Memories

Thursday, November 24, 2011

கான்சர் எப்படி தோன்றுகிறது...

இதை தெரிந்து கொள்ள மனித உடலின் அடிப்படை கட்டுமானத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். மனித உடம்பு பல கோடிக்கணக்கான செல்களால் கட்டப் பட்டுள்ளது. வீடு ஆயிரக் கணக்கான செங்கலால் கட்டப் பட்டுள்ளதைப் போல. செல் என்பது உடலின் அடிப்படை மூலக்கூறு. செல்கள் பெரிதாவதில்லை, மனித உடல் வளரும்போது கூட. பெரிய வீடு கட்ட வேண்டுமானால் நாம் செங்கல்களைப் பெரிதாக்குவதில்லை, ஆனால் செங்கல்களின் எண்ணிக்கையை அதிகமாக்குவோம். அது போல உடல் வளரும்போது செல்கள் எண்ணிக்கையில் அதிகமாகுகின்றன. ஒவ்வொரு செல்லும் அதை போல் இன்னொரு செல்லை உருவாகுகிறது. ஒன்று இரண்டாகும், இரண்டு நாலாகும், நாலு எட்டாகும் இது போல பெருகி கொண்டே இருக்கும். இப்படி ஒரு செல் இன்னொரு செல்லை உருவாகுவதற்கு செல்லுடைய அடிப்படை கட்டுமானத்தை (செல்லுடைய மூளை-ன்னு நினைத்துக் கொள்ளுங்கள்) பிரதி எடுக்கிறது. அப்படி பிரதி எடுக்கும் போது வரும் குறைபாடுகள் தான் பின்னர் கான்சராக உருவாகிறது.  


நன்றி: சித்தார்த்தா முகர்ஜி-யின் நோய்களின் அரசன் கான்சர் 



No comments:

Post a Comment