Memories

Sunday, April 13, 2014

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 25, 26




பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே 
பனை சின்ன மோதிரம் சக்தி உள்ளதா இருந்தது. போற இடமெல்லாம் வழி  கிடைச்சது. பெரிய பழுவேட்டரையர் இன்னும் திரும்ப வரல்லன்னும் சின்னவர் அரண்மனைல இருக்கராருன்னும் தெரிஞ்சுகிட்டான். சக்கரவர்த்தி இருக்கற மாளிகைய கண்டுபிடிக்கறது ஒன்னும் பெரிய விஷயமா இல்ல. ஊரிலேயே பெரிய புலி கொடி பறக்கற மாளிகை தான் இவன் போக வேண்டிய இடம். எப்படியும் சக்கரவர்த்திய நேர்ல பார்த்து ஓலையகொடுத்திடனும்னு நெனைச்சான். மாளிகைய கண்டுபிடிச்சான்; காவலாளிகள் தடுக்கும் போது பனை சின்ன மொதிரத்த காமிச்சான். வழி  கிடைச்சது; உள்ள நுழைஞ்சான். சக்கரவர்த்தி இருக்கற இடத்த எப்படி கண்டு பிடிக்கறது? பெரிய புலவர் கூட்டம் அந்த சமயத்திலே உள்ள வந்தது. காவலாளி ஒருத்தன் இன்னொருத்தனுக்கு புலவர்கள சின்ன பழுவேட்டரையர் கிட்ட கூட்டிட்டு போக சொன்னான். இவங்க கூடவே போய்டனும்னு முடிவு பண்ணினான் வந்தியத்தேவன்.

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 26 -அபாயம் ! அபாயம் !!
புலவர்களுக்கு முன்னாலேயே கதவு வழியா உள்ளே போனான் வந்தியத்தேவன். உள்ள சிம்மாசனத்தில இருக்கறவர் சின்ன பழுவேட்டரையரா இருக்கணும்னு நெனைச்சான். காஞ்சிபுரத்தில இருந்து இளவரசர் அனுப்பினதாகவும் சக்கரவர்த்திக்கு ஓலை கொண்டு வந்திருக்கறதா சொன்னான். உடனே அந்த ஒலைய  கேட்டு வாங்கி இவன் மறுக்கறத கண்டுக்காம படிச்சாரு சின்ன பழுவேட்டரையர். புதிசா ஒன்னும் இல்லன்னு சொல்லிகிட்டாரு. சக்கரவர்த்தி கிட்ட நேர்ல ஒலைய கொடுக்கணும்னு உத்தரவு-ன்னான். இளவரசரா என் மேல சந்தேகப் பட்டு இப்படி சொன்னாருன்னு கேட்டாரு சின்ன பழுவேட்டரையர். அவரில்ல உங்க அண்ணன் தான் அப்படி சொன்னாருன்னு பிளேட்ட மாத்தி போட்டான் வந்தியத் தேவன். இத ஏன்  முன்னாடியே சொல்லலே அப்படீன்னு சொல்லிட்டு சக்கரவர்த்தி கிட்ட அனுப்பினாரு சின்னவரு. நோயில கிடந்த சுந்தர சோழ சக்கரவர்த்திய பார்த்து வந்தியத் தேவனுக்கு ரொம்ப கஷ்டமா போயிட்டது.  இளவரசர் தந்த ஓலைய கொடுத்தான்.  'இங்க உங்கள அபாயம் சுத்தி இருக்கு. அபாயம்! அபாயம்!!" அப்படீன்னு சொல்லிட்டு இருக்கும்போது புலவர்கள கூட்டிட்டு சின்ன பழுவேட்டரையர் வந்திட்டார். இவன் கடைசீய சொன்ன வர்ட்ஸ் அவர் காதில விழுந்திட்டது. டெரர் ஆய்ட்டாரு.  

No comments:

Post a Comment