Memories

Friday, September 23, 2011

பேச்சி பிரமராக்கு

இது தான் செவல் பிரான்சேரி என்கிற கிராமத்தில் இருக்கக் கூடிய குல தெய்வத்தின் பெயர். இந்த குல தெய்வத்துக்கு வேண்டி நல்ல படியாக பிறந்ததால் பிரமநாயகம் என்கிற பெயரை வைத்தார்கள் மாமாவுக்கு. பாட்டி ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் போது அவர்களுக்கு ஒரு வித வலி வந்திருக்கிறது. குழந்தை தவறி விடும் என்று எல்லாரும் பயந்திருக்கிறார்கள். நேரம் இரவு நெடு நேரம் ஆகிவிட்டபடியால் ஆஸ்பத்திரிக்கும் தூக்கிட்டு போக முடியவில்லை. அப்போது ஒரு அம்மன் கொண்டாடி (கோவிலில் சாமி ஆடுபவர்களை இப்படி தான் பாட்டி சொல்லுவாள்)  வந்து குழந்தைக்கு ஒன்னும் ஆகாது, நல்ல படியாக ஒரு ஆண் பிள்ளை பிறக்கும், குழந்தைக்கு பிரமநாயகம் என்ற பெயரை வை என்று சொல்லி போய் விட்டாள்.  இப்படி வைத்தது தான் அந்த பெயர். 






No comments:

Post a Comment