Memories

Sunday, December 29, 2013

ஜென் கதைகள் - கோப்பை



ரொம்ப படித்த மேதை ஒரு ஜென் துறவி கிட்ட போனாரு : "குருவே, நான் படிக்காதது ஏதாவது இருந்தா அதை எனக்கு கத்துக் கொடுங்க" அப்படீன்னாரு. அதை கவனிக்காத துறவி அவரோட கோப்பைல தேநீர் ஊத்திட்டு இருந்தார். கோப்பை நிரம்பின பிறகும் இவர் ஊத்திரத்தை விடல. கோப்பை நிரம்பி வழிஞ்சது , இவரு நிறுத்தவே இல்ல. பண்டிதர் கேட்டாரு "குருவே, கோப்பை நிறைந்து விட்டது. இன்னும் இதில ஊத்த முடியாது"-ன்னு சொன்னாரு. குரு ஒரு ஸ்மைலோட சொன்னாரு:

"நிறைந்த கோப்பைல தேநீர் ஊத்த முடியாது; நிறைந்து இருப்பதாக எண்ணப் படும் மனது மேலும் அறிவை எடுத்துக்க முடியாது"

(இந்த கதையை நினைவு படுத்தும் வசனம் "avatar" படத்தில கூட வரும்.)

No comments:

Post a Comment