Memories

Sunday, December 29, 2013

வெறும் கை - நிமிடக் கதை




ஒரு ஓய்வான சோர்வான மத்திய பொழுதில் கணினியில் இணைய உலா சென்று கொண்டிருந்தேன். 

அப்போது எதேச்சையாக சீனாவின் குங்பூ மாஸ்டர்கள் செய்யும் சாகசத்தை பார்க்க நேரிட்டது. யப்பா...எத்தகைய சாகசங்களை செய்கிறார்கள். ஒருவர் கடப்பாரை கம்பியை கையில் வளையமாக சுற்றிக் கொள்கிறார். இருவர் நூற்றுக்கணக்கான செங்கற்களை உடைத்து   தள்ளுகிறார்கள். சிலர் கருங்கல் பளிங்கு சிமண்ட் பாளங்களை உடைக்கிறார்கள். இளம் வயது யுவதி ஒருவர் மீது கட்டைகள் கொண்டு தாக்க அவை தூள் தூளாகின்றன. ஒரு மாஸ்டர் வெறும் கையால் தடிமனான கட்டையில் ஆணிகள் அடிக்கிறார். 

ல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நான் வேகமாக சென்று சாத்துக்குடி ஒன்றை எடுத்து வெறும் கையால் உரிக்க ஆரம்பித்தேன்.... ஏதோ நம்மால் முடிந்தது (?)...

பீர்பால்




பீர்பால்கிட்ட ஒரு பண்டிதர் கேட்டார்: "கஷ்டமான 1 கேள்வி கேட்கட்டுமா, இல்ல 100 சிம்பிள் கேள்விகள் கேட்கட்டுமா?"

சக்கரவர்த்தி அக்பர் உடனே ஒரு வேலையா கிளம்ப வேண்டி இருந்தது. பீர்பால் சொன்னார்:"கஷ்டமான 1 கேள்வி கேளுங்க, பண்டிதரே"

"முட்டைல இருந்து கோழி வந்ததா இல்ல கோழி-ல இருந்து முட்டை வந்தாதா?"

"சந்தேகமே இல்ல, கோழி தான் முதல்ல வந்தது. "

"எப்படி?"

"இது இரண்டாவது கேள்வி, பண்டிதரே!" அப்படி முடிச்சார் பீர்பால்.

ஜென் கதைகள் - கோப்பை



ரொம்ப படித்த மேதை ஒரு ஜென் துறவி கிட்ட போனாரு : "குருவே, நான் படிக்காதது ஏதாவது இருந்தா அதை எனக்கு கத்துக் கொடுங்க" அப்படீன்னாரு. அதை கவனிக்காத துறவி அவரோட கோப்பைல தேநீர் ஊத்திட்டு இருந்தார். கோப்பை நிரம்பின பிறகும் இவர் ஊத்திரத்தை விடல. கோப்பை நிரம்பி வழிஞ்சது , இவரு நிறுத்தவே இல்ல. பண்டிதர் கேட்டாரு "குருவே, கோப்பை நிறைந்து விட்டது. இன்னும் இதில ஊத்த முடியாது"-ன்னு சொன்னாரு. குரு ஒரு ஸ்மைலோட சொன்னாரு:

"நிறைந்த கோப்பைல தேநீர் ஊத்த முடியாது; நிறைந்து இருப்பதாக எண்ணப் படும் மனது மேலும் அறிவை எடுத்துக்க முடியாது"

(இந்த கதையை நினைவு படுத்தும் வசனம் "avatar" படத்தில கூட வரும்.)

பெர்னாட் ஷா



பெர்னாட் ஷா கிட்ட ஒரு பெண் சொன்னா :"நீங்கள் மட்டும் என் கணவனா இருந்தா நான் காபியில் விஷம் வச்சு கொடுப்பேன்"

பெர்னாட் ஷா புன்முருவலோட சொன்னார்: "நீ மட்டும் என் மனைவியா இருந்தா நான் அத உடனே குடிச்சிடுவேன்"

ஜென் கதைகள் - சொர்க்கம்



மிகப் பெரிய தளபதி ஒருத்தர் ஒரு ஜென் துறவி கிட்ட கேட்டார்: "குருவே!, சொர்க்கம் நரகம் எங்க இருக்கு?" அப்படீன்னு கேட்டார். குரு உடனே "மூடனே, இது கூட தெரியாதா?" அப்படீன்னு டக்குனு கேட்டார். எதிர் பாராத தளபதி கண் இமைக்கரதுக்குள்ள  வாளை உருவி துறவிய வெட்டறதுக்கு ஓங்கினான். "இதோ நரகத்தின் கதவுகள் திறந்து விட்டன"-ன்னு சொன்னார். தவறை உணர்ந்த தளபதி குருவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். குரு சொன்னார்:"சொர்கத்தின் வாசல்கள் திறக்கின்றன"



சொர்க்கம் நரகம் ரெண்டுமே மனசில தான் இருக்கு. 

முயலும் ஆமையும்




அறிஞர் அண்ணா கிட்ட கேட்கப் பட்ட கேள்வி: "முயலும் ஆமையும்  கதையில், முயல் தோற்றது எதனால்?"

அண்ணாவின்  பதில்:"முயலாமையால்"

(முயல்+ஆமை = முயலாமை )

சமீபத்தில் ரசித்த படம் (ஹிந்தி) - ஸ்பெஷல் 26




படம் தொடங்கியதில் இருந்து ஒரே விறுவிறுப்பு தான். சப்-டைட்டில் வைத்து பார்த்ததால் கொஞ்சம் புரிஞ்சது.

சிபிஐ அதிகாரிகளாக அக்ஷய் குமாரும், அனுபம் கேர்-ரும் இண்டர்வீயு செய்வதில் தொடங்குகிறது படம்.

அங்க கட் செஞ்சி திடீர்னு மந்திரி வீட்டுக்கு சிபிஐ ரெயிட் போறா மாதிரி வருது அப்பறம். அனுபம் கேர்-க்கு லஞ்சம் கொடுக்க ட்ரை பண்றார் மந்திரி - '2 தரட்டுமா?' அப்படி கேக்கறார் மந்திரி …அதுக்கு இரண்டு அடி கொடுக்கிறார் அனுபம் - 'நேர்மை தான் உயிர் மூச்சு, நேர்மைனா டிக்சனரீல என் பேர் தான் மீனிங்கா போட்ருபாங்க' அப்படீங்கற மாறி பேசறார். சரியான சீரியஸ் படமாக்கும் அப்படீன்னு நெனைக்கும்போது தான் தெரியுது அக்ஷய் குமாரும் அனுபம் கெர்ரும் டுபாக்கூர் அப்படீன்னு. இவங்க கொள்ளை அடிக்கறதுக்கு ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் கூட கிடையாது - ஏன்னா இவங்க CBI , இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட் மாதிரி பணக்காரங்க வீட்ல ரெயிட் செஞ்சு கருப்பு பணம் எல்லாம் கொள்ளை அடிக்கறாங்க.

கடைசீயா, பெருசா ஒரு கொள்ளை அடிக்க திட்டம் போடுது இந்த கும்பல். இவங்கள ரொம்ப க்ளோசா    வாட்ச் பண்றாங்க உண்மையான CBI. அவங்க பாத்திட்டு இருக்கும்போது அவங்க கண்ல மண்ணை தூவி கொள்ளை அடிச்சிட்டு போகுது இந்த கும்பல்.

"A  wednesday" (தமிழில் உன்னைப் போல் ஒருவன்) எடுத்த டைரக்டர் எடுத்த படம் இது.  1980கள்ல  நடந்த உண்மை சம்பவங்கள பின்புலமா வச்சி இந்த படம் எடுத்ருக்கார். அக்ஷய் குமார், காஜல் அகர்வால் காதல் இருந்தாலும், ஒரே ஒரு பாட்டில் அந்த காதலையும் ரொம்ப  அழகா காமிச்சதுக்கு டைரக்டருக்கு ஒரு சபாஷ் போடலாம். மரத்த சுத்தி டூயட் இல்ல, குத்து சாங் இல்ல.

"அட" சொல்ல வைக்கர மாதிரி நெறைய சீன்கள்: ஒரு  கட்டத்தில இவங்க ரெயிட் போற இடத்தில நிஜமான CBI  இருக்க சட்டுன்னு இவங்க அட்ரஸ் மாறி வந்ததா சமாளிக்கறது, யாரு அந்த ஸ்பெஷல் 26 அப்படீங்கறது, இன்னும் சொல்லிட்டே போகலாம்.
 



ஜென் கதைகள் - சுவை



ஒரு ஜென் துறவி மழைப் பாதை வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் இடறி மலை சரிவை நோக்கி விழத் துவங்கினார். அந்த நேரத்தில் கையில் அகப்பட்ட ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டார். கீழே அதல பாதாளம். கிளையில் இருந்த சிறிய பழம் ஒன்று அந்த துறவியின் கண்ணில்  பட்டது. அதை பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார்; சுவைத்தார்: "ஆஹா! என்ன சுவை!"

நீதி: வாழுகின்ற கணமே நிஜமானது; அதில் முழுமையாக இருப்பதே புத்திசாலித்தனம்.

Saturday, September 7, 2013

இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி






வாழ்கின்ற வரை சிலர் மட்டுமே மற்றவர்களையும் வாழவைத்து, சந்தோஷப் பட வைத்து வாழ்கிறார்கள். அப்படி ஒருவர் தான் இந்தப் பிரமு ! நாம் அனைவரையும் மீளாத துயரத்தில் ஆழ்த்தி இந்த உலக துன்பங்களை விட்டு நல்லுலகுக்கு சென்ற இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அவர்களை நினைவு கூர்ந்து வணங்குவோம் !!

Friday, August 23, 2013

ராமாயணத்திலிருந்து ஒரு கதை - விஸ்வாமித்திரர்




விஸ்வாமித்திரர் கௌசிக நாட்டு ராஜாவாக இருந்த போது பிரம்மரிஷி வசிஷ்டரின் ஆசிரமம் வழியாக, தன்னுடைய பெரும் படையுடன் சென்று கொண்டிருந்தார்.  மரியாதை நிமித்தம் பேசும்போது வசிஷ்டர் விஸ்வாமித்திரரையும் படையையும் சாப்பிட அழைத்தார். இவ்வளவு பெரிய படையை எப்படி இந்த ரிஷியால் உணவளித்து கவனிக்க முடியும்  என்று நினைத்து "மகரிஷி! நீங்கள் இப்படி கேட்டதே போதும். நாங்கள் கிளம்புகிறோம்" என்று சொன்னார் விஸ்வாமித்திரர். வசிஷ்டரோ விடவில்லை.

சரி என்று அமர்ந்த படைகளுக்கோ விருந்து பானங்கள் என்று கேட்க கேட்க வந்து கொண்டே இருந்தன ஆசிரமத்தில் இருந்து. ஒரே ஆச்சர்யம் விஸ்வாமித்திரருக்கு, கேட்டே விட்டார் வசிஷ்டரிடம். வசிஷ்டரின் வீட்டு பசு காமதேனு தான் இதற்கு காரணம் என்று புரிந்ததும் கேட்டார்: " ரிஷியே நாட்டில் உள்ள அனைத்து பொருட்களும் அரசனுக்கே சொந்தம். எனவே இந்த பசுவை என் அரண்மனைக்குக் கொடுங்கள்" என்றார். பசு வந்தால் கூட்டிப் போகுமாறு சொல்லி விட்டார் வசிஷ்டர். பசு வர வில்லை. படை வீரர்களை அனுப்பி இழுத்து வருமாறு அனுப்பினார் விஸ்வாமித்திரர். முனிவரைப் பார்த்து கதறியது அப்பசு. "உணவு படைத்த உனக்கு உன்னை காத்துக் கொள்ள  தெரியாதா" என்றார் வசிஷ்டர். உடனே அந்தப் பசுவிடம் இருந்து எண்ணற்ற வீரர்கள் தோன்றினர், அவர்கள் விஸ்வாமித்திரரின் படையை காண நேரத்தில் நிர்மூலமாக்கினார்கள். பெருந்தோல்வி விஸ்வாமித்திரருக்கு.

அங்கேயே தன ராஜ்யத்தை எஞ்சி இருந்த மகனிடம் கொடுத்து விட்டு காட்டுக்கு தவம் செய்ய சென்றார் விஸ்வாமித்திரர். சிவனை நினைத்து இருந்து முடிவில் சிவனிடமிருந்து தனுர் வேதத்தையும் எல்லா அஸ்திரங்களையும் பெற்றார் விஸ்வாமித்திரர். அடுத்து அவர் வந்தது வசிஷ்டரின் ஆசிரமம் முன்பு.

(தொடரும்)



Creative resume series (வினோத ரெசியூம்கள் )

உங்களை கவர்ந்தது எது என்று பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் 

1) 

2)

3)

4)

5)

6)

7)

8)

9)

10)

11)

12)

13)

14)

15)

16)

17)

18)

19)

20)

21)

22)

23)

24)

25)

26)

27)

28)

29)

30)


Friday, June 7, 2013

1,20,000 வருடங்களுக்கு முந்தய கான்செர்

1,20,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தால் மனிதனுடைய கான்செர் எலும்பும் (மேலே), மற்றைய இன்னொரு சாதாரண நியண்டர்தால் எலும்பும் (கீழே) காண்பிக்கப் பட்டுள்ளன. கான்செர் ஒரு பண்டைய வியாதி!


Sunday, March 17, 2013

வசூல் ராஜா


200 கோடிக்கு மேல்  வசூலாமே?  கமல் சார்


சமீபத்தில் ரசித்தத படம் - விஸ்வரூபம்

தமிழ்த் திரைப் படங்களின் தொழில் நுட்ப தரத்தை உலக தரத்துக்கு இணையாக இல்லை உலக தரத்தை விட அதிகமாக கொண்டு சென்ற தயாரிப்பாளர், இயக்குனர் கமல் ஹாசனுக்கு தனி பாராட்டு. இதை விட தமிழ் ரசிகர்கள் புத்திசாலிகள் என்று நம்பிக்கை வைத்ததற்காக உலக நாயகனை சத்தமாகவே பாராட்டலாம்.


கதக் நடன ஆசிரியராக வரும் கமல் அப்படியே நடனக் கலைஞரை பிரதிபலிக்கிறார் - நளினத்தோடு ஓடுவதாகட்டும், அடி படும் போது கத்துவதாகட்டும். அப்படி பட்ட கமல் ஒரு கண நேரத்தில் அதிரடிக்கு மாறுவது நடிகர் கமலின் வெற்றி. ஒரு காட்சியில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணீர் சொட்டுகிறது. அடுத்த முறை தண்ணீர் சொட்டுவதற்கு முன் ஒரு 10 பேரை சாய்த்து விடுகிறார் கமல். என்ன நடந்தது என்று நாம் மட்டுமல்ல, படத்தில் அவர் மனைவியும் நினைத்து பார்க்கையில் ஸ்லோ மோஷனில் திரும்பவும் காட்சிகள் வருகிறது. இது திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனர் கமலின் வெற்றி.


பொருத்தமாக "யார் என்று தெரிகிறதா?"   பாடலும் ஒலிக்கிறது. கமலுடைய கதாபாத்திரத்துக்கு எழுதியதை விட, கவிஞர் வைரமுத்து , கமலுக்கே எழுதியது போல தோன்றுகிறது இந்த பாடல். இன்னொரு பாடலான "உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே" என்கிற பாடல் மிக மிக இனிமை. கமல் எழுதியிருக்கிறார் இந்த பாடலை, அவர் தேர்ந்த கவிஞர் என்பதுக்கு பாடலே சாட்சி.


கதையை ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவிலும் மட்டுமே படமாக்கி இருக்கிறார். நுணுக்கம் படம் முழுவதும் நிறைந்து இருக்கிறது - கொஞ்சம் கவனிக்காவிட்டாலும் படம் புரியாது, இல்லை எதாவது ரசிக்கத் தக்க விஷயம் விடப் பட்டு விடும்.   போர் என்று வரும்போது அமெரிக்க தரப்பும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் தரப்பும் ஒருவருக்கு ஒருவர் செய்யும் அட்டூழியங்களும் அப்படியே தரப்பட்டு இருக்கிறதோ என்றும் தோன்றும் வகையில் காட்சிகள் அமைந்து இருக்கின்றன. போரின் கொடூரங்களை அப்படியே காட்டி இருக்கிறார் கமல். டாக்டராக வேண்டும் என்கிற சிறுவன், இன்னும் மனதளவில் குழந்தையாக இருக்கிற சிறுவன் என்று சிறுவர்களின் வாழ்க்கைகளின் பாதிப்புகள், டாக்டராக வருகிற வெளிநாட்டு பெண் அமெரிக்க தாக்குதலில் கொல்லப் பட்டு விடுவது என்று சின்னது முதல் பெரிய சம்பவங்கள் சொல்லப் பட்டு இருக்கின்றன.  எதுக்கு எது காரணம் அல்லது பலன் என்று நினைக்க வேண்டிய பொறுப்பை ரசிகர்களிடம் விட்டு விட்டு படம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. 

விசாம் அஹமது கஷ்மீரி என்ற பெயரில் தீவிரவாதிகளுடன் சேர வரும் கமலை, அவரை பற்றி ஒன்றுமே தெரியாத போது, எப்படி அவ்வளவு எளிதாக  அந்த தீவிர வாதிகள் அவர்களுள் ஒருவராக எடுத்துக் கொள்ளுகிறார்கள் என்பது கொஞ்சம் லாஜிக் உதைக்கிற விஷயம். என்ன தான் அவர் அப்பா தீவிரவாதிகளின் முக்கிய புள்ளியாக இருந்தாலும் பையனையும் அப்படியே நினைப்பார்களா என்ன?   பிரதமர் மன்மோகன் சிங் கமலிடம் நேரடியாக போனில் பேசுவது போல் வரும் காட்சி கொஞ்சம் மிகையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

படத்துக்கு முற்றும் போடாமல் தொடரும் மட்டும் போட்டிருக்கிறார், அடுத்த பாகம் எப்படி வருகிறது என்று பார்க்கலாம்...

எப்படியோ வியாபார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் கருத்து அளவிலும் வெற்றி பெரும் வகையில் படத்தை தந்து எடுத்த ரிஸ்கில் ஜெயித்து விட்டார் கமல்.  இயக்குனராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக கமலின் விஸ்வரூபம் தான் இது.

Wednesday, February 13, 2013

விரைவில்....


சில மனிதர்கள்...



...தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு சிற்பமாக ஆகிறார்கள்.

Wednesday, January 30, 2013

மகாத்மா காந்தி

காந்தி மகாத்மா மறைந்த நாள் ஜனவரி 30. நினைவு கூர்ந்து வணங்குகிறது பிரமு இணையம்.



புகைப்படம் நன்றி : லைப் பத்திரிகை 1946

கணினி வேலை செய்வோர்களே..!


கை மணிக்கட்டை கொஞ்சம் கவனியுங்க...