Memories

Tuesday, October 11, 2022

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 2 - அத்தியாயம் 32


பாகம் 2  - புது வெள்ளம்
அத்தியாயம் 32 - பரிசோதனை 

நம்ம வந்தியத்தேவன் சின்ன பழுவேட்டரயர் கிட்ட இந்த திருட்டு பசங்க‌அவனோட பழைய டிரஸ் அதில் இருந்த பொருள்கள களவாடி கிட்டதா கம்ப்ளைன்ட் செஞ்சான். சின்ன பழுவேட்டரையர் இவன் வாய கிளருனாறு அந்த டிரஸ்ல அப்படி என்ன இருந்துச்சுன்னாரு.  இவன் தைரியமா கொஞ்சம் தங்க காசும் ஒரு முக்கிய ஓலையும் இருந்ததா சொன்னான். 'அது என்ன ஓலை?'ன்னாரு சின்ன பழுவேட்டரையர். 'இளவரசர் ஆதித்த கரிகாலர் சக்கரவர்த்திக்கு எழுதின ஓலை'ன்னான். 
'ஓலைல என்ன இருந்துச்சு'ன்னாரு. இவன் 'அடுத்தவங்க ஓலைய படிக்கிற பழக்கம் இல்லை'னு மடக்கினான். 
வேற வழியே இல்லை...கொடுத்திற வேண்டியது தான்னு எல்லாத்தையும் எடுத்து வர சொன்னார். காசு கொஞ்சம் அதிகமா தெரிஞ்சது. எக்ஸ்ரா காச ஒதுக்கி வச்சான். 
'வேற என்ன வேணும் கேளுன்னார் சின்ன பழுவேட்டரையர். 'ஊரு சுத்தி பாக்கணும்னான். 2 தடி மாட்டு பசங்களோட அனுப்பி வச்சாரு. எப்படி ரூட் போட்டாலும் அதுக்கு கேட் போடராரேன்னு நினைச்சான் வந்தியத்தேவன்.

No comments:

Post a Comment