Memories

Monday, December 26, 2011

சமீபத்தில் பார்த்த ஆங்கிலப் படம் - மெமண்டோ (Memento)


கஜினி படத்துக்கு ஐடியா இந்த படத்தில இருந்து தான் சுட்டாங்க. நம்ம கதாநாயகனுக்கு  15 நிமிஷம் மட்டும் தான் நியாபகம் இருக்கும். உடம்பு முழுக்க பச்சை குத்தி இருக்கான், அவனுக்கு மறக்க கூடாத விஷயங்கள. பாக்கற எல்லாரையும் போட்டோ எடுத்து வச்சுக்ரான். போட்டோ பின்னால சில குறிப்புகள் எழுதியும் வச்சி இருக்கான், நினைவு படுத்திகரதுக்காக.
படமும்  15 நிமிஷம் கொண்ட பகுதிகளா நகருது. கதைய வித்தியாசமா சொல்றாங்க. கடைசி நடக்கறது தான் முதல்ல வருது (அதாவது கிளைமாக்ஸ் முதல்ல). அதுக்கு முன்னாடி நடந்தது அப்பறம் வருது. இப்படி சொல்லலாம்: கிளைமாக்ஸ்-ல வில்லன் சாகறான். அப்பறம் வர்ற காட்சியில அவன் ஹீரோ கிட்ட வாக்குவாதம் செய்யறான். அப்பறம் வர்ற காட்சியில அவன் ஹீரோவ பாக்கறான் - இப்படி. நேரடியா காட்றதா இருந்தா முதல்ல ஹீரோ வில்லன் பாத்துக்குவாங்க, அப்பறமா பேசுவாங்க அப்பறம் வில்லன் அடி வாங்குவான். எப்படித் தான் இப்படியெல்லாம் (ரூம் போட்டு ?!) யோசிக்கறாங்களோ ஹாலிவூட்லே !

கதைல இன்னொரு பகுதி கருப்பு வெள்ளை காட்சிகளா வருது. இந்த கருப்பு வெள்ளை பகுதியில கதாநாயகன் யார் கிட்டயோ போன்லே பேசறான். தன் வாழ்கையில அவனுக்கு நியாபகம் இருக்கற நிகழ்ச்சி பத்தி பேசறான். பின்னோக்கி போற காட்சிகளும் முன்னோக்கி போற கருப்பு  வெள்ளை காட்சிகளும் கடைசியிலே சந்திக்குது, படமும் முடியுது. டைரக்டர் எப்படியம் நம்மள ரெண்டு வாட்டி பாக்க வச்சிடுவார், அப்பத்தான் புரியும் நமக்கு.

முன்னோக்கி பின்னோக்கி அப்படீன்னு சொல்லாம கதைய சாதாரணமா சொல்றேன் இங்கே. ஹீரோ கிட்ட ஒரு போலீஸ் காரன் போன்லே பேசறான். ஹீரோ அவன் வாழ்க்கையிலே நடந்த ஒரு நிகழ்ச்சிய சொல்லறான். ஹீரோ அப்ப கார் இன்சூரன்ஸ் கம்பனிலே வேல பாக்கறான். ஒரு கார் ஆக்சீடன்ட்ல ஒருத்தனுக்கு நியாபகம் மறதி வந்திடுச்சி (15 நிமிஷத்துக்கு அப்பறம் எல்லாமே மறந்திரும்), இத சரி பண்றதுக்கு மருந்து செலவ இன்சூரன்ஸ் கம்பெனி எதுக்கலாமா வேண்டாமா-ன்னு முடிவு பண்றதுக்கு நம்ம ஹீரோவ அனுப்புது. அவனும் பாத்திட்டு உடலுக்கு கோளாறுன்னா கம்பனி ஏத்துக்கும் இவருக்கு மனசு கோளாறு அதனால செலவ எதுக்க முடியாதுன்னு சொல்லிடறான். செலவுகள் பொறுக்க முடியாமலும் இவனுடைய மறதி பிரச்னை தாங்க முடியாம அவ தற்கொலை செஞ்சுக்கரா.

அந்த போலீஸ் காரன் ஹீரோவ நேரடிய வந்து பாக்கறான். ஹீரோ அவன் மனைவிய கொலை செஞ்ச ஒருத்தன தேடிட்டு இருக்கான், அவன் பேரு ஜான் அப்படீங்கறது மட்டும் தான் ஹீரோக்கு தெரியும், மற்றபடி எதுவும் தெரியாது. போலீஸ் காரன் வந்து ஜான் யாருங்கரதையும், அவன் இருக்கற இடத்தயும் கண்டு பிடிசுட்டதாவும் சொல்லறான். சொல்லீட்டு ஹீரோவ அனுப்பி வைக்கறான். அங்க போனா ஜான் இவன தெரிஞ்ச மாதிரி பேசறான். ஹீரோவுக்கு ஆத்திரம் வருது, அவன அடிச்சி சாகடிக்கறான். அடிக்கும் போது அந்த ஜான் தன் காரையும், அதில இருக்கற பணத்தையும் எடுத்துக்க சொல்லிட்டு அவன விட்டுற சொல்லறான். இவனோட கோட் சூட் எல்லாம் ஹீரோ எட்துகிட்டு அவன நல்லா அடிச்சிடறான்.  அடி நல்லா பட்டு அவன் சாகர அளவுக்கு போயிடறான். சாகும்போது ஹீரோ போலீஸ் காரன்கிட்ட சொன்ன கதைல வர்ற ஆளு பேர முனங்கறான். இறந்தவனோட டிரெஸ்ஸ போட்டுக்கறான். அவன் கார எடுத்துக்கறான். நம்ம ஹீரோ-க்கு சந்தேகம் வருது, அந்த கதைய நல்லா பழகுரவங்களுக்கு மட்டும் தான் சொல்வான் ஹீரோ. அப்படீன்னா இவன் ஜான் இல்ல.

இந்த சமயத்திலே போலீஸ் வர்றான், அவன் மேல ஹீரோக்கு ரொம்ப சந்தேகம் வருது. அவன் சொல்லற பொய்கள நம்பக் கூடாதுன்னு அவன் போட்டோ பின்னால எழுதி வைக்கறான். அவனோட கார் பிளேட் நம்பரையும் எழுதி வைக்கறான்.  ஒரு பச்சை குத்தற இடத்துக்குப் பொய் அந்த நம்பெர பச்சயா குத்திக்கறான். இவன் போட்டிருக்கற கோட் பாக்கட்லே  ஒரு அட்ரசும், நம்பரும்  இருக்கு. அங்க போறான், ஒரு லேடியா மீட் பண்றான். காரையும் கோட்டையும் பாத்து அவளுக்கு சந்தேகம் வருது, அவ இறந்து போன ஆளோட கேர்ள்-பிரன்ட். அவ திறமையா ஒரு விஷயத்த கண்டு பிடிசிக்கறா.  இவன யாரோ பயன் படுத்திருக்காங்க. அவ இவன் எழுதி வச்சு இருக்கற நம்பர் ப்ளேட் வச்சு அந்த போலீஸ் காரன் போட்டோ பேரு கண்டு பிடிச்சு கொடுக்கறா. அதிலே அவன் பேரு ஜான் அப்படீன்னு வருது. அவன கூட்டிட்டு போறதுக்கு ஒரு இடத்தையும் சொல்லறா. அந்த இடம் அவளோட பாய்-பிரான்ட் இறந்த இடம்.

நம்ம ஹீரோ இந்த போலீஸ் காரன அந்த இடத்துக்கு கூட்டிட்டுப் போய் சாகடிக்கறான்.  அதோட கதை முடியுது.  படம் எப்படி தொடங்குதுன்னா போலீஸ் காரன் சாகரதில தொடங்குது. ஹீரோ போன்-லே பேசறான். இறந்து போன போலீஸ் காரன் ஹீரோவ தேடி வர்றான்.  ஒரு பொண்ணு இவன் கிட்ட போட்டோ பேரு எழுதின பேப்பர கொடுக்கறா, அதுலே போலீஸ் காரன் போட்டோ இருக்கு அவன் பேரு ஜான் அப்படீன்னு இருக்கு. அவ யாருங்கறது ஹீரோக்கு தெரியல. அதே பொண்ணு கிட்ட ஹீரோ பேசிட்டு இருக்கான், அவன் மனைவிய பத்தி சொல்லிட்டு இருக்கான். அவல கொன்னவன் பேரு ஜான் அப்படீன்னு சொல்லறான். கோட் பாக்கட்ல இருந்து ஒரு பொண்ணு பேரு, அட்ரஸ் எடுக்கறான். அந்த பொண்ண போய் பாக்கறான் (இவன் மனைவி பத்தி சொல்லிட்டு இருந்த அதே பொண்ணு). ஹீரோ ஒரு  பாழடஞ்ச கட்டடத்தில இருந்து வெளிய வர்றான், போலீஸ் காரன் அங்க வர்றான், அவன் மேல சந்தேக பட்டு அவன் கார் நம்பர் ப்ளேட் நம்பர எழுதிக்கறான். பச்சை குத்தற இடத்துக்கு போறான். பாழடஞ்ச இடத்தில ஒருத்தன அடிச்சு போடறான்.

No comments:

Post a Comment