Memories

Sunday, December 30, 2012

சமீபத்தில் ரசித்த படம் - துப்பாக்கி



ரமணா, கஜினி மற்றும் 7-ஆம் அறிவு தந்த இயக்குனர் முருகதாஸ் கொடுத்திருக்கும் ஒரு விறு விருப்பான படம், நல்ல பொழுது போக்கு தந்த இயக்குனருக்கு நன்றிகள். சந்தோஷ் சிவனின் காமிரா அருமை, காட்சிகளுக்கு ஆழத்தை கொடுத்திருக்கிறது.

ஹீரோ "இளைய தளபதி" விஜய் வழக்கமான படி பில்ட்-அப் காட்சியில் அறிமுகமாகிறார். ராணுவத்தில் இருந்து  லீவில் வரும் காப்டனாக வருகிறார்.அவசர அவசரமாக ராணுவ சீருடை கூட மாற்றாமல் பெண் பார்க்க சென்று காஜல் அகர்வாலை பெண் பார்த்து ரிஜக்ட் செய்கிறார் (மோதலில் தானே காதல் வர வேண்டும்!). காமடிக்கு சத்யன் மும்பை போலீசாக வருகிறார். மொத்த கதையும் மும்பையில் தான் நடக்கிறது, நம்ம முருகதாஸ் தான் இந்தி இயக்குனர் ஆயிடாரே!

காப்டன் ஜகதீஷ் (விஜய் தான்) தன் நண்பன் பாலாஜி (சத்யன்) கூட பெண்கள் குத்துசண்டை பார்க்கும் படி ஆகிறது.அங்கு காஜல் அகர்வால் தான் குத்து சண்டை வீராங்கனை. காஜல் தன்னை எதிர்த்து போட்டியிடும் இன்னொரு வீராங்கனையை நாக்-அவுட் செய்ய விஜய்  காதலில் நாக்-அவுட் ஆகிறார். விஜய் தற்செயலாக ஒரு குண்டு வெடிப்பை பார்க்க நேரிடுகிறது, அதற்க்கு காரணமான ஸ்லீப்பர்-செல் ஆளை பிடித்து போலீசிடம்ஒப்படைக்கிறார். அங்கிருந்து தொடங்கும் விறுவிறுப்பு கடைசி வரை போகிறது.

விஜயின் உயர் அதிகாரியாக ஜெயராம் வருகிறார். காமடியில் சத்யனுக்கு ஒத்தாசை செய்கிறார். விஜயின் சாகசங்கள் தெரியாமலேயே கடைசியில் ரயில் ஏறுகிறார். வீணடிக்கப் பட்ட கதாபாத்திரம் இது. இவருடன் பேசுகையில் ஓவர் ஆக்டிங் செய்வதை தவிர்த்து இருக்கலாம். கதையின் துவக்கத்தில் வரும் மனோபாலா காஜல் அகர்வாலின் தந்தையாக வந்து ஒரு சீனுடன் காணாமல் போகிறார். விஜய்க்கு ஒரு பக்கம் காஜலுடன்  காதல் மறு பக்கம் தீவிரவாதிகளுடன் மோதல் என வேகமாக கதை நகருகிறது.

 விறு விருப்பான படமாக இருந்தாலும், லாஜிக் ஓட்டைகள் நிறைய: 
1. பல நாட்களாக கடத்தி வைக்கப் பட்ட ஸ்லீப்பர்-செல் ஆள் கைகட்டு அவிழ்க்கப் பட்டு தப்பி ஓட வசதியாக வைக்க பட்டிருப்பது, அவனுக்கே சந்தேகம் வர வைக்காதா? அவன் இங்கிலீஷ் படமே பாத்திருக்க மாட்டான் போலிருக்கிறது.
2. பல நாள் மயக்கத்தில் இருந்த ஸ்லீப்பர் செல் ஆள் வெளியே நடந்து ஒவ்வொரு இடத்துக்கு சென்று திட்டமிட்ட படி ஒவ்வொருத்தரிடமும் பேசுகிறான். இவனுடைய தலைவனாக வருகிறவன் இவன் கடத்தப் பட்ட விஷயத்தை யாரிடமும் சொல்ல வில்லை போல.
3. மிலிட்டரி இன்டலிஜன்ஸ் என்று சொல்லிக் கொள்ளும் விஜய் ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படையாக தான் அது தான் என்று சொல்லிக்கொள்ளும்படி நடப்பது நம்பும்படி இல்லை. இவருடைய உயர் அதிகாரியான ஜெயராம் தவிர மற்ற எல்லாருக்கும் இவர் பற்றி தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.
4. விஜய் தன்னுடைய டீமிடம் ஒரு 12 பேரை தீர்த்து கட்ட வேண்டும் என்று சொன்னதும், லீவில் வந்திருக்கும் எல்லாரும் ஒரு கேள்வி கூட கேட்டகாமல், விஜய் அவர்களுக்கு கொடுக்கும் துப்பாக்கியை எடுத்து சென்று எல்லரையும் தீர்த்து கட்டுவதும் லாஜிக்உதைக்கிற  மேட்டர்.
5. நாய் குலைத்தவுடன் வில்லனுக்கு தெரிந்து விடுகிறது ஹீரோ வந்து விட்டார் என்று. அதுவும் பொம்பிளை பிள்ளைகளை காப்பாத்த நேரத்துக்கு வந்து தானே ஆக வேண்டும். நிறைய தமிழ் படம் பாத்திருக்கிறார் வில்லன்.
6. கிளைமாக்ஸ் கப்பலில் தான் நடக்கும் என்று தெரிந்து இருக்கிறது விஜயை பின் தொடர்பவருக்கு. அதற்க்கு தயாராக வந்திருக்கிறார். 
7. ஒரு வெடிகுண்டில் அவ்வளவு பெரிய கப்பல் தீப்பிளம்பாக காணாமல் போவது சாத்தியமா? அணு குண்டு வைத்து தகர்த்திருப்பார்களோ?
8. யாருக்கும் தெரியாமல் தான் மிலிட்டரி இன்டலிஜன்ஸ் என்று சொல்லி சில தற்கொலைகளுக்கு காரணமாகிறார் விஜய். எப்படி வீடுகளுக்கு உள்ளே சென்றார், கள்ள துப்பாக்கி கொண்டு செல்கிறார், தற்கொலைக்கு அப்புறம் தப்பித்து வருகிறார். இயக்குனருக்கே வெளிச்சம்.
9. வீட்டுக்குள் சில தீவிர வாதிகளை குண்டு கட்டாக ஒத்தை ஆளாக தூக்கி கொண்டு வருகிறார், யாருக்கும் தெரியாமல் வைத்து இருக்கிறார், தப்ப விடுகிறார் அல்லது தூக்கி சென்று எங்கோ போடுகிறார்...எப்படி சாத்தியம்? விஜய்க்கே வெளிச்சம் (இயக்குனருக்கு ஏற்க்கனவே வெளிச்சம் போட்டாச்சுப்பா)


யாருக்காவது பதில் தெரிந்தால், திருத்தங்கள் தோன்றினால் பின்னூட்டத்தில் சொல்லுங்கப்பா...

No comments:

Post a Comment