Memories

Monday, January 30, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 11

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 11 - திடும் பிரவேசம் 



வானதியோட சாதகத்த பாத்த ஜோதிடர் அப்படியே திகைச்சுட்டாறு. குந்தவைய பாத்து சொன்னாரு: "ரொம்ப அதிர்ஷ்டக்கார ஜாதகம் அம்மா இது, உங்களை விட ஒரு படி மேலானது."  வானதியோட சாதகத்த பாத்து அவளுக்கு எப்போ கல்யாணம் வரும், மாப்பிள்ளை எங்க இருந்து வருவார் அப்படீன்னு கேட்டாரு குந்தவை. ஜோதிடர் பேசறதுல கில்லாடி. புரியற மாறி பேசுவாரு ஆனா ஒன்னும் தெளிவா சொல்ல மாட்டாரு.   
குந்தவை இன்னும் கேட்டா: "ஜோதிடரே கொஞ்ச நாளா வானத்தில ஒரு வால் நட்சத்திரம் தெரியுது. அதனால ராஜ்யத்துக்கு ஆபத்துன்னு ஜனங்கள் பேசிக்கறாங்களே...அத பத்தி  பாக்க முடியுமா"ஜோதிடர் பதில் சொல்லாம தப்பிக்க பாத்தாரு. குந்தவை விடுவாளா...கடைசீல சொன்னாரு: "ராஜாவுக்கு ஒரு கண்டம் இருக்கு. துர்க்கா தேவி அருளால சரியாகும்" அப்படீன்னார்.
அப்ப வாசல்ல சத்தம் கேட்டது, தடபுடல் தெரிஞ்சது. எதோ சொல்லிக்கிட்டே வந்தியத் தேவன் உள்ள வந்தான் (நினைவிருக்கா இவன் படகுல ஏறுனான் கடைசீயா) பெண்கள பாத்ததும் அப்படியே நின்னுட்டான்..பின்னாடியே ஜோதிடரோட சீடன் வந்தான். அவன் கிட்ட வந்தியத் தேவன் "உள்ளே பெண்கள் இருக்காங்கன்னு சொன்னா வந்திருக்க மாட்டேன் இல்லே" அப்படீன்னு சொல்லிட்டு வெளியே போய்ட்டான்.
பெண்கள் ரெண்டு பெரும் முடிச்சுட்டு வெளியே வந்தாங்க. ஒதுங்கி நின்ன வந்தியத் தேவன் சொன்னான் "உள்ளே பெண்கள் இருக்காங்கன்னு இந்த புத்திசாலி சொல்லலே, அதான் வந்திட்டேன், மன்னிச்சுக்கோங்க"ன்னான். அதுக்கு பதில் சொல்லாம அவன பாத்து ஒரு ஸ்மைல் பண்ணீட்டு போய்ட்டாங்க குந்தவை.




Sunday, January 29, 2012

X கதிர்கள் - வல்லிய கதிர் மெல்லிய வீச்சு

 1895- ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஜெர்மானிய விஞ்சானி வில்ஹெல்ம் ரொண்ட்ஜென், எலக்ட்ரான் கதிர் குழாய் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். காற்றுப் புக முடியா வெற்றுக் குழாயில் எலக்ட்ரான் துகள் உற்பத்தி செய்து ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது.  அப்போது இந்த எலக்ட்ரான் குழாயில் இருந்து வினோத கதிர்க் கசிவு ஏற்படுவது புலப்பட்டது இவருக்கு. அறையில் இருந்த திரையில் ஒரு ஒளி வட்டம் தோன்றியிருந்தது.
தன் மனைவி "ஆனா"வின் கையை கதிர்க் கசிவின் வழியில் வைத்து பின்னால் ஒரு  புகைப்படத் தகடை வைத்து பார்த்தால் ஆனாவின் கை எலும்புகளையும் அவர் கையில் அணிந்து இருந்த கல்யாண மோதிரத்தையும் காட்டியது. "என்னுடைய சாவைப் பார்த்தேன்" என்று சொன்னார் "ஆனா" புகைப் படத்தை பார்த்த பின்பு. இனம் தெரியாத இந்த கதிர்களை  X கதிர்கள் என்று அழைத்தார் வில்ஹெல்ம். உடலை அறுக்காமல் உடலின் உள்ளே பார்க்கக் கூடிய சாத்தியம் தோன்றியது.
  
- கதிர் வீச்சு தொடரும் 
(நன்றி: சித்தார்த்த முகர்ஜி )  


Saturday, January 28, 2012

சில தருணங்கள் மறக்க முடியாதவை


Tuesday, January 24, 2012

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 12

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 12 - நந்தினி  





போன அத்தியாயத்தில படகில விட்ட வந்தியத்தேவன் குடந்தை ஜோசியரப் பாக்கறதுக்கு எப்படி வந்தான்? என்ன நடந்ததுன்னா...ன்னு சொல்லி ப்ளாஷ்-பேக் உடுவோமா?

படகில கடைசீய வந்து ஏறினான் ஆழ்வார்க்கடியான். அவன் வாய கிளறினான் வந்தியத்தேவன். ஆழ்வார்க்கடியான் எப்பேர்ப்பட்ட கில்லாடி...அவன் அத அப்படியே திருப்பி உட்டான் வந்தியத்தேவன் மேல...வந்தியத்தேவன் லேசுப்பட்டவனா? அவன் விடாக்கண்டன்னா இவன் கொடாக்கண்டன். வந்தியத்தேவன் பத்தி ஒன்னும் கண்டு பிடிக்க முடியல இவனால. ஆனா வந்தியத்தேவன் மனசோ ரொம்ப குழம்பி போய் கிடந்தது. அது தீர ஆழ்வார்க்கடியான் ஒன்னும் தீர்மானமா சொல்லல. ஆனா ஒண்ணு மட்டும் சொன்னான்: குடந்தை சோதிடர கேட்டு பாருன்னு சொல்லிட்டான். சேரி அவரப் பாத்தா குழப்பம் தீர்ந்தாலும் தீரலாம்னு அங்க போக நினைச்சான் வந்தியத் தேவன். அப்படித்தான் அங்க வந்து சேந்தான்.


சரி, தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லேன்னு நீங்க நினைக்கலாம். படகில வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியான கிண்டி கிடைச்சது தான் நந்தினி பத்தின கதை. நந்தினி தான் வந்தியத்தேவனுக்கு தந்த மோதிரத்த கொடுத்தவ.  பெரிய பளுவேட்டரயரோட சம்சாரம். அவ ஆழ்வார்க்கடியானோட தங்கை. ஆழ்வார்க்கடியான் சின்ன பையனா இருந்த போது அவனோட அப்பா நதிக்கரையில அனாதையா கிடந்த ஒரு பெண் குழந்தைய எடுத்து நந்தினின்னு பேரு வச்சு வளத்தாரு. அவரு இறக்கும்போது நந்தினிய ஆழ்வார்க்கடியானோட பொறுப்பில  விட்டுட்டு இறந்திடாறு. இவன் பக்தீயில ரொம்ப ஊறிப்போய் இருந்தாலும் தங்கைய நல்லா கவனிசுக்கிட்டான்.  ஒரு வாட்டி திருவேங்கடத்துக்கு யாத்திரை போனான் ஆழ்வார்க்கடியான். அபப ஒரு விபரீதம் நடந்தது. சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில ஒரு பெரிய போர் நடந்தது. [ நல்லா நியாபகம் வச்சுக்கோங்க..இது திருப்பி திருப்பி வரும், ஒவ்வொருத்தர் பார்வையில.. ] அது நடந்த இடத்துக்கு பக்கத்தில தான் இவன் வீடு இருந்தது. பாண்டியர்களோட படை நிர்மூலமா ஆயிடுச்சு. ரத்த காயத்தோட அவங்க ராஜா வீரபாண்டியன தூக்கி கொண்டு வந்து நந்தினி வீட்டில போட்டாங்க கொஞ்ச வீரர்கள். அவனோட நிலமைய பாத்து இறக்கப் பட்டு பணிவிடை செஞ்சா இவ. ஆனா இத கண்டு பிடிச்சு சோழ வீரர்கள் அங்க நுழைஞ்சு வீர பாண்டியன கொன்னுட்டாங்க, நந்தினிய சிறை பிடிச்சுட்டு போயிட்டாரு பழுவேட்டரையர். மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்தது இது; அதில இருந்து அவள எப்படியாவது அங்க இருந்து மீட்கனும்னு, காப்பாத்தனும்னு டிரை பண்ணிக்கிட்டு இருக்கான் திருமலை என்கிற ஆழ்வார்க்கடியான்.

Sunday, January 22, 2012

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை...!