Memories

Showing posts with label பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1. Show all posts
Showing posts with label பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1. Show all posts

Tuesday, April 22, 2014

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 27, 28, 29, 30





பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 27 - ஆஸ்தானப் புலவர்கள் 
ஒரு புலவர்கள் கும்பல் சுந்தர சோழர் இருந்த அறைக்குள்ள வந்தாங்க. அரசரும் வேற வழி  இல்லாம அவங்கள கொஞ்சம் கவிதைகள் சொல்லணும்னு கேட்டுகிட்டாரு. புலவர்களும் பாடல்கள் சொன்னாங்க. சின்ன பழுவேட்டரையர் வந்தியத் தேவனை அவர் கண் பார்வையில இருக்கட்டும் அப்படீன்னு அங்கேயே இருக்க வச்சுகிட்டாரு. இவனும் அரசர் கிட்ட முழுசா சொல்லிட்டு போலாம்ன்னு  இருந்துகிட்டான்.


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 28 - இரும்புப் பிடி 
சக்கரவர்த்தி அவரு தன்னோட பொண்ணு குந்தவை கிட்ட சொன்ன பாடல் ஒன்ன புலவர்கள் கிட்ட சொல்லிட்டு இருந்தாரு. வந்தியத் தேவன் அநிச்சையா தன் இடுப்பில் கட்டி இருந்த துணிய தொடப் போனது. இங்க குந்தவை தேவிக்கு கொடுக்க வச்சிருந்த ஒலைய வச்சிருந்தான். தொட்டவனுக்கு திக்குன்னு இருந்தது. ஓலை அங்க இல்ல, எங்கேயோ தவற விட்டுட்டான். 

புலவர் கூட்டம் எல்லாம் முடிஞ்சி கிளம்பும் போது கூட்டத்தோட கலஞ்சு எஸ்கேப் ஆய்டலாம்னு டிரை பண்ணினான். அப்போ ஒரு கை அவன வலுவா பிடிச்சது - அது சின்ன பழுவேட்டரையர் தான்.  

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 29 - நம் விருந்தாளி 
சக்கரவர்த்தி கிட்ட வந்தியத் தேவனை தள்ளிகிட்டு பொய் நிருத்தினாறு சின்ன பழுவேட்டரையர்: 'அரண்மனை வைத்தியர் அரசருக்கு அபாயம் இல்லங்கராரு, சோதிடர்கள்  அபாயம் இல்லைங்கறாங்க. ஆனா இந்த தம்பி ஏதோ அபாயம் அப்படீன்னு சொல்லிச்சி. என்னத்த பத்தி சொன்ன?' அப்படீன்னு கேட்டாரு.
வந்தியத்தேவன் ரொம்ப உஷாரு பார்ட்டி. கவுக்க முடியுமா? 'நானு வாணர் குலத்தோட கடைசி துரும்பு. ஒரு காலத்தில நாங்க அரசர்களா இருந்தோம். பட் இப்போ எனக்கு இருக்க வீடு கூட இல்ல. அதனால "அபயம், அரசர் கிட்ட அபயம்" அப்படீன்னு கேட்டு ஒரு அஞ்சி கிராமமாவது கொடுத்தா புண்ணியமா இருக்குமின்னு கேட்டேன்' அப்படீன்னு பிளேட்ட மாத்தி  போட்டான்.
பழுவேட்டரையர் மட்டுமில்ல சக்கரவர்த்தியும் அப்படியே கவுந்திடாங்க. மன்னர் சின்ன பழுவேட்டரையர் கிட்ட 'இந்த பிள்ள நம்ம விருந்தாளி. இன்னிக்கி இவன் இங்கயே தங்கட்டும்'-ன்னார் 




பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 30 - சித்திர மண்டபம்
சின்ன பழுவேட்டரையர் வந்தியதேவனை அவரோட சேவகர்கள் கிட்ட நல்ல படியா கவனிக்க சொல்லிட்டு திரும்ப வந்தார். வரும் போது ஒரு சேவகன் ஒரு ஓலை சுவடிய அவர் கிட்ட கொடுத்தான், மண்டபத்துக்கு வெளிய கிடைச்சதுன்னு சொன்னான். இவர் என்னன்னு பார்த்தார் : குந்தவை தேவிக்கு அவரோட அண்ணன் ஆதித்த கரிகாலர் அவர் கைப்பட எழுதிய ஓலை. 'அந்தரங்க காரியங்களுக்கு ஒற்றன் தேவைன்னு கேட்டாயில்ல, இவன் தான் அவன்' சின்ன பழுவேட்டரையர் அப்படியே ஷாக் ஆய்டாறு.

வந்தியத் தேவன் சாப்பிட்டு மண்டபத்தை வேடிக்கை பாத்தான். நெறைய பெயண்டிங்க்ஸ் வரஞ்சிருந்தாங்க சுவர்ல. அதில இருந்து சுந்தர சோழரோட ப்ளாஷ் பேக் தெரிஞ்சிகிட்டான்: சோழ சக்கரவர்த்தி பராந்தகர்க்கு 2 பசங்க. மூத்தவரு ராஜாதித்யர். ராஷ்டிர கூடர்களோட நடந்த சண்டைல வீர சொர்க்கம் அடஞ்சிட்டாரு (அப்படீன்னா சண்டைலே சாவறது). 





இவரோட தம்பி கண்டராதிடர் அவர் அப்பா ஆசைப்படி ராஜாவானாறு. ஏன்னா அண்ணனுக்கு கொழந்த இல்ல. இவரு பக்தியில முழுகி போய் இருந்தாரு அப்படீங்கரதால அவரு தம்பி அரிஞ்சயர் அரசாங்கத்த கவனிச்சுகிட்டாறு. ராஷ்டிர கூடர்கள் கூட சண்டை போட்டுஜெயிச்சாரு. நல்ல திறமை இருந்ததாலும் அண்ணன் கண்டராதித்தர் கல்யாணம் செஞ்சுக்காது இருந்ததாலும் தம்பிய பட்டத்துக்கு இளவரசரா அனௌன்ஸ் பண்ணிட்டாரு.  தம்பிக்கு கல்யாணம் ஆயீ குழந்தை இருந்ததால அரிஞ்சயருக்கும் அப்பறம் அவரு வாரிசுகளே பட்டத்துக்கு வரணும்னு அக்ரீமெண்ட் போட்டுடாரு அமைச்சர், மற்ற குறுநில ராஜாக்கள் கூட. இவங்கள எல்லாம் ஒரு பாடு பட்டு சம்மதிக்க வச்சாரு. எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. ரொம்ப நாள் கழிச்சு மழவராயர் அப்படீங்கற குறுநில மன்னரோட மகளை பாத்து பிடிச்சுப் போய் கல்யாணம் செஞ்சுகிட்டாறு. மதுராந்தகன் என்கிற மகன் பிறந்தான் இவங்களுக்கு. முறைப் படி பாத்தா மதுராந்தகன் தான் பட்டத்துக்கு வரணும், அரசரோட மகன் அப்படீங்கரதால. ஆனா மன்னரோட அரேஞ்ச்மேன்ட்ஸ் படி அரிஞ்சயர் பட்டத்துக்கு வந்தார், மன்னர் இறந்து போனப்பறம். இவரும் ரொம்ப நாள் வாழல. அப்பறம் இவர் பையன் சுந்தர சோழருக்கு பட்டம் சூட்டினாங்க எல்லாரும். சுந்தர சோழர் திறமையா ஆட்சிய நடத்தினாரு. அவரு பையங்க ஆதித்த கரிகாலர் & அருண்மொழி வர்மர் ரொம்ப சூப்பர். ஒருத்தர் நார்த் லயும் ஒருத்தர் சௌத்லயும் நடக்கற போர்கள நடத்திட்டு இருந்தாங்க.

(உறவு முறை விளக்கத்துக்கு இந்த பதிவை http://www.piramu.tk/2014/04/blog-post_14.html பாருங்க.
...அப்பறம் பின்னூட்டம் போட்டு உங்க கருத்த கக்குங்க பாஸ்!!)

இத்தோட "பாகம் 1  - புது வெள்ளம்" முடிந்தது.

Monday, April 14, 2014

Sunday, April 13, 2014

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 25, 26




பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே 
பனை சின்ன மோதிரம் சக்தி உள்ளதா இருந்தது. போற இடமெல்லாம் வழி  கிடைச்சது. பெரிய பழுவேட்டரையர் இன்னும் திரும்ப வரல்லன்னும் சின்னவர் அரண்மனைல இருக்கராருன்னும் தெரிஞ்சுகிட்டான். சக்கரவர்த்தி இருக்கற மாளிகைய கண்டுபிடிக்கறது ஒன்னும் பெரிய விஷயமா இல்ல. ஊரிலேயே பெரிய புலி கொடி பறக்கற மாளிகை தான் இவன் போக வேண்டிய இடம். எப்படியும் சக்கரவர்த்திய நேர்ல பார்த்து ஓலையகொடுத்திடனும்னு நெனைச்சான். மாளிகைய கண்டுபிடிச்சான்; காவலாளிகள் தடுக்கும் போது பனை சின்ன மொதிரத்த காமிச்சான். வழி  கிடைச்சது; உள்ள நுழைஞ்சான். சக்கரவர்த்தி இருக்கற இடத்த எப்படி கண்டு பிடிக்கறது? பெரிய புலவர் கூட்டம் அந்த சமயத்திலே உள்ள வந்தது. காவலாளி ஒருத்தன் இன்னொருத்தனுக்கு புலவர்கள சின்ன பழுவேட்டரையர் கிட்ட கூட்டிட்டு போக சொன்னான். இவங்க கூடவே போய்டனும்னு முடிவு பண்ணினான் வந்தியத்தேவன்.

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 26 -அபாயம் ! அபாயம் !!
புலவர்களுக்கு முன்னாலேயே கதவு வழியா உள்ளே போனான் வந்தியத்தேவன். உள்ள சிம்மாசனத்தில இருக்கறவர் சின்ன பழுவேட்டரையரா இருக்கணும்னு நெனைச்சான். காஞ்சிபுரத்தில இருந்து இளவரசர் அனுப்பினதாகவும் சக்கரவர்த்திக்கு ஓலை கொண்டு வந்திருக்கறதா சொன்னான். உடனே அந்த ஒலைய  கேட்டு வாங்கி இவன் மறுக்கறத கண்டுக்காம படிச்சாரு சின்ன பழுவேட்டரையர். புதிசா ஒன்னும் இல்லன்னு சொல்லிகிட்டாரு. சக்கரவர்த்தி கிட்ட நேர்ல ஒலைய கொடுக்கணும்னு உத்தரவு-ன்னான். இளவரசரா என் மேல சந்தேகப் பட்டு இப்படி சொன்னாருன்னு கேட்டாரு சின்ன பழுவேட்டரையர். அவரில்ல உங்க அண்ணன் தான் அப்படி சொன்னாருன்னு பிளேட்ட மாத்தி போட்டான் வந்தியத் தேவன். இத ஏன்  முன்னாடியே சொல்லலே அப்படீன்னு சொல்லிட்டு சக்கரவர்த்தி கிட்ட அனுப்பினாரு சின்னவரு. நோயில கிடந்த சுந்தர சோழ சக்கரவர்த்திய பார்த்து வந்தியத் தேவனுக்கு ரொம்ப கஷ்டமா போயிட்டது.  இளவரசர் தந்த ஓலைய கொடுத்தான்.  'இங்க உங்கள அபாயம் சுத்தி இருக்கு. அபாயம்! அபாயம்!!" அப்படீன்னு சொல்லிட்டு இருக்கும்போது புலவர்கள கூட்டிட்டு சின்ன பழுவேட்டரையர் வந்திட்டார். இவன் கடைசீய சொன்ன வர்ட்ஸ் அவர் காதில விழுந்திட்டது. டெரர் ஆய்ட்டாரு.  

Sunday, December 9, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 21, 22, 23, 24

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 21 - திரை சலசலத்தது  


திருவையாறு வழியா தஞ்சைக்கு குதிரைல வந்திட்டு இருந்தான் வந்தியத் தேவன். தன காரியங்கள எப்படி முடிக்க போறோம், மகாராஜாவ எப்படி பாக்க முடியும் எல்லா தடைகள் தாண்டி அப்படீன்னு நெனைச்சுட்டே வந்திட்டு இருந்தான். தூரத்தில பழுவேட்டரையரோட பல்லக்கு போயிட்டு இருந்தது. அதில பழுவேட்டரையர், இல்ல மதுராந்தகர் இருக்கலாம். மதுராந்தகர் இருந்தா அவர் கூட பழகி அப்படியே கோட்டைகுள்ள போய்டலாம் அப்படீன்னு நெனைச்சான். வேகமா போய் குதிரையால பல்லக்கை மோதினான்; உடனே கத்தினான்: "மஹாராஜா! மஹா ராஜா!! பல்லக்கு தூக்கரவங்க என்னோட குதிரைய இடிக்கறாங்க. ஐயோ ! ஐயோ!!" பல்லக்கோட திரை மெதுவா விலகிச்சி.

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 22 - வேளக்கார படை  
திரை விலகரத பாத்துட்டு உடனே இறங்கி கம்ப்ளைன்ட் செய்ய போனான் வந்தியத் தேவன். உள்ள இருந்தது மதுராந்தக தேவர் இல்ல, ஆனா ஆம்பளைங்கள கவர்ந்து பைத்தியமாக்குற அழகும் வசீகரமும் உள்ள பெண். ஷாக்  ஆகி நின்ன இவன வீரர்கள் சுத்திகிட்டாங்க. அதிசயமா இவனுக்கு மூள  வேலை செஞ்சது. பழுவூர் இளையராணிய பாக்கறதுக்காக இவளவு தூரம் வந்தான் அப்படீன்னும், ஆழ்வார்க்கடியான் அனுப்பி வச்சதாகவும் சொன்னான்.  இளையராணி ஸ்மைல் பண்ணினா மெதுவா, தன்னுடைய முத்திரை மோதிரத்தை கொடுத்து அப்பறமா வர சொன்னா. சாயங்கால வேளைலே மன்னரோட பாடி கார்ட்ஸ் - அதான் வேளக்கார படை - கோட்டைகுள்ள இருந்து வெளிய போனாங்க (அத்தியாய தலைப்ப மாட்ச் பண்ணனுமே..)


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 23 - அமுதனின் அன்னை  
ஊரை சுத்தி பாத்துட்டு மறுநாள் கோட்டைகுள்ள போகலாம்னு நெனைச்சான். அப்ப சேந்தன் அமுதன் என்கிற, கோவில்ல வேலை செய்யற இளைஞன் அறிமுகம் ஆனான். அவன் வீட்ல தங்கினான் வந்திய தேவன், அன்னிக்கி இராத்திரி. நெறைய விஷயங்கள் தெரிஞ்சது - மதுராந்தக தேவர் சின்ன பளுவேட்டரைரோட  பொன்னைத் தான் கல்யாணம் செய்திருக்காரு, இது நெறைய பேருக்கு தெரியாது. சின்ன பழுவேட்டரையர் தான் கோட்டை காவலுக்கு பொறுப்பு. பெரியவரும், சின்னவரும் கோட்டைகுள்ள மன்னர் கூட தான் தங்கி இருக்காங்க. இன்னும் முதல் மந்திரி அநிருத்த பிரம்மராயரும் மற்ற மந்திரிங்களும், பளுவேத்ட்டரைரோட வேலை செயாரவங்களும் உள்ள தான் தங்கி இருக்காங்க. 


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்  
ரெண்டு பழுவேட்டரையரும் தான் நாட்ட ஆளுராங்கன்னும், சக்கரவர்த்திய அவங்களோட கட்டுபாட்டில தான் வச்சிருக்காங்கன்னும் சொன்னான் சேந்தன் அமுதன். மதுரைல நடந்த யுத்தத்துக்கு அப்பறமா வீரபாண்டியன் மரணத்துக்கு பழி  வாங்க மன்னற கொள்ள சதி அப்படீன்னு சொல்லி மன்னற தஞ்சைக்கு கூட்டிட்டு வந்திட்டதாவும் அவரோட உடல் நிலை சரி இல்ல, பக்கவாதம் வந்து ரெண்டு காலும் சுவாதீனம் இல்லாம போச்சி, வைத்தியங்களும் இங்க தான் மன்னர் இருக்கணும்னு சொல்லிட்டாங்க. மன்னர் எதுவும் சொல்ல முடியல. அவருக்கு புத்தி சுவாதீனம் வேற இல்லாம போச்சின்னும் சொல்லிக்கறாங்க.
சேந்தன் அமுதனோட அம்மாக்கு காது கேக்காது, வாய் பேச வராது. சேந்தன் அமுதனுக்கு அவன் மாமன் மகள் பூங்குழலி மேல ஈடுபாடு. ஆனா, அவளுக்கு இவன் மேல ஈடுபாடான்னு தெரியல. 
அன்னிக்கே மன்னர கோட்டைக்குள பாத்திடணும்னு நெனைச்சான் வந்தியத் தேவன்.

Sunday, November 18, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 19, 20


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 19 - ரணகள அரண்யம்  




ப்ரதீவிபதி அப்படீங்கற கங்க நாட்டு மன்னன், முன்னாடி சோழ ராஜா கூட சேந்து பாண்டிய ராசாவ எதிர்த்து போர் நடத்தினான். அதில ரொம்ப வீரமா சண்ட போட்டு வீரமரணம் அடைஞ்சான். அவனுக்கு பள்ளிப் படை கோவில் ஒன்னு கட்டினாங்க சண்டை நடந்த இடத்தில. வருஷங்கள் கழிஞ்சு அந்த இடம் காடு மண்டிப் போச்சு. பிரதிவீபதியை பகைவன்னு சொன்னா, பாண்டியர்கள் தான் சொல்லணும்..புரிஞ்சதா? குறுக்கு வழியில பொய் ஆழ்வார்க்கடியான் பள்ளிப் படை கோவில் மேல ஏறி ஒளிஞ்சுகிட்டான், ஈசியா பாத்துட முடியாது அவன. ரொம்ப நேரம் ஆச்சு எதுவும் நடக்கல, சரி திரும்ப போய்டலாம்னு நெனைக்கும் போது தூரத்தில தீவட்டி வெளிச்சம் தெரிஞ்சது, 2 பேரு வந்தாங்க. கொஞ்ச நேரத்தில இன்னும் 2 பேரு அப்பறம் ஒருத்தன் வந்தான். யாருடைய அடையாளமும் சரியா தெரியல, இவன் ஒளிஞ்சு இருந்த இடம் தூரமா போச்சு. அரகொறையா கேட்டதை தெரிஞ்சது என்னான்னா: ரவிதாசன் அப்படீங்கறவன் தான் அவங்க ஹெட். அவன் கிட்ட பளுவேட்டரயரோட தங்க காசுங்க இருந்தது. பக்கத்தில போனா கொஞ்சமாவது அவங்க பேசறது சரியாய் காதில விழும்னு நெனைச்சான். மெதுவா இறங்கி பக்கத்தில போனான்.




பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 20 - "முதற் பகைவன்!" 



ரவி தாசன் எதோ பிளான் சொல்லிட்டு இருந்தான்: 'ரெண்டு டீமா பிரிஞ்சு ஒன்னு இலங்கைக்கும் இன்னொன்னு ஆதித்த கரிகாலன் இருக்கற தொண்டை மண்டலம் போகணும். வெயிட் பண்ணி நல்ல சமயத்தில காரியத்த முடிக்கணும்.'

அப்ப அங்க இடும்பன் காரியும் வந்து சேந்தான். சம்புவரையர் மாளிகைல நடந்ததை எல்லாம் சொன்னான். இத எல்லாம் கவனிச்ச ஆழ்வார்க்கடியானையும் இவன் பாத்துட்டத்தையும் சொன்னான். ஆழ்வார்க்கடியானை இவங்க ஆளுன்னு நேனைச்சதையும் இவங்க முத்திரைய செஞ்சு காட்டினதையும் சொன்னான். ஆழ்வார்க்கடியானுக்கு அது புரியாததனால அவன் வேற ஆளுன்னு பபுரிஞ்சு கிட்டதையும் சொன்னான்.

ரவி தாசன் ரொம்ப கோபப் பட்டான். யாரு கிட்டயும் ரகசிய சமிக்ஜய செய்ய கூடாதுன்னு கட்டளை போட்டான். ஆழ்வார்க்கடியான் தான் முதல் எதிரி, நம்மள காப்பாத்திற தேவிய கொண்டு போக பாக்கறவன். அவன எங்க பாத்தாலும் கொன்னு போடுங்க அப்படின்னு ஆர்டர் போட்டான். ஆழ்வார்க்கடியான் ஒரு ஒற்றனும் கூட, ஆனா யாருடைய ஒற்றன் என்கிற விபரம் தெரியல அப்படீன்னான்.

ஆழ்வார்க்கடியானுக்கு தும்மல் வந்திட்டு, தோள் துண்ட கவ்விகிட்டு தும்மினான், ஆனாலும் சத்தம் கேட்டிருச்சி. ரவி தாசன் ஆள் அனுப்பி என்ன சத்தம்னு பாக்க சொன்னான். அங்க இருந்து ஒரு வழியா தப்பிச்சு வந்தான் ஆழ்வார்க்கடியான்.

Sunday, September 9, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 17, 18


பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது! 


நாம ஒரு பிளாஷ் பேக்-இருந்து இன்னொன்னு போய் பல தாண்டிட்டோம். என்னதான் வானதிய  குந்தவைக்கு பிடிச்சாலும், அவளோட இந்த பயந்த சுபாவம் பிடிக்கல. எதுக்கெடுத்தாலும் பயந்து மயக்கம் போட்டிடுவா. அது தெரிஞ்ச மற்ற இளவரசிகள் செஞ்ச ஏற்பாடு தான் பொம்மை முதலை. இதில அவனா மாட்டி அவமானப் பட்டுட்டான் நம்ம வந்தியத் தேவன். அவன சமாதானப் படுத்த முயற்சி செஞ்சா குந்தவை. ஆனா மற்ற இளவரசிகள் சிரிச்சிக்கிட்டே இருந்தாங்க. கோவத்தோட பொம்மை முதல மேல இருந்த வேல உருவி எடுத்தான்; குதிச்சி ஏறினான் குதிரை மேல; சுள்ளுன்னு அடி கொடுத்தான் குதிரைக்கு...துள்ளி பறந்தது குதிரை! குந்தவை பாத்திட்டே இருந்தா.

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 18 - இடும்பன் காரி 



கொள்ளிடத்து கரைலே வந்தியத் தேவனுக்கு குதிரை ஏற்பாடு செஞ்சு கொடுக்க வந்த ஆளு பேரு தான் இடும்பன் காரி. இவன் கந்தமாறன் வீட்லே வேலையாளா இருந்தான். இவன் வந்தியத் தேவனை அனுப்பிச்சுட்டு திரும்ப வரும் போது ஆழ்வார்க்கடியானை ஒரு மரத்துக்கு கீழ பார்த்தான். ஆழ்வார்க்கடியான் தன்னாலேயே புலம்பிக்கிட்டு இருந்தான் (வந்தியத் தேவன் யாரு என்னன்னு ஒண்ணுமே கண்டு பிடிக்க முடியல...இவன் நல்லவனா..கெட்டவனா ? அப்படீன்னு தான் புலம்பினான்)
அதுக்குள்ளே இடும்பன் காரி பக்கத்தில வந்திட்டான்; வலது உள்ளங் கை மேல் இடது கைய வச்சு ரண்டு கட்டை விரலையும் ஆட்டினான். ஆழ்வார்க்கடியான் என்ன பண்ணினே நீ? அப்படீன்னு கேட்டான், இடும்பன் காரி சமாளிச்சான், திரும்பப் போறதா சொல்லிட்டு கிளம்பினான். உடனே ஆழ்வார்க்கடியான் என்கிற திருமலையும் பக்கத்திலே இருக்கற ஒரு ஊரு பேரு சொல்லிட்டு அங்க போறதா சொல்லிக் கிளம்பினான். இடும்பன் காரி கொஞ்சம் தள்ளிப் போனதும் திரும்ப வந்து பக்கத்தில இருந்த மரத்து மேல ஏறி ஒளிஞ்சுகிட்டான் வெயிட் பண்ணினான். எதிர் பார்த்த மாறியே இடும்பன் காரி திரும்ப வந்திட்டு இருந்தான். மரத்துக்குக் கீழ வெயிட் பண்ணினனான். ரொம்ப நேரம் போச்சு. நேரம் கழிச்சு இன்னொருத்தனும் வந்து மரத்துக்கு பக்கத்திலே நினுகிட்டான். இடும்பன் காரி மெதுவா அவன் பக்கத்திலே போய் ஆழ்வார்க்கடியான் கிட்ட செஞ்சு காட்டின மீன் சிக்னல  செஞ்சான். அவனும் அந்த சிக்னல பதிலுக்கு செஞ்சு காமிச்சான். வந்தவன் பேரு சோமன் சாம்பவன். ரெண்டு பேரும் பகைவனோட பள்ளிப்படைக்கு போறதா சொல்லிக் கிளம்பினாங்க. அந்த திசைலே இருந்த திருப்புறம்பியம் அப்படீங்கற இடத்தில இருந்த கங்க மன்னன் பிருதிவீபதி-யோட பள்ளிப்படக்குப் போறதா ஊகிச்சுகிட்டான்  ஆழ்வார்க்கடியான். 

Wednesday, March 21, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 16

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 16 - அருள்மொழி வர்மர் 






கி.பி. 970 வாக்கில் சுந்தர சோழ சக்கரவர்த்தியோட சாம்ராஜ்யம் செழிச்சு வளர்ந்து இருந்துச்சு. ஆனா இவர் பட்டத்துக்கு வரும்போது நெலமை வேறயா இருந்தது. வடக்கிலும் தெக்கிலும் விரோதிகள் இருந்தாங்க. தெக்க படை எடுத்து போனாரு. அங்க இருந்த பாண்டிய ராசாக்கும் இவருக்கும் சேவூர் அப்படீங்கற இடத்திலே சண்டை நடந்துச்சு. சிங்கள மன்னன் மகிந்தன் என்கிறவன் பாண்டியர்களுக்கு உதவியா பெரிய படைய அனுப்பி இருந்த்தான். பாண்டியர் படையும், சிங்கள படையும் சின்னா பின்னமாயிட்டது. பாண்டிய மன்னன் ஓடி ஒளிஞ்சுகிட்டான். சிங்களர்கள் படை அனுப்பி பாண்டியர்களுக்கு உதவி செய்றது வழக்கமா ஆய்ட்டதால, அத தடுக்க, மகிந்தனுக்கு புத்தி புகட்ட ஒரு சோழ சைன்யம் (மிலிட்டரி) இலங்கைக்கு போச்சு, 
கௌம்பாளூர் சிற்றரசன் பராந்தகன் சிறிய வேளாண் (இவர் தான் வானதியோட அப்பா) தலைமைல. சோழர் படை பயணத்துல வந்த சிரமங்கள் காரணமா பிரிஞ்சு போச்சு. கரை இறங்கின சின்ன படைய, தன்னோட பெரிய படைய அனுப்பி துப்புரவா அழிச்சான், மகிந்தன். தோத்து போவோம்ன்னு தெரிஞ்சும் திரும்பி ஓடாம, வீரமா சண்டை போட்டு உயிரை விட்டான், பராந்தகன் சிறிய வேளாண். சோழரோட பெரிய படை சிலோன் பாட்டுன்னு தெரிஞ்சு படை திரட்டி வந்தான் பாண்டிய மன்னன். இந்த தடவ பாண்டிய சேனை மட்டுமில்ல பாண்டிய ராஜாவும் அழிஞ்சான். இந்த சண்டைல சுந்தர சோழரோட மூத்த பையன், பட்டத்து இளவரசர் (14 வயசு தான் ஆய்ருந்தது அப்போ), ஆதித்த கரிகாலர் தலைமைல தான் நடந்தது. 


பராந்தகன் சிறிய வேளாண் இறந்ததுக்கு பழி வாங்கவும், மகிந்தனுக்கு புத்தி வர்றதுக்கும் அவன தண்டிக்கணும்னு நினைச்சாங்க சோழ ராஜ்யத்தோட வீராதி வீரர்கள் எல்லாரும். யாரோட தலமைலே படைய அனுப்பலாம்னா எல்லாரும், நான் நீன்னு போட்டி போட்டுட்டு இருந்தாங்க. ராஜ்யமே பிரிஞ்சு போய்டும்ன்னு பயந்தாரு சுந்தர சோழ சக்கரவர்த்தி. ஆதித்த கரிகாலன் வட திசைலே இருந்து வந்த ராஷ்டிரகூடர்கள அடக்க படையோட இருந்தாரு. இந்த நிலமைய சமாளிக்க ஹெல்ப் பண்ண வந்தாரு சின்னவர், அருண்மொழி வர்மர். 20 வயசு கூட ஆகல, ஆனா இவரு தலைமைய மற்ற சிற்றரசர்கள் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்கன்னு நினைச்சாரு சுந்தர சோழர்.  சின்னவர் படை நடத்தின விதமே வித்யாசமா இருந்தது, அத விட வித்யாசமா இருந்தது அவரோட போர்த்தந்திரங்கள். சரியான நேரத்தில போர்த் தளவாடங்கள் (supply, reinforcements) வரல்ல. இதனால திரும்பி வந்து அப்பா கிட்ட பேசி ஏற்பாடுகள் செஞ்சுகிட்டாரு. திரும்பி போறப்போ அரண்மனை பெண்கள் ராஜ மரியாதை செஞ்சாங்க. கிலே தீபத் தட்ட எடுத்து ஆரத்தி எடுத்தாங்க. வானதி நடுங்கி தீபத் தட்ட கீழ விட்டா. இளவரசர் ஸ்மைல் பண்ணிட்டு போயிட்டாரு. அபசகுனம்னு சொன்னாங்க எல்லாரும், இளவரசருக்கு எதனா ஆகலாம்னாங்க. இவ டென்சன் அதிகமா ஆயி மயங்கி விழுந்தா. சலசலப்புக்கு காரணம் கேள்விப்பட்டு உள்ள வந்து பாத்தாரு அருள்மொழி வர்மர். குந்தவை வானதி மயக்க தெளிய முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க. இவளோட அப்பா பத்தி தெரிஞ்ச உடனே ரொம்ப இரக்கப் பட்டாரு. இதே போல இலங்கைக்கு போன தன்னோட அப்பா நியாபகம் வந்திருக்கும்னு நினைச்சாரு. வானதி மேல தனி அன்பு வந்தது இளவரசருக்கு. அக்கா கிட்ட, அம்மா அப்பா இல்லாத அவள நாமதான் பாத்துக்கணும் அப்படீன்னார். 
 (யோசிச்சு பாருங்க, அவளுக்கு பிரியமான அப்பா இலங்கைக்கு சண்டைக்கு போகும் போது இப்படி தான் அனுப்பி வச்சுருப்பா, அவரு திரும்ப வரல. அடுத்து ரொம்ப ஆசை படர அருள்மொழி வரமர இலங்கைக்கு அனுப்பி வைக்கறா)
குந்தவைக்கு ஏதோ புரிஞ்சது. வானதி மேல தனி பிரியம் அப்போ இருந்து. இதெல்லாம் கவனிச்ச மத்த இளவரசிகள் எல்லாருக்கும் வானதி மேல பொறாமை வந்தது.

Sunday, March 4, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 14, 15

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை 




வந்தியத் தேவன் குதிரை மேல ஏறி ஆத்தங்கரை வழிய போயிட்டு இருந்தான்."ஐயோ முதலை ! முதலை !! காப்பாத்துங்க" ன்னு ஒரு பொம்பளை கத்துறது கேட்டுச்சு. தூரத்திலே பெண்கள் ஆத்துலே குளிச்சுட்டு இருந்தாங்க. பக்கத்து மர நிழல்லே முதல ஒன்னு பாதி தண்ணிலையும் பாதி தரைலையும் வாய அகலமா திறந்து இருந்தது. முன்னாடி ஒரு பொண்ணு. கொஞ்சமும் யோசிக்கல, வந்தியத்தேவன். வேல உருவினான், வீசினான் முதலை மேல, தப்புமா குறி ? முதல முதுகில குத்தி நின்னது வேல். வாள உருவிகிட்டு  குதிரைல இருந்து ஜம்ப் பண்ணி முதலைய பாத்து ஓடினான். எல்லாம் ஒரு செகண்ட்ல நடந்திட்டு. திக்குன்னு பாத்திட்டு இருந்த பெண்கள் மெதுவா சிரிக்க ஆரமிச்சாங்க. ஒருத்தி முன்னாடி வந்து "ஐயா! உங்களுக்கு ரொம்ப நன்றி. ஆனா சிரமப் பட வேண்டாம்"ன்னா. ஒன்னும் புரியல இவனுக்கு.




அத்தியாயம் 15 - வானதியின் ஜாலம் 



அரசிளம் குமரிகள் ரெண்டு பேரு சோதிடர பாக்கறதுக்கு வந்தாங்க இல்லையா ? ஆனா நெறைய இளவரசிகள் இவங்க கூட வந்திருந்தாங்க. அவங்கள விட்டுட்டு குந்தவை வானதிய மட்டும் கூட்டிட்டு வந்தாங்க. அந்த பெண்கள் எல்லாம் வானதி பத்தி புரணி பேசிட்டு இருந்தாங்க. வானதிக்கு அருள்மொழி வர்மர் மேல இருந்த காதல் பத்தி பொறாமையா பேசிட்டு இருந்தாங்க. குந்தவை கூட இதுக்கு சம்மதிச்சதா பேசிகிட்டாங்க. 

Sunday, February 26, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 13

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 13 - வளர்பிறை சந்திரன் 







வந்தியத் தேவன் அந்த பெண்கள் யாருன்னு சோதிடர் கிட்ட விசாரிச்சான், அவரு பிடி கொடுக்கல. பலரும் வந்து போவாங்க, யார் பத்தியும் யார் கிட்டயும் சொல்லறதுக்கு இல்லன்னு சொல்லிட்டார். இவரு கிட்ட நம்ம பருப்பு வேகாதுன்னு நினைச்சு நேரடியா கேட்டான்: "நான் போற காரியம் நல்ல படியா நடக்குமா?"
இவன் பேரு கேட்ட உடனே அவனோட ஜாதகத்த பொட்டிலே இருந்து எடுத்துக்கிட்டாரு. இவன் தஞ்சாவூரு போகனும்னும், அங்க சக்கரவர்த்திய பாக்கனும்னும், பழுவேட்டரையர் தடையா இருப்பாங்கன்னும் நெனைச்சு கேட்டான்.
ஜோசியரும் குறிப்பா பதில் சொல்லிட்டு இருந்தாரு. இளவரசர் அருள்மொழி வர்மர் கூட சேந்துக்க சொன்னாரு.  

Monday, January 30, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 11

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 11 - திடும் பிரவேசம் 



வானதியோட சாதகத்த பாத்த ஜோதிடர் அப்படியே திகைச்சுட்டாறு. குந்தவைய பாத்து சொன்னாரு: "ரொம்ப அதிர்ஷ்டக்கார ஜாதகம் அம்மா இது, உங்களை விட ஒரு படி மேலானது."  வானதியோட சாதகத்த பாத்து அவளுக்கு எப்போ கல்யாணம் வரும், மாப்பிள்ளை எங்க இருந்து வருவார் அப்படீன்னு கேட்டாரு குந்தவை. ஜோதிடர் பேசறதுல கில்லாடி. புரியற மாறி பேசுவாரு ஆனா ஒன்னும் தெளிவா சொல்ல மாட்டாரு.   
குந்தவை இன்னும் கேட்டா: "ஜோதிடரே கொஞ்ச நாளா வானத்தில ஒரு வால் நட்சத்திரம் தெரியுது. அதனால ராஜ்யத்துக்கு ஆபத்துன்னு ஜனங்கள் பேசிக்கறாங்களே...அத பத்தி  பாக்க முடியுமா"ஜோதிடர் பதில் சொல்லாம தப்பிக்க பாத்தாரு. குந்தவை விடுவாளா...கடைசீல சொன்னாரு: "ராஜாவுக்கு ஒரு கண்டம் இருக்கு. துர்க்கா தேவி அருளால சரியாகும்" அப்படீன்னார்.
அப்ப வாசல்ல சத்தம் கேட்டது, தடபுடல் தெரிஞ்சது. எதோ சொல்லிக்கிட்டே வந்தியத் தேவன் உள்ள வந்தான் (நினைவிருக்கா இவன் படகுல ஏறுனான் கடைசீயா) பெண்கள பாத்ததும் அப்படியே நின்னுட்டான்..பின்னாடியே ஜோதிடரோட சீடன் வந்தான். அவன் கிட்ட வந்தியத் தேவன் "உள்ளே பெண்கள் இருக்காங்கன்னு சொன்னா வந்திருக்க மாட்டேன் இல்லே" அப்படீன்னு சொல்லிட்டு வெளியே போய்ட்டான்.
பெண்கள் ரெண்டு பெரும் முடிச்சுட்டு வெளியே வந்தாங்க. ஒதுங்கி நின்ன வந்தியத் தேவன் சொன்னான் "உள்ளே பெண்கள் இருக்காங்கன்னு இந்த புத்திசாலி சொல்லலே, அதான் வந்திட்டேன், மன்னிச்சுக்கோங்க"ன்னான். அதுக்கு பதில் சொல்லாம அவன பாத்து ஒரு ஸ்மைல் பண்ணீட்டு போய்ட்டாங்க குந்தவை.




Tuesday, January 24, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 12

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 12 - நந்தினி  





போன அத்தியாயத்தில படகில விட்ட வந்தியத்தேவன் குடந்தை ஜோசியரப் பாக்கறதுக்கு எப்படி வந்தான்? என்ன நடந்ததுன்னா...ன்னு சொல்லி ப்ளாஷ்-பேக் உடுவோமா?

படகில கடைசீய வந்து ஏறினான் ஆழ்வார்க்கடியான். அவன் வாய கிளறினான் வந்தியத்தேவன். ஆழ்வார்க்கடியான் எப்பேர்ப்பட்ட கில்லாடி...அவன் அத அப்படியே திருப்பி உட்டான் வந்தியத்தேவன் மேல...வந்தியத்தேவன் லேசுப்பட்டவனா? அவன் விடாக்கண்டன்னா இவன் கொடாக்கண்டன். வந்தியத்தேவன் பத்தி ஒன்னும் கண்டு பிடிக்க முடியல இவனால. ஆனா வந்தியத்தேவன் மனசோ ரொம்ப குழம்பி போய் கிடந்தது. அது தீர ஆழ்வார்க்கடியான் ஒன்னும் தீர்மானமா சொல்லல. ஆனா ஒண்ணு மட்டும் சொன்னான்: குடந்தை சோதிடர கேட்டு பாருன்னு சொல்லிட்டான். சேரி அவரப் பாத்தா குழப்பம் தீர்ந்தாலும் தீரலாம்னு அங்க போக நினைச்சான் வந்தியத் தேவன். அப்படித்தான் அங்க வந்து சேந்தான்.


சரி, தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லேன்னு நீங்க நினைக்கலாம். படகில வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியான கிண்டி கிடைச்சது தான் நந்தினி பத்தின கதை. நந்தினி தான் வந்தியத்தேவனுக்கு தந்த மோதிரத்த கொடுத்தவ.  பெரிய பளுவேட்டரயரோட சம்சாரம். அவ ஆழ்வார்க்கடியானோட தங்கை. ஆழ்வார்க்கடியான் சின்ன பையனா இருந்த போது அவனோட அப்பா நதிக்கரையில அனாதையா கிடந்த ஒரு பெண் குழந்தைய எடுத்து நந்தினின்னு பேரு வச்சு வளத்தாரு. அவரு இறக்கும்போது நந்தினிய ஆழ்வார்க்கடியானோட பொறுப்பில  விட்டுட்டு இறந்திடாறு. இவன் பக்தீயில ரொம்ப ஊறிப்போய் இருந்தாலும் தங்கைய நல்லா கவனிசுக்கிட்டான்.  ஒரு வாட்டி திருவேங்கடத்துக்கு யாத்திரை போனான் ஆழ்வார்க்கடியான். அபப ஒரு விபரீதம் நடந்தது. சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில ஒரு பெரிய போர் நடந்தது. [ நல்லா நியாபகம் வச்சுக்கோங்க..இது திருப்பி திருப்பி வரும், ஒவ்வொருத்தர் பார்வையில.. ] அது நடந்த இடத்துக்கு பக்கத்தில தான் இவன் வீடு இருந்தது. பாண்டியர்களோட படை நிர்மூலமா ஆயிடுச்சு. ரத்த காயத்தோட அவங்க ராஜா வீரபாண்டியன தூக்கி கொண்டு வந்து நந்தினி வீட்டில போட்டாங்க கொஞ்ச வீரர்கள். அவனோட நிலமைய பாத்து இறக்கப் பட்டு பணிவிடை செஞ்சா இவ. ஆனா இத கண்டு பிடிச்சு சோழ வீரர்கள் அங்க நுழைஞ்சு வீர பாண்டியன கொன்னுட்டாங்க, நந்தினிய சிறை பிடிச்சுட்டு போயிட்டாரு பழுவேட்டரையர். மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது இது; அதில இருந்து அவள எப்படியாவது அங்க இருந்து மீட்கனும்னு, காப்பாத்தனும்னு டிரை பண்ணிக்கிட்டு இருக்கான் திருமலை என்கிற ஆழ்வார்க்கடியான்.

Tuesday, December 20, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 9, 10







பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு  
பெரிய குழப்பத்தோடையும் கலக்கத்தோடையும் வந்தியத்தேவன் படுத்திருந்தான் எப்ப தூங்கினான்னு தெரியல. யாரோ தட்டி எழுப்பினாங்க. அது கந்தமாறன் தான். விடிஞ்சு ரொம்ப நேரம் ஆயிரிச்சின்னு சொன்னான் அவன். வந்தியத்தேவன் கிளம்பனும்னு சொன்னான், கந்தமாறன் விடல. ஏதேதோ பொய் காரணம் சொல்லிட்டு கிளம்பிட்டான். ரெண்டு பெரும் வெட்டிக் கதை பேசிட்டே வந்தாங்க. அப்போ கந்தமாறன் முந்தின நாள் நடந்த விஷயங்கள்ல இருந்து நெறைய பேசினான்: போர் வரும்னான், ஈழத்தில நக்கர சண்டைல தப்புகள் இருக்கறதா சொன்னான்.  கொள்ளிடக் கரைக்கு வந்து சேந்தாங்க ரெண்டு பேரும். அங்க படகில வந்தியத் தேவன ஏத்தி விட்டுட்டு அந்தக் கரைல அவனுக்கு குதிரை ஏற்பாடு செஞ்சு கொடுக்க வேலையாள் ஒருத்தனையும் அனுப்பினான் கந்தமாறன். படகு கிளம்பற நேரத்திலே படக நிறுத்த சொல்லி கூவிட்டே வந்து கடைசி நேரத்துல ஏறினான் ஒருத்தன், அது ஆழ்வார்க்கடியான்.   



அத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்  
அரசிளங் குமரிகள் குந்தவை நாச்சியார் & வானதி ரெண்டு பேரும் குடந்தை சோதிடர பாக்க வர்றாங்க. குந்தவை நாச்சியார் சோழ சக்கரவர்த்தியோட மகள். அவள இளைய பிராட்டி அப்படீன்னும் மக்கள் அன்பா கூப்பிடுவாங்க. இவளுக்கு நேர அடுத்த தம்பி அருண்மொழிவர்மன், அவன் மேல ரொம்ப பாசம் அக்காக்கு.
வானதி கொடும்பாளூர் குறுநில மன்னரோட மகள், அருண்மொழி மேல அதீத  காதல் இவளுக்கு. ரொம்ப அன்பும் அடக்கமும் உள்ளவ. கொஞ்ச நாளா விளையாட்டும் பேச்சும் இல்லாம சோர்ந்து பொய் இருக்கறா. அதுக்கு காரணம் என்னான்னு தெரிஞ்சுக்க ரெண்டு பேரும் குடந்தை சோதிடர் முன்னால இருக்கறாங்க, சோதிடர் வானதியோட சாதகத்த பாக்கறாரு. 



Friday, December 16, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 8

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 8 - பல்லக்கில் யார் ?  

சுருக்கம்:  இளவரசர்கள்ள மூத்தவரான மதுராந்தகத் தேவருக்குத் தான் பட்டம் கொடுக்கணும்னு பழுவேட்டரையர் சொன்னார். கூட்டத்தில இருந்தவங்க சிலர்  மதுராந்தக தேவர் பத்தி கேள்வி பட்டத சொன்னாங்க. அதாவது இவர் பட்டம் வேண்டாம்னு சிவ பக்தியிலே கரைஞ்சு காணாம போயிட்டாரு-ன்னு. பழுவேட்டரையர் பல்லக்கில் இருக்கிற மதுராந்தக தேவர வெளியில வந்து தனக்கு ராஜ பதவி ஏதுக்கதுக்கு சம்மதமான்னு சொல்ல சொன்னாரு. அவரும் வந்து சொன்னாரு.

விளக்கம்: 
 "சோழ சாம்ராஜ்யம் ஆண்ட மன்னரான கண்டராதித்த தேவர் எதிபாராத விதமா இறக்கிற சூழ்நிலையில தான் மகன் மதுராந்த தேவர் ஒரு வயசு குழந்தைங்கிரதால தன் தம்பி அரிஞ்சய சோழருக்கு பட்டம் கட்டும் படி சொல்லிட்டு இறந்துட்டாரு. இந்த விஷயத்த சொன்னது கனடராதித்த தேவரோட மனைவி  பட்டது ராணி தான். விதி வசமா அரிஞ்சய தேவர் ஒரு வருஷம் கூட நீடிக்கல, இறந்து போயிட்டாரு. இதனால அவர் பையன் இருபது வயசான சுந்தர சோழருக்கு நாங்க பட்டம் கட்டினோம்." அப்படீன்னு சொன்னாரு பழுவேட்டரையர்.
  சம்புவரையர் சொன்னாரு "கண்டராதித்த தேவரோட பையன் மதுராந்தக தேவர் இப்போ பிராயத்திலே இருக்கார், அவர் பெரியவரா இருந்திருந்த அன்னிக்கே பட்டம் அவருக்கு போயிருக்கும். இப்போ அவருக்கு பட்டம் கொடுக்கறதே சரி" ன்னு சொன்னார்.
  கூட்டத்திலே யாரோ கேட்டாங்க " இப்போ மதுராந்தக தேவர் எங்க இருக்கார் ? ராஜ்ஜியம் ஆள ஆசை இல்லாம சிவ பக்தியிலே மூள்கிட்டாருன்னு  சொல்றாங்க. உண்மையிலேயே அவருக்கு ஆசை இருக்கா ?  இருக்குன்னாலும் அது எங்களுக்கு எப்படி தெரியும் ?"
   பழுவேட்டரையர் சொன்னாரு "தெரிஞ்சா ஆதரவு தருவீங்களா ? " எல்லாரும் சம்மதம் சொன்னாங்க. பழுவேட்டரையர் பல்லக்கு இருந்த திசைய பாத்து சொன்னாரு "இளவரசே பல்லக்கு திரைய விலக்கி எங்களுக்கு போஸ் கொடுங்க. உங்க சம்மதத்தை சொல்லுங்க"ன்னாரு. மதுராந்தக தேவர் வெளியே வந்தாரு. எல்லாரும் "பட்டத்து இளவரசர் வாழ்க ! மதுராந்தக சோழர் வாழ்க !!"  அப்படி கோஷம் போட்டாங்க.
   இதுக்கு மேல இங்க நிக்க முடியாதுன்னு வந்தியத் தேவன் அவன் இடத்துக்கு வந்து படுத்துக் கிட்டான், அப்படியே தூங்கி போனான் இவன்.
   
  

Tuesday, December 13, 2011

பொன்னியின் செல்வன் குரூப் போட்டோ


நடுவில் இருப்பவர் கல்கி 

Saturday, December 10, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 6 & 7 - சுருக்கம்



விருந்துக்கு வந்த பழுவேட்டரையர் மற்ற குறு நில ராஜாக்கள் கிட்ட "சுந்தர சோழ மகராஜா உடம்பு சரி இல்ல, ரொம்ப நாள் இருக்க மாட்டார். அவர் பையங்க ரெண்டு பெரும் சரி இல்ல ராஜ்யத்த ஆளரதுக்கு" அப்படீன்னு சொன்னாரு.


Friday, December 9, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 7

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்  

  நம்ம பழுவேட்டரையர் சொன்னாரு: " சுந்தர சோழ மகராஜாவோட உடம்பு நாளுக்கு நாள் மோசமாயிட்டே வருது. அவருக்கு பாக்கற வைத்தியர்கள் கிட்டே தனியா கேட்டு பாத்தேன், அதிக காலம் உயிரோட இருக்க மாட்டாருன்னு சொல்லிட்டாங்க. அடுத்து பட்டத்துக்கு வர்றவங்க யாருன்னு யோசிக்கணும்"
  "இப்ப என்ன யோசிக்கறது. அதுதான் இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு இளவரசு பட்டம் கட்டியாச்சே" யாரோ கோட்டத்தில இருந்து சொன்னாங்க.
    "உண்மை தான். இளவரசு பட்டம் கட்ட முன்னாடி நம்ம யார் கிட்டயாவது கேட்டாங்கள? நாம ஒவ்வொருத்தரும் பல தலைமுறையா சோழ ராஜ்யதோட மேன்மைக்காக பாடு பட்டுட்டு இருக்கோம், ஆனா நம்மள ஒரு வார்த்த கூட கேக்கல"
  மழவரையர் சொல்ல ஆரமிச்சார்: "சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிஞ்சு கிடக்கு. அதோட வேகத்துக்கு இதுக்குள்ள வடக்க வேங்கியும், கலிங்கமும் தேக்க ஈழமும் இதுக்குள்ள பணிஞ்சு இருக்கணும். ஆனா இல்ல. அதுக்கு காரணம் ராஜாவோட மூத்த பையன் வட திசை மாதண்ட நாயகர் ஆதித்த கரிகாலர். தென் திசைல ஈழம் பணியாததுக்கு காரணம் படை தலைவரான தம்பி அருண்மொழி வர்மர். "
  பழுவேட்டரையர் பதில் சொன்னாரு: "சரி தான், இது வரை சேனாதிபதி வைக்கற வழக்கம் வேற, இப்ப நடக்கிறது வேற. வடக்க அண்ணன் தளபதி, தெக்க தம்பி தளபதி. வடக்க என்ன நடக்கு ? அண்ணன் வெங்கி மேலயோ, கலிங்கம் மேலயோ படை எடுக்கல. ஆனா தங்கத்தால மாளிகை கட்டிட்டு இருக்கார். வைர வைடூரியங்கள அதில பதிச்சுகிட்டு இருக்கார், தலை நகரத்துல இருக்கற பொக்கிஷ சாலைக்கு ஒரு செப்பு காசு கூட அனுப்பல. 
   தம்பி பண்ணறது ரொம்ப வித்தியாசமா இருக்கு. நாம கடைப் பிடிக்கறது என்ன, சண்ட போட போற இடத்திலேயே வீரர்களுக்கு சாப்பாடு சம்பாதிச்சுகுவோம். இவரு என்னடான்னா சோழ நாட்டில இருந்து சாப்பாடு சிலோனுக்கு போகணும்னு சொல்லறார். நானும் பத்து தடவ கப்பல்ல சாப்பாடு அனுப்பிட்டேன். அதுக்கு அவரு சொல்லற காரணம் என்னான்னா ஈழ ராஜா கூடத் தான் சண்டையாம், அங்க இருக்கற மக்கள் கூட இல்லையாம். மக்கள் கிட்ட இருந்து சாப்பாடு எடுத்தா மக்கள் நம்மள வெறுத்துருவான்கலாம். அரசர ஜெயிச்ச பிறகு மக்கள் விருப்பதோட ஆட்சி நடத்தணுமாம். அதுவர இங்க இருந்து தான் சாப்பாடும், பணமும் அனுப்பனுமாம்.
  இப்படி ரெண்டு பெரும் செய்யற காரியத்தால தஞ்சைலே பணமும் தானியமும் கரைஞ்சு போகுது. அத சமாளிக்க அதிக வரி போட வேண்டி இருக்கு. இதுக்கு தான் என்னைய இந்த பதவியில வச்சிருக்காங்க. நாட்டு நன்மைய நெனச்சு தான் இந்த பதவியில இருக்க வேண்டி இருக்கு இல்லன்ன எப்பவோ பதவிய விட்டுருப்பேன்"
    உடனே கூட்டதில இருந்து " அப்படி செஞ்சிராதீங்க. எங்கள கை விட்டுறாதீங்க. இந்த ராஜ்யத கை விட்டுறாதீங்க. இது சின்னா பின்னமாயடும்" ன்னு சொன்னாரு சம்புவரையர். 
   "அப்படீன்னா என்ன செய்யறதுன்னு நீங்க தாங்க சொல்லணும். ரொம்ப கேவலமா ஆன இந்த  அரசுக்கு என்ன பரிகாரம் செய்யனும்னு நீங்க தான் சொல்லணும்." அப்படீன்னு சொல்லி முடிச்சாரு பழுவேட்டரையர்.  
    
வாசகர்களுக்கு ஒரு விளக்கம்: குறுகிய பதிப்புன்னு சொல்லிட்டு பெரிசா எழுதறேன்னேன்னு நெனைக்க வேண்டாம். அத்தியாயம் 6 ல இருந்து 8 வர உள்ளது தான் இந்த நாவலோட ஆதாரம். இது தான் இப்ப இருந்து கதையோட கடைசி வர நடக்கற பல நிகழ்சிகளுக்கு காரனமாகுது. இத சொல்லும்போது கல்கி பத்தி சொல்லணும். அவர் காலத்துக்கு அப்பாற்பட்டு சூப்பரான நாவல எழுதிட்டு போயிருக்கார். யாரையும் நல்லவன், கெட்டவன் சொல்லிருக்க மாட்டாரு. நிகழ்சிகள் நடக்கறத அப்படியே கொடுத்திட்டு மத்த எல்லாத்தையும் நாமளா தீர்மானிக்க விட்டுடுவாரு. சந்தர்ப்பம், சூழ்நிலை, தான் இருக்கும் இடம், தான் கேள்விப்படும் தகவல் எல்லாம் தான் ஒரு மனிதனை முன்னோக்கி கொண்டு போகுது. வல்லவரையன் வந்தியதேவன் வழியா நாம இத எல்லாத்தையும் பாக்கிற சூழ்நிலைய கல்கி கொண்டு வருவாரு. நல்ல கதை அது நடக்கிற, இடம் (லொக்கேஷன்), காலம் (டயம்), மனிதர்களோட வித்தியாமான காரக்டர் எல்லாத்தையும் கணக்கில எடுக்கும், வித்தியாசங்கள கரக்டா காட்டும். கல்கியோட இந்த கதை அப்படித் தான்.  இப்ப வர்ற நிகழ்சிகள பாத்துட்டு பழுவேட்டரையர் கெட்டவர், வில்லன்னு நாம எல்லாருமே நெனைப்போம் (அது தப்பில்லே) ஆனா கல்கி பளுவேட்டரயர்களோட புகழ, அவங்க எப்படி இந்த இடத்துக்கு (ராஜாவுக்கு அடுத்த இடத்துக்கு) வந்தாங்கன்னு பின்னால சொல்லுவாரு. பழுவேட்டரையர் கூட தான் ராஜா ஆகணும்னு பேசல, யாருக்கு பட்டம் கொடுக்கணும்னு தான் சொல்லறாரு. அவர பாத்து நாம கேக்கனும்னு நெனைக்கறது எல்லாம் 'நீங்க  நல்லவரா, கெட்டவரா?' 

Monday, December 5, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 6

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம் 
குரவைக் கூத்துக்கு அப்பறம் வந்தவங்களுக்கு பெரிய விருந்து நடந்துச்சி. கந்தமாறன் வந்தவங்க யாரு யாருன்னு வந்தியத் தேவனுக்கு சொல்லிட்டே வந்தான். பளுவேட்டரைரையும், சம்புவரையரையும் தவிர மழபாடி தென்னவன் மழவரையர், குன்றத்தூர் பேரு நிலக் கிழார், மும் முடிப் பல்லவராயர், தான் தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவ சேனாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பேரு நில வேளார்-ன்னு பெரிய சிற்றரசர் கூட்டமே வந்திருந்தது. அரசர்-ங்கறது மாறி அரயர்ந்னு ஆயிட்டது, அதனால எல்லா பேருலயும் அரயர்ங்கரத சேத்துகிட்டாங்க. இது அவங்க படிச்சு வாங்கின பட்டமில்ல, பல பொர்கள்-ள பங்கெடுத்துகிட்டு சம்பாதிச்சது. இதுலே பலரு சோழ சாம்ராஜ்யத்திலே நல்ல பொறுப்பிலே இருந்தாங்க.     
இவ்வளவு பேரு ஒரே நேரத்துல ஒரே இடத்துல கூடறது லேசா நடக்கற காரியமில்லே. இது தெளிவா தெரிஞ்சுது வந்தியத் தேவனுக்கு. இவங்க சங்கத்த ஏன் கூட்டி இருக்காங்கன்னு  நெனைச்சான் வந்தியத் தேவன், இவன் வந்தத பலரு விரும்பலங்கறதும் சேந்துகிச்சு. விருந்து மேல பெரிசா  ஈடுபாடு இல்ல அவனுக்கு.
"ரொம்ப களச்சு போயிருப்பே"-ன்னு அவனுக்கு தூங்கறதுக்கு இடத்த காமிச்சான் கந்தமாறன். மாளிகைல மேல் மாடத்தில இருந்த திறந்த மண்டபம் அது. "மத்த விருந்தாளிங்கள கவனிச்சுட்டு நானும் உன் பக்கம் வந்து படுத்துகிறேன்"ன்னு சொல்லிட்டு போய்ட்டான் கந்தமாறன்.
வந்தியத் தேவன் படுத்த உடனே தூங்கிட்டான். தூக்கத்திலே பயங்கரமான கனவெல்லாம் வந்தது, திடுக்குன்னு முழிச்சுகிட்டான். நேரா பாத்தா மாளிகயோட எதிர் பக்கம் சுத்து சுவர் மேல ஆழ்வார்கடியானோட தல தெரிஞ்சுது. துள்ளி எந்திச்சான், வாள எடுத்து இடுப்பில செருகினான், விறு விறுன்னு ஆழ்வார்கடியான் தல தெரிஞ்ச இடம் பாத்து நடக்க ஆரம்பிச்சான்.  மாளிகை சுவர், தூண்கள் எல்லாம் கடந்து நடக்க வேண்டி இருந்தது, அப்ப ஒரு இடத்துல நடக்கும் போது ஏதோ பேச்சு சத்தம் கேட்டது, அதுல தான் பேரு வேற கேட்டுச்சி இவனுக்கு. தூண்கள் பின்னாடி மறைவா நின்னுகிட்டு மெல்ல எட்டி பாத்தான். 
கீழ குறுகலான மறைவான முற்றம் ஒண்ணுல கொஞ்சம் மறைவான இடத்துல சுமார் பத்து பன்னெண்டு பேரு இருந்து பேசிட்டு இருந்தாங்க அதுல கந்தமாறனும் இருந்தான். பக்கத்திலே பழுவேட்டரையர் கூட வந்த மூடுபல்லக்கு இருந்தது. ஆழ்வார்கடியான் பெரிய ஆளு தான். அவன் பாத்துட்டு இருந்த இடத்த கீழ இருந்து யாரும் பாத்திட முடியாது ஆனா இவனுக்கு கீழ நடக்கிறது தெரியும், நல்லா கேக்கும்.
"...அந்த சிநேகிதன் எங்க படுத்திருக்கான்? நம் பேச்சு அவன் காதில விழுந்திடக் கூடாது. அவன் வட திசை மாதண்ட நாயகருக்கு கீழே வேலை செய்யற ஆளுங்கறது நினைவில இருக்கட்டும். நம் திட்டம் நெறைவேருற  காலம் வரை அது ரகசியமா இருக்கணும். அவனுக்கு இது தெரிஞ்சதுன்னா அவன வெளிய விடக் கூடாது, வேலை முடிச்சிட வேண்டியது தான்" 
வந்தியத் தேவனுக்கு திக்-ன்னு இருந்துச்சி, வட திசை மாதண்ட நாயகர்ன்னா இளவரசர் ஆதித்த கரிகாலர். அவருக்கு தெரியாம என்ன திட்டம் இதுன்னு நெனைச்சான். கந்தமாறன் வந்தியத் தேவனுக்கு பரிஞ்சு பேசினான்.பழுவேட்டரையர் சொன்னார்: "இவ்வளவு நம்பிக்கை உனக்கு இருந்தா சந்தோஷம். எங்களுக்கெல்லாம் அவனை தெரியாது, அதனால அப்படி சொன்னேன். நாம பேசறது ஒரு சாம்ராஜ்யத்தின் உரிமை பத்தின விஷயம் பாரு. கொஞ்சம் வெளிய தெரிஞ்சா கூட பல விபரீதங்கள் நடக்கலாம். இது எல்லாருக்கும் கவனத்திலே இருக்கட்டும்" 
உச்சியில  சுர்ருன்னு இருந்தது வந்தியத் தேவனுக்கு. முழு விசயத்தையும் கேட்டுர்ரதுன்னு முடிவு பண்ணினான்.
  (தொடரும்)




Thursday, October 20, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 3, 4, 5

பாகம் 1  - புது வெள்ளம்

அத்தியாயம் 3  - விண்ணகரக் கோட்டை 

வல்லவரையன் வந்தியத் தேவனோட குதிரைய பளுவேட்டரைரோட ஆளுங்க  வம்பு பிடிச்சி விரட்டி விட்டுடாங்க. வந்தியதேவனுக்கு ரொம்ப கோவம் வந்துச்சு, ஆனா சண்ட பிடிக்க இது நேரம் இல்லன்னு அமைதியா இருந்தான். குதிரைய தேடி பிடிச்சு வீதிக்கு கூட்டிட்டு வந்தான். அங்க ஆழ்வார்க்கடியான் நின்னுகிட்டு இருந்தான், வந்தியத் தேவன்கிட்ட கேட்டான்:"தம்பி நீ இன்னிக்கி கடம்பூர் மாளிகைக்கு போனீனா என்னையும் கூட்டிட்டு போறீயா? எனக்கு அங்க ஒரு வேலை இருக்கு."
வந்தியத்தேவன் சொன்னான்: "நான் அங்க தான் போறேன்னு உனக்கு எப்படி தெரியும், அங்க அப்படி என்ன வேலை?"
"தம்பி இதிலே ஆச்சர்யம் என்ன இருக்கு, எல்லா சிற்ரசர்களும், பழுவேட்டரையரும் அங்க தான் போறாங்க. அங்கே வர்ரவங்களுகேல்லாம் விருந்தும் அப்பறம் களியாட்டம்,  சாமியாட்டம், குரவை கூத்து எல்லாம் நடக்கும். இதெல்லாம் பாக்கனும்னு ஆசை எனக்கு"
நம்ம ஹீரோக்கு இது பிடிக்கலை, முன்னே பின்னே தெரியாத ஆளை எப்படி கூட்டிட்டு போறதுன்னு. ஆழ்வார்கடியானை ஒரு வழியா கழட்டி விட்டுட்டு அவன் கிளம்பினான். அதோட வந்தியதேவனுக்கு முறையான அழைப்பு இல்லே, அவன் பிரண்டு கந்தமாறன வச்சு அங்க தங்கிகலாம்னு நெனைசிருந்தான், இந்த கூட்டத்திலே அது நடக்குமான்னு தெரியல.

அத்தியாயம் 4  - கடம்பூர் மாளிகை

குதிரைலே கடம்பூர் மாளிகைக்கு போன வந்தியதேவன வாசல் காவக்காரங்க நிறுத்திடாங்க. இவ்வளவு காவல அவன் எதிர் பாக்கல.  இவன் குதிரைய வம்பு பிடிச்ச ஆளுங்க தான் நின்னுட்டு இருந்தாங்க. ஏற்கனவே இருந்த கோவம் அதிகமாச்சு. வாக்குவாதம் வந்துச்சு, கைகலப்பா மாறிச்சு. இத சாக்கா வச்சு அவங்களுக்கு கொடுக்க வேண்டியத(!) கொடுத்தான் வந்தியத்தேவன். இத சமாளிக்க முடியாம இன்னும் நிறைய ஆளுங்க இவன் கிட்ட சண்ட பிடிக்க வந்தாங்க.  கோட்டை மேலிருந்து ஒரு இடிமுழக்க குரல், "கந்தமாறா, கீழ என்ன கலவரம்னு பாரு" ன்னு சொன்னது. கந்தமாறன் இறங்கி வந்தான். சண்டை அப்படியே நின்னது, கந்தமாறனுக்கு வந்தியதேவன பாத்ததிலே ரொம்ப சந்தோஷம். காவல் காரன்கள சத்தம் போட்டுட்டு இவன கூட்டிகிட்டு அவன் அப்பா சம்புவரையர் கிட்ட அறிமுக படுத்தினான், அவருக்கு சந்தோஷம் இல்ல: "இவன் தான் கலவரம் செஞ்சவனா"ன்னு கேட்டார். தான் பையன் கிட்ட பிரயாண களைப்பு போக வந்தியதேவனுக்கு சீக்கிரம் சாப்பாடு கொடுத்து நல்ல ஒதுங்கின இடமா கொடுத்து தூங்க ஏற்பாடு பண்ண சொன்னார். கந்தமாறன் பளுவேட்டரயருக்கு வந்தியதேவன அறிமுகம் செஞ்சு வச்சான், அவருக்கும் ஒன்னும் சந்தோஷமோ வியப்போ இல்ல, வேண்டா வெறுப்பா தான் பேசினார். கந்தமாறன் அவன் அம்மா கிட்ட இவன அறிமுகபடுத்தினான். 

அத்தியாயம் 5  - குரவை கூத்து

அம்மா கூப்பிட்டான்னு கந்தமாறன் போயிட்டு வந்தான். இவன் நின்ன இடத்திலே ஒரு பொம்பளைங்க கும்பலே இருந்துச்சு. எதையோ பேசி கொல்லுன்னு சிரிச்சிட்டு இருந்தாங்க. வந்தியதேவனுக்கு இவன தான் கிண்டல் பண்றாங்கன்னு தோணிச்சு. கந்தமாரன்கிட்ட கேட்டான்: "ஒன்ன பத்தி சிரிக்கல , இந்த பழுவேட்டரையர் இந்த வயசில ஒரு சின்ன பெண்ணை கலியாணம் செய்திருக்கிறார், அவளை கலியாணம் முடிஞ்சு ஒரு இரண்டு வருஷம் தான் இருக்கும், ஆனா எல்லா இடத்துக்கும் மூடு பல்லகில் வச்சு அவளை கூட்டிட்டு போறார். அது பத்தி தான் இந்த சிரிப்பு. அந்த பொண்ண யாரும் பாத்ததிலைன்னு கேள்வி"  அப்போ வாத்தியங்கள் சத்தம் கேட்டுச்சு. அது குரவை கூத்து தொடங்க போறதுக்கு அறிகுறின்னு சொன்னான் கந்தமாறன். வந்தியத்தேவன் கூத்து பாக்க ஆசைபட்டான். கூத்து, ஆட்டம் பாத்தான் அதில் முருகன் சூரபத்மன சம்ஹாரம் பண்றத ஆடினாங்க. முடிவில முருகனா ஆடினவனுக்கு அருள் வந்திச்சு:"என் அம்மா சண்டிகேஸ்வரிக்கு நீங்கள் பூசை போடல, அதனால அவ பலி கேக்கறா...ஆயிரம் கால அரச ரத்தம் பலியா கேக்கறா"இன்னான். கூத்து பத்தவங்கல்லாம் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க. எங்கயோ நரி ஊளையிடற சதாம் கேட்டுச்சு. வந்தியத்தேவன் அந்த பக்கம் பாத்தான், அங்க ஆழ்வார்கடியான் தலைய கோட்டை சுவர் மேல பாத்தான், கண் மூடி திறந்து பாத்தா அங்க ஒன்னும் இல்ல, என் இப்படி தோணிச்சுன்னு நெனைச்சு வெக்கப் பட்டுகிட்டான்.

(தொடரும்) 

Monday, October 3, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 1, 2

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 1  - ஆடித் திருநாள் 

சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி நடக்கற கதை இது. வந்தியத் தேவன் தான் நம்ம ஹீரோ. குதிரைய்ல ஏறி நம்ம ஆளு சோழ நாட்டுக்குள்ள வர்றான், அவன் கிட்டே ரெண்டு ஓலை இருந்தது - ஒண்ணு சோழ மகாராஜாவுக்கு இன்னொன்னு குந்தவை பிராடியாருக்கு (நாட்டு இளவரசி, கரிகாலனோட அக்கா) . கொடுத்தது, வந்தியதேவனுடைய எஜமான், நாட்டு இளவரசன் ஆதித்த கரிகாலன். ஓலை இருக்கற விஷயத்த பத்தி யாரு கிட்டயும் மூச்சு விட கூடாதுனும் சொல்லி இருந்தார். ராத்திரிக்கு கடம்பூர் சம்புவரையர் (நண்பன் கந்தமாறனோட அப்பா, சோழ மகாராஜவோட ஆதிக்கத்துக்குட்பட்ட குறுநில மன்னர்) மாளிகைலே தங்கிட்டு காலைலே பிரயாணத்தை தொடரலாம்னு நெனைச்சான். 

அத்தியாயம் 2 - ஆழ்வார்க் கடியான் நம்பி 
அப்படிப் போயடீருந்த வந்தியத் தேவன் மூணு பேரு வாக்குவாதம் பண்றத பாத்தான். அதிலே ஒருத்தன் முன்குடுமி வச்ச வீர வைஷ்ணவன் - ஆழ்வார்கடியான் நம்பி. சிவன் பெருசா விஷ்ணு பெருசான்னு தான் வாக்குவாதம். வந்திய தேவன் உள்ளே புகுந்து தடுத்து கூட்டத்த களச்சு விட்டான். அப்ப முரசு சத்தம் கேட்டுச்சு. "பெரிய பழுவேட்டரையர் வர்றார்"ன்னு கட்டியம் கூறுதல் கேட்டுச்சி. கைலே வேல் தாங்கி வீரர் கூடம் வந்துச்சு, அதுக்கு பின்னாடி பெரிய யானை மேல ஆஜானுபாகுவா பெரியவர் ஒருத்தர் வந்திட்டு இருந்தார். அவர் தான் பெரிய பழுவேட்டரையர் - சோழ நாட்டுக்கு பைனான்சியர், டாக்ஸ் கலக்ட் பண்ணறவர், எல்லா பொன் பொருளுக்கும், விளையிற பயிருக்கும் இன்-சார்ஜ். சோழ ராஜாக்கு பாடி-கார்டும் இவர் தான். சோழ ராஜா இவர் மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தார். அதனாலே பளுவேட்டரயருக்கு தனி கொடி, சின்னம் வைக்க அனுமதி கொடுத்திருந்தார். இவருக்கு பின்னாடி மூடின பல்லக்கு போயிட்டு இருந்தது. கொஞ்சம் தள்ளி மறைவா இருந்து ஆழ்வார்கடியான் நம்பி இந்த பல்லக்கையே உத்து பாத்திட்டு இருக்கறத நம்ம ஹீரோ கவனிச்சான். 

(தொடரும்)