Memories

Monday, December 12, 2011

மயக்க மருந்து




   1846 அக்டோபர் 16  - அமெரிக்காவில் மாசசுசட்ஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் எட்வர்ட் அப்பாட் என்ற நோயாளிக்கு கழுத்தில் இருந்த கட்டியை புதுமையான முறையில் நீக்குவதாக கூறினார் மருத்துவர் வில்லியம் மார்டன். மருத்துவர்கள் பலரும், வேறு பலரும் கூடி பார்த்துக் கொண்டிருக்கையில், ஈத்தர் என்ற பொருள் நிரம்பிய கண்ணாடி குப்பியை கொடுத்து நன்கு மூச்சு இழுக்க சொன்னார் வில்லியம். சில முறை அப்படி செய்திருப்பார் எட்வர்ட், தன்னை மறந்த மயக்க நிலையை அடைந்தார் எட்வர்ட். சில சீக்கிர அசைவுகளில் கட்டியை நீக்கி தையல் போட்டார்  மருத்துவர்.
   சிகிச்சை முடிந்த பிறகு "வலி எதுவும் தெரியவில்லை, ஆனால் அறுவை சிகிச்சை நடக்கிறது என்பது தெரிந்து இருந்தது எனக்கு" என்று கூறினார் எட்வர்ட். மருத்துவ உலகில் அப்போதைக்கு அது ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பு. இதற்கு அப்பறம் பல மணி நேரம் நீடிக்கக் கூடிய அறுவை சிகிச்சை செய்ய முடிந்தது, பல்லாயிரக் கணக்கான உயிர்களை காப்பாற்ற முடிந்தது.
    ஆனாலும் கத்தி பட்ட இடத்தில் நோய் தோற்று ஏற்படுவது சகஜமாக இருந்தது. செப்டிக் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து உருவாக்கும் சூழ்நிலை இருந்தது.



No comments:

Post a Comment