Memories

Tuesday, December 20, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 9, 10







பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு  
பெரிய குழப்பத்தோடையும் கலக்கத்தோடையும் வந்தியத்தேவன் படுத்திருந்தான் எப்ப தூங்கினான்னு தெரியல. யாரோ தட்டி எழுப்பினாங்க. அது கந்தமாறன் தான். விடிஞ்சு ரொம்ப நேரம் ஆயிரிச்சின்னு சொன்னான் அவன். வந்தியத்தேவன் கிளம்பனும்னு சொன்னான், கந்தமாறன் விடல. ஏதேதோ பொய் காரணம் சொல்லிட்டு கிளம்பிட்டான். ரெண்டு பெரும் வெட்டிக் கதை பேசிட்டே வந்தாங்க. அப்போ கந்தமாறன் முந்தின நாள் நடந்த விஷயங்கள்ல இருந்து நெறைய பேசினான்: போர் வரும்னான், ஈழத்தில நக்கர சண்டைல தப்புகள் இருக்கறதா சொன்னான்.  கொள்ளிடக் கரைக்கு வந்து சேந்தாங்க ரெண்டு பேரும். அங்க படகில வந்தியத் தேவன ஏத்தி விட்டுட்டு அந்தக் கரைல அவனுக்கு குதிரை ஏற்பாடு செஞ்சு கொடுக்க வேலையாள் ஒருத்தனையும் அனுப்பினான் கந்தமாறன். படகு கிளம்பற நேரத்திலே படக நிறுத்த சொல்லி கூவிட்டே வந்து கடைசி நேரத்துல ஏறினான் ஒருத்தன், அது ஆழ்வார்க்கடியான்.   



அத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்  
அரசிளங் குமரிகள் குந்தவை நாச்சியார் & வானதி ரெண்டு பேரும் குடந்தை சோதிடர பாக்க வர்றாங்க. குந்தவை நாச்சியார் சோழ சக்கரவர்த்தியோட மகள். அவள இளைய பிராட்டி அப்படீன்னும் மக்கள் அன்பா கூப்பிடுவாங்க. இவளுக்கு நேர அடுத்த தம்பி அருண்மொழிவர்மன், அவன் மேல ரொம்ப பாசம் அக்காக்கு.
வானதி கொடும்பாளூர் குறுநில மன்னரோட மகள், அருண்மொழி மேல அதீத  காதல் இவளுக்கு. ரொம்ப அன்பும் அடக்கமும் உள்ளவ. கொஞ்ச நாளா விளையாட்டும் பேச்சும் இல்லாம சோர்ந்து பொய் இருக்கறா. அதுக்கு காரணம் என்னான்னு தெரிஞ்சுக்க ரெண்டு பேரும் குடந்தை சோதிடர் முன்னால இருக்கறாங்க, சோதிடர் வானதியோட சாதகத்த பாக்கறாரு. 



No comments:

Post a Comment