஜி (சத்யன்) கூட பெண்கள் குத்துசண்டை பார்க்கும் படி ஆகிறது.அங்கு காஜல் அகர்வால் தான் குத்து சண்டை வீராங்கனை. காஜல் தன்னை எதிர்த்து போட்டியிடும் இன்னொரு வீராங்கனையை நாக்-அவுட் செய்ய விஜய்  காதலில் நாக்-அவுட் ஆகிறார். விஜய் தற்செயலாக ஒரு குண்டு வெடிப்பை பார்க்க நேரிடுகிறது, அதற்க்கு காரணமான ஸ்லீப்பர்-செல் ஆளை பிடித்து போலீசிடம்ஒப்படைக்கிறார். அங்கிருந்து தொடங்கும் விறுவிறுப்பு கடைசி வரை போகிறது.

விஜயின் உயர் அதிகாரியாக ஜெயராம் வருகிறார். காமடியில் சத்யனுக்கு ஒத்தாசை செய்கிறார். விஜயின் சாகசங்கள் தெரியாமலேயே கடைசியில் ரயில் ஏறுகிறார். வீணடிக்கப் பட்ட கதாபாத்திரம் இது. இவருடன் பேசுகையில் ஓவர் ஆக்டிங் செய்வதை தவிர்த்து இருக்கலாம். கதையின் துவக்கத்தில் வரும் மனோபாலா காஜல் அகர்வாலின் தந்தையாக வந்து ஒரு சீனுடன் காணாமல் போகிறார். விஜய்க்கு ஒரு பக்கம் காஜலுடன்  காதல் மறு பக்கம் தீவிரவாதிகளுடன் மோதல் என வேகமாக கதை நகருகிறது.

 விறு விருப்பான படமாக இருந்தாலும், லாஜிக் ஓட்டைகள் நிறைய: 
1. பல நாட்களாக கடத்தி வைக்கப் பட்ட ஸ்லீப்பர்-செல் ஆள் கைகட்டு அவிழ்க்கப் பட்டு தப்பி ஓட வசதியாக வைக்க பட்டிருப்பது, அவனுக்கே சந்தேகம் வர வைக்காதா? அவன் இங்கிலீஷ் படமே பாத்திருக்க மாட்டான் போலிருக்கிறது.
2. பல நாள் மயக்கத்தில் இருந்த ஸ்லீப்பர் செல் ஆள் வெளியே நடந்து ஒவ்வொரு இடத்துக்கு சென்று திட்டமிட்ட படி ஒவ்வொருத்தரிடமும் பேசுகிறான். இவனுடைய தலைவனாக வருகிறவன் இவன் கடத்தப் பட்ட விஷயத்தை யாரிடமும் சொல்ல வில்லை போல.
3. மிலிட்டரி இன்டலிஜன்ஸ் என்று சொல்லிக் கொள்ளும் விஜய் ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படையாக தான் அது தான் என்று சொல்லிக்கொள்ளும்படி நடப்பது நம்பும்படி இல்லை. இவருடைய உயர் அதிகாரியான ஜெயராம் தவிர மற்ற எல்லாருக்கும் இவர் பற்றி தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.
4. விஜய் தன்னுடைய டீமிடம் ஒரு 12 பேரை தீர்த்து கட்ட வேண்டும் என்று சொன்னதும், லீவில் வந்திருக்கும் எல்லாரும் ஒரு கேள்வி கூட கேட்டகாமல், விஜய் அவர்களுக்கு கொடுக்கும் துப்பாக்கியை எடுத்து சென்று எல்லரையும் தீர்த்து கட்டுவதும் லாஜிக்உதைக்கிற  மேட்டர்.
5. நாய் குலைத்தவுடன் வில்லனுக்கு தெரிந்து விடுகிறது ஹீரோ வந்து விட்டார் என்று. அதுவும் பொம்பிளை பிள்ளைகளை காப்பாத்த நேரத்துக்கு வந்து தானே ஆக வேண்டும். நிறைய தமிழ் படம் பாத்திருக்கிறார் வில்லன்.
6. கிளைமாக்ஸ் கப்பலில் தான் நடக்கும் என்று தெரிந்து இருக்கிறது விஜயை பின் தொடர்பவருக்கு. அதற்க்கு தயாராக வந்திருக்கிறார். 
7. ஒரு வெடிகுண்டில் அவ்வளவு பெரிய கப்பல் தீப்பிளம்பாக காணாமல் போவது சாத்தியமா? அணு குண்டு வைத்து தகர்த்திருப்பார்களோ?
8. யாருக்கும் தெரியாமல் தான் மிலிட்டரி இன்டலிஜன்ஸ் என்று சொல்லி சில தற்கொலைகளுக்கு காரணமாகிறார் விஜய். எப்படி வீடுகளுக்கு உள்ளே சென்றார், கள்ள துப்பாக்கி கொண்டு செல்கிறார், தற்கொலைக்கு அப்புறம் தப்பித்து வருகிறார். இயக்குனருக்கே வெளிச்சம்.
9. வீட்டுக்குள் சில தீவிர வாதிகளை குண்டு கட்டாக ஒத்தை ஆளாக தூக்கி கொண்டு வருகிறார், யாருக்கும் தெரியாமல் வைத்து இருக்கிறார், தப்ப விடுகிறார் அல்லது தூக்கி சென்று எங்கோ போடுகிறார்...எப்படி சாத்தியம்? விஜய்க்கே வெளிச்சம் (இயக்குனருக்கு ஏற்க்கனவே வெளிச்சம் போட்டாச்சுப்பா)


யாருக்காவது பதில் தெரிந்தால், திருத்தங்கள் தோன்றினால் பின்னூட்டத்தில் சொல்லுங்கப்பா...

கீமோதெரப்பி..

 சென்ற அத்தியாயத்தில் உயிரியலும் வேதியியலும் ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடயன என்று பார்த்தோம். 1878-இல் 24 வயது மருத்துவ கல்லூரி மாணவர் பால் எஹ்ர்லிச் ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தார் - செயற்கை இரசாயனங்களைக் கொண்டு உயிர் திசுக்களை நிறம் மாற்ற வேண்டும் என்கிற முயற்சியே அது. எப்படி தலைக்கு டை அடித்து நிறம் மாற்றம் செய்கிறார்களோ அதை போல. இந்த முயற்சியில் ஒரு வித்தியாசமான விஷயம் அவருக்குப் பட்டது - ரசாயனம் செல்லை முழுமையாக நிறம் மாற்றம் செய்யாமல் செல்லின் பகுதிகளை நிறம் மாற்றம் செய்தது. அதாவது செல்லின் சில ரசாயனங்களை அடையாளம் காட்டியது.

(படம்: பால் எஹ்ரில்ச் )

1882-இல் ராபர்ட் கோச் என்ற விஞ்சானியுடன் கூடு சேர்ந்து ஒரு மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். மைக்கோ பாக்டீரியா என்கிற நுண்ணுயிரியை அடையாளம் காட்டும் ரசாயனத்தை உண்டாக்கினார்.

(படம்: ராபர்ட் கோச்)


(படம்: செல்லின் பகுதியானது நீல சாயம் கொண்டு அடையாளம் காட்டப் படுகிறது)

பால் எஹ்ல்றிச் சில வருடங்களுக்கு பின்னால் இன்னொரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். சில வகை விஷத் தன்மை பொருந்திய ரசாயனங்கள் உடலுக்குள் நுழையும்போது உடலானது ஒரு எதிர்விஷங்களை உருவாக்குகிறது. இந்த "எதிர்விஷங்கள்" தற்பொழுது "எதிர் உயிரிகள்" என்று அழைக்கப் படுகின்றன.

ஓர் இரவில் சாதாரணமாக பேசிக்கொண்டு இருக்கும்போது அவருக்கு உண்டான எண்ணம்: ஏன்  இந்த எதிர் உயிரிகள் நோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கக்  கூடாது? இந்த எண்ணம் தான் பின் நாளில் கீமோதெரபி உண்டாகக் காரணமானது.

செல்லின் பற்பல பகுதிகளையும், பல நுன்னுயிரிகளையும் அடையாளப் படுத்த புதிய புதிய சாயங்கள் தேவைப் பட்டன. எஹ்ர்ளிச்-இன் பார்வை சாயத் தொழிற்சாலைகள் குவித்து வைத்திருந்த சாயங்களின் மேல் பதிந்தது.

(தேடல் தொடரும்)

Saturday, December 29, 2012

உலகம் அழியும்னு சொல்லிட்டு திரிஞ்சாய்களே..என்னாச்சி?


எல்லாருக்கும் இந்த கதை தெரிஞ்சாலும், தொகுத்து சொல்லிப் புடலாம்னு பாக்றேனுங்கோ..
மாயர்கள் அப்படீங்கற இனம் இப்ப மெக்ஸிகோ நாடு இருக்கற இடத்தில முன்ன வாழ்ந்தாங்க. அவங்க ஜோசியம் பாக்கறதில நம்மள மிஞ்சினவங்க. வானத்தில இருக்கற கிரகங்கள எல்லாம் கணிச்சி சுத்தமா ஜாதகம் கணிச்சாங்க. அந்த ஜாதகம் இந்த மாசத்தில முடியறதா இருந்தது. அத பாத்த உடனே பல பேரு கப்சா உட ஆரமிச்சாங்க பாருங்க...


மாயகர்கள் ஜாதகம் கணிக்கரத முடிக்க காரணம் உலகம் அழியரதால தான். நிபுரு அப்படீன்னு ஒரு கிரகம் (?) இருக்கறதாவும் அது பூமி மேல இந்த டிசம்பர் மாசம் மோதும்னும் சொன்னாயங்க சில பேரு. இத உலகம் அழிகிற கான்சப்ட் வச்சு ஹாலிவூட் படம் எடுத்து காசு பாத்தாங்க கொஞ்ச பேரு. கொழந்த பெருரத கூட தள்ளிப்போட்டவங்க சில பேரு. எல்லா நல்ல காரியங்களையும் தொடங்க யோசிச்சாங்க ரொம்ப பேரு.


எப்ப டி.வீ. பெட்டிய திருக்கி (சாரி, பழைய நியாபகம்) ...அமுக்கி.. டிஸ்கவரி சானல், நஷனல் ஜீயோகிரபி வச்சா இந்த கத தான் ஓடும். நம்ம இனைய தளத்தில கூட ஒரு கருத்து கணிப்பு வச்சோம் - அழியுமா? அழியாதா? அப்படீன்னு...அதுல கூட யாரும் அழியும்னு சொல்லல.

நாசா (அமெரிக்க இஸ்ரோ) போன மாசத்தில இருந்தே தெளிவா சொல்ல ஆரம்பிச்சுது, ஒன்னும் நடக்காது அப்படீன்னுட்டு. உலகம் அழியும்ன்னு சொன்ன பயக  எல்லாம், உலகம் அழியர வருஷம் 2012 இல்ல 3012 அப்படீன்னு உளற  ஆரம்பிச்சானுங்க.  இப்படியா யாரும் கண்டுக்க கூட இல்லாம அவய்ங்க சொன்ன நாள் வந்து போச்சி.

நீங்க என்ன செஞ்சீங்க, நெனச்சீங்க அப்படீங்கறத பின்னூட்டத்தில போடுங்க....


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வருகின்ற புத்தாண்டில் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறோம் - பிரமு இணையம்



Sunday, December 9, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 21, 22, 23, 24

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 21 - திரை சலசலத்தது  


திருவையாறு வழியா தஞ்சைக்கு குதிரைல வந்திட்டு இருந்தான் வந்தியத் தேவன். தன காரியங்கள எப்படி முடிக்க போறோம், மகாராஜாவ எப்படி பாக்க முடியும் எல்லா தடைகள் தாண்டி அப்படீன்னு நெனைச்சுட்டே வந்திட்டு இருந்தான். தூரத்தில பழுவேட்டரையரோட பல்லக்கு போயிட்டு இருந்தது. அதில பழுவேட்டரையர், இல்ல மதுராந்தகர் இருக்கலாம். மதுராந்தகர் இருந்தா அவர் கூட பழகி அப்படியே கோட்டைகுள்ள போய்டலாம் அப்படீன்னு நெனைச்சான். வேகமா போய் குதிரையால பல்லக்கை மோதினான்; உடனே கத்தினான்: "மஹாராஜா! மஹா ராஜா!! பல்லக்கு தூக்கரவங்க என்னோட குதிரைய இடிக்கறாங்க. ஐயோ ! ஐயோ!!" பல்லக்கோட திரை மெதுவா விலகிச்சி.

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 22 - வேளக்கார படை  
திரை விலகரத பாத்துட்டு உடனே இறங்கி கம்ப்ளைன்ட் செய்ய போனான் வந்தியத் தேவன். உள்ள இருந்தது மதுராந்தக தேவர் இல்ல, ஆனா ஆம்பளைங்கள கவர்ந்து பைத்தியமாக்குற அழகும் வசீகரமும் உள்ள பெண். ஷாக்  ஆகி நின்ன இவன வீரர்கள் சுத்திகிட்டாங்க. அதிசயமா இவனுக்கு மூள  வேலை செஞ்சது. பழுவூர் இளையராணிய பாக்கறதுக்காக இவளவு தூரம் வந்தான் அப்படீன்னும், ஆழ்வார்க்கடியான் அனுப்பி வச்சதாகவும் சொன்னான்.  இளையராணி ஸ்மைல் பண்ணினா மெதுவா, தன்னுடைய முத்திரை மோதிரத்தை கொடுத்து அப்பறமா வர சொன்னா. சாயங்கால வேளைலே மன்னரோட பாடி கார்ட்ஸ் - அதான் வேளக்கார படை - கோட்டைகுள்ள இருந்து வெளிய போனாங்க (அத்தியாய தலைப்ப மாட்ச் பண்ணனுமே..)


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 23 - அமுதனின் அன்னை  
ஊரை சுத்தி பாத்துட்டு மறுநாள் கோட்டைகுள்ள போகலாம்னு நெனைச்சான். அப்ப சேந்தன் அமுதன் என்கிற, கோவில்ல வேலை செய்யற இளைஞன் அறிமுகம் ஆனான். அவன் வீட்ல தங்கினான் வந்திய தேவன், அன்னிக்கி இராத்திரி. நெறைய விஷயங்கள் தெரிஞ்சது - மதுராந்தக தேவர் சின்ன பளுவேட்டரைரோட  பொன்னைத் தான் கல்யாணம் செய்திருக்காரு, இது நெறைய பேருக்கு தெரியாது. சின்ன பழுவேட்டரையர் தான் கோட்டை காவலுக்கு பொறுப்பு. பெரியவரும், சின்னவரும் கோட்டைகுள்ள மன்னர் கூட தான் தங்கி இருக்காங்க. இன்னும் முதல் மந்திரி அநிருத்த பிரம்மராயரும் மற்ற மந்திரிங்களும், பளுவேத்ட்டரைரோட வேலை செயாரவங்களும் உள்ள தான் தங்கி இருக்காங்க. 


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்  
ரெண்டு பழுவேட்டரையரும் தான் நாட்ட ஆளுராங்கன்னும், சக்கரவர்த்திய அவங்களோட கட்டுபாட்டில தான் வச்சிருக்காங்கன்னும் சொன்னான் சேந்தன் அமுதன். மதுரைல நடந்த யுத்தத்துக்கு அப்பறமா வீரபாண்டியன் மரணத்துக்கு பழி  வாங்க மன்னற கொள்ள சதி அப்படீன்னு சொல்லி மன்னற தஞ்சைக்கு கூட்டிட்டு வந்திட்டதாவும் அவரோட உடல் நிலை சரி இல்ல, பக்கவாதம் வந்து ரெண்டு காலும் சுவாதீனம் இல்லாம போச்சி, வைத்தியங்களும் இங்க தான் மன்னர் இருக்கணும்னு சொல்லிட்டாங்க. மன்னர் எதுவும் சொல்ல முடியல. அவருக்கு புத்தி சுவாதீனம் வேற இல்லாம போச்சின்னும் சொல்லிக்கறாங்க.
சேந்தன் அமுதனோட அம்மாக்கு காது கேக்காது, வாய் பேச வராது. சேந்தன் அமுதனுக்கு அவன் மாமன் மகள் பூங்குழலி மேல ஈடுபாடு. ஆனா, அவளுக்கு இவன் மேல ஈடுபாடான்னு தெரியல. 
அன்னிக்கே மன்னர கோட்டைக்குள பாத்திடணும்னு நெனைச்சான் வந்தியத் தேவன்.

Sunday, December 2, 2012

Stress decoded— relax and thrive this season

Stress decoded— relax and thrive this season


What's causing it?
The most common cause of stress is feeling like you have little or no control, but that sense of helplessness comes in many forms—like putting up with inebriated party guests and Uncle Wayne's off-color jokes.
Biologically, stress causes your body to shift into survival mode where it releases epinephrine and cortisol, a.k.a., "the stress hormones." When these hormones appear, they trigger the liver to release extra glucose for a boost of energy to fuel the "fight or flight" response.
This shift that stress brings upon the body causes your heart rate and blood pressure to rise. Trouble surfaces when you spend too much time in survival mode.
What's at risk?
The "breaking point" between a decent level of stress and stress overload can trigger numerous side effects. Since stress is a subjective phenomenon, its effects are specific to each individual. However, some common side effects include:
• a weakened immune system
• diabetes
• high blood pressure
• weight gain/loss
• stroke
• heart attack
• hypertension
• depression
• insomnia
• emotional disorders
What does stress have to do with my eyes?
Due to the interconnectedness of the body, most of the common side effects listed above can affect the eyes in one way or another. Joseph Udvari, a VSP doctor at West Hills Vision Center in Moon Township, PA explains a few of the possible repercussions:
"High blood pressure and hypertension can strain your eye's blood vessels and optic nerve, possibly resulting in bleeding, difficulty seeing clearly, or permanent vision loss. Strokes often leave their victims with vision impairments, and insomnia can lead to dry and bloodshot eyes." For a deeper look into diabetes' effects on the eyes, check out this month's Your Eye Health article.
How do I get rid of it?
Chronic and intense stress often leads its victims into self-destructive coping strategies, which don't usually solve the problem. Taking a self-constructive approach has better potential for success. Here are some simple pointers from Dr. Udvari on how to help yourself RELAX.
R - Rest
Aim to get seven to eight hours of sleep each night.
E - Eat Well
Balance out the holiday sweets with fruits and vegetables.
L - Laugh
Laughing releases endorphins, which are natural mood enhancers.
A - Accept
Accept the things you can't change—such as traffic jams and annoying coworkers.
X - Exercise
Like laughing, regular exercise also naturally improves your mood.

If you find that the stressors in your life are becoming too much to handle, contact your primary care physician as soon as possible to avoid a serious health condition. To prevent the effects of stress on your eyes, be sure to schedule your annual eye exam where your VSP doctor can look for potential health or vision problems.
Courtesy: http://email-vspenvision.com/newsletter.jsp?nn=vsp_feature_1211&s=Zr6A&i=878822654306

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஜெய்ஸ்ரீ !!


  

Saturday, December 1, 2012

குப்பை போட்டா...?




இடம்: சென்னை முத்துரங்கன் சாலை 
நன்றி: தினமலர் 
முழுமையான செய்தி/தகவல்: http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=833&nid=6483&cat=Album#.ULqJB6Uj5Ig

வாசகர் கார்டூன்




நன்றி: தினமலர் 

நோ கமெண்ட்ஸ்

மூலம் : IdlyVadai - இட்லிவடை: நோ கமெண்ட்ஸ்: மெயிலில் அனுப்பிய நண்பருக்கு நன்றி.