Memories

Monday, November 14, 2011

மன உறுதி

இந்த வார்த்தையை படித்திருக்கிறேன், கேள்வி பட்டு இருக்கிறேன் பெரிய மன்னர்களிடத்தில் இது நிறைய இருந்தது என்று. இன்றைய காலகட்டத்தில் கேட்டதில்லை. 

மாமா முதல் கீமோ ஏற்றி விட்டு வந்து இருக்கிறார்கள். மேல வீடு சசிகலா சித்தி அப்ப தான் செல்வம் சித்தப்பா இறந்த சோகத்தில் இருந்திருக்கிறார்கள். ஊரை விட்டு போய்டலாம்னு  இருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் பிரமு மாமா இப்படி சொன்னார்களாம்: "உனக்கு யாரும் இல்லை இங்கன்னோ, ஊரை விட்டு போலாம்னோ நெனைக்காதே சசிகலா. அண்ணன் நான் இருக்கேன் அந்த பிள்ளைகளுக்கு"

கீமோ ஏறும் போது கூட இந்த மன உறுதி இருக்குமா, நான் பாத்துக்கறேன் குழந்தைகளைன்னு அந்த சமயத்துல கூட சொல்லறதுக்கு யாருக்கு வரும் அந்த உறுதி. 




No comments:

Post a Comment