Memories

Monday, October 3, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 1, 2

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 1  - ஆடித் திருநாள் 

சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி நடக்கற கதை இது. வந்தியத் தேவன் தான் நம்ம ஹீரோ. குதிரைய்ல ஏறி நம்ம ஆளு சோழ நாட்டுக்குள்ள வர்றான், அவன் கிட்டே ரெண்டு ஓலை இருந்தது - ஒண்ணு சோழ மகாராஜாவுக்கு இன்னொன்னு குந்தவை பிராடியாருக்கு (நாட்டு இளவரசி, கரிகாலனோட அக்கா) . கொடுத்தது, வந்தியதேவனுடைய எஜமான், நாட்டு இளவரசன் ஆதித்த கரிகாலன். ஓலை இருக்கற விஷயத்த பத்தி யாரு கிட்டயும் மூச்சு விட கூடாதுனும் சொல்லி இருந்தார். ராத்திரிக்கு கடம்பூர் சம்புவரையர் (நண்பன் கந்தமாறனோட அப்பா, சோழ மகாராஜவோட ஆதிக்கத்துக்குட்பட்ட குறுநில மன்னர்) மாளிகைலே தங்கிட்டு காலைலே பிரயாணத்தை தொடரலாம்னு நெனைச்சான். 

அத்தியாயம் 2 - ஆழ்வார்க் கடியான் நம்பி 
அப்படிப் போயடீருந்த வந்தியத் தேவன் மூணு பேரு வாக்குவாதம் பண்றத பாத்தான். அதிலே ஒருத்தன் முன்குடுமி வச்ச வீர வைஷ்ணவன் - ஆழ்வார்கடியான் நம்பி. சிவன் பெருசா விஷ்ணு பெருசான்னு தான் வாக்குவாதம். வந்திய தேவன் உள்ளே புகுந்து தடுத்து கூட்டத்த களச்சு விட்டான். அப்ப முரசு சத்தம் கேட்டுச்சு. "பெரிய பழுவேட்டரையர் வர்றார்"ன்னு கட்டியம் கூறுதல் கேட்டுச்சி. கைலே வேல் தாங்கி வீரர் கூடம் வந்துச்சு, அதுக்கு பின்னாடி பெரிய யானை மேல ஆஜானுபாகுவா பெரியவர் ஒருத்தர் வந்திட்டு இருந்தார். அவர் தான் பெரிய பழுவேட்டரையர் - சோழ நாட்டுக்கு பைனான்சியர், டாக்ஸ் கலக்ட் பண்ணறவர், எல்லா பொன் பொருளுக்கும், விளையிற பயிருக்கும் இன்-சார்ஜ். சோழ ராஜாக்கு பாடி-கார்டும் இவர் தான். சோழ ராஜா இவர் மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தார். அதனாலே பளுவேட்டரயருக்கு தனி கொடி, சின்னம் வைக்க அனுமதி கொடுத்திருந்தார். இவருக்கு பின்னாடி மூடின பல்லக்கு போயிட்டு இருந்தது. கொஞ்சம் தள்ளி மறைவா இருந்து ஆழ்வார்கடியான் நம்பி இந்த பல்லக்கையே உத்து பாத்திட்டு இருக்கறத நம்ம ஹீரோ கவனிச்சான். 

(தொடரும்) 
     





No comments:

Post a Comment